Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நாவலனை(கெலனை) சமரிலிருந்து வெளியேற்றுவதற்கான சமரின் விளக்கம்

  • PDF

சமர் சஞ்சிகை மக்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. சமர் தான் சொன்ன கருத்துக்களை நடைமுறையில் தனது சொந்த வாழ்கையில் நடத்தப் போராடி வருகிறது. குறிப்பாக எம் மண்ணில் இன்று காணப்படும் முரண்பாட்டின் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைகளை எதிர்ப்பதில் சமர் முன்னிலை வகிக்கின்றது.

இந்த வகையில் நாவலன் ஆகிய(கெலன்) நீர் சமர் எடுத்துக்கொண்ட வேலைமுறைக்கு மாறாக சமூத்தில் உள்ள முரண்பாட்டை தீர்த்துக்கொள்ளும் முறையில் ஒரு கொலையை செய்துள்ளீர், இக்கொலையை தொடர்ந்து சமரிலிருந்து உம்மை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதகவுள்ளது. நீர் இது தொடர்பாக சமரின் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க நீர் உட்பட்ட கூட்டத்தை கூட்டக் கோரினீர். அதுவும் நிராகரிக்கப்படுகின்றது. இவைகள் தொடர்பான விளக்கம் கீழ் உள்ளது.

உமக்கும் உமது மனைவிக்கும் இடையில் உருவான குழந்தையை நீர் உமது பொருளாதாரப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனைக்காக கொன்றுள்ளீர். குறிப்பிட்ட இப்பிரச்சனை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள பிரதான பிரச்சனை. இதை தீர்த்துக்கொள்ளும் வகையில் சமர் செயற்பட்டு வருகிறது. இக்குறிப்பிட்ட பிரச்சனை மூன்றாம் உலக நாடுகளில் 90 வீதமானோருக்கும், மேற்கத்தைய நாடுகளில் 60 வீதத்திற்க்கும் மேற்பட்டோருக்கும் உள்ள பிரச்சனை. இப்பிரச்சனைக்கு தீர்வாக குழந்தையை கொல்வதென்பது அடிப்படையில் புலிகள் தனக்கு எதிரானவர்களை கொல்வதற்கு ஒத்ததே. புலிகள் எதற்காக கொல்லுகிறார்கள் எனப் பார்ப்போமாயின், தனது வீடு வசதியான பொருளாதாரத்தை காப்பாற்றவே. இதே முடிவை நீரும் உமது வாழ்க்கையில் இன்று உள்ள நிலையைப பேண உமது குழந்தையை கொன்றுள்ளீர். உமது இன்றைய நிலையைக் காப்பாற்ற போராடுவது மட்டுமே சமர் எடுத்துக்கொண்ட முடிவு. இதற்கப்பால் கொலை செய்வதல்ல. இது தொடர்பாக விவாதத்தை நடத்திய பொழுது விதண்டாவாதமாகவும் சம்மந்தா சம்மந்தமில்லாத விடயங்களைக் கதைத்ததுடன் மட்டுமின்றி விவாதத்தின் ஊடாக ஒரு முடிவை வந்தடைய தயார் நிலையில் இருக்கவில்லை. இவ் விவாதம் தொடர்பாக உம்மை சந்தித்துக் கதைக்க வேண்டும் என தொலைபேசியில் கதைத்த பொழுது, நீர் கேட்டீர் சிவப்பு பெயின்டா அடித்தனி என்று இது எதைக்காட்டுகிறது. உமது மனைவியுடன் இரு முறை கதைக்க முயன்ற பொழுது நீர் சந்திக்க விடாமல் செய்ததுடன் நீ குழப்பிப்போடுவாய் என சொல்லி தட்டிக்கழித்தீர். நெருக்கடி முற்றிய பொழுது சந்திக்க ஏற்பாடு செய்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நீர் கூட்ட கோரிய சமர் குழுவில் உம்மை வைத்து விவாதிக்க முடியாது. போராட்டத்தில் துரோகம் செய்தோர், காட்டிக்கொடுத்தோர், கொலை செய்தோர்----- இவை போன்றோர் வந்து எம்மையும் கூட்டிவைத்து விவாதித்து பெரும்பான்மைப்படி செய்வோம் எனக் கோரமுடியாது. ஏனெனில் இந் நடவடிக்கை என்பது குறித்த சம்பவத்தை ஒரு கருத்து முரண்பாடக அங்கீகரித்து குறித்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும். உமது குழந்தையின் கொலை ஒரு கருத்து முரண்பாடு அல்ல. இது ஒரு கொலை. இக் கொலையை கருத்து முரண்பாடாகப் பார்த்தால் மட்டுமே விவாதம் என்ற வகையில் விவாதிக்க முடியும். இது நாம் எடுத்துக்கொண்ட குறித்த பணிக்கு எதிரான அப்பட்டமான கொலை. குறித்த கொலையை செய்யும் முன் நாம் உம்முடன் விவாதித்தோம். குறித்த கொலையை செய்வதா, வேண்டாமா என்று(அப்படி விவாதிப்பதே மோசமானது) சமரரைக் கூட்டி பெரும்பான்மைப்படி செய்திருக்கலாம் அல்லவா? நாம் தனித்தனியாக கதைத்தபோது செய்ய வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலிறுத்தினோம்.

உலகில் உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் சமூகத்தில் உள்ள முரண்பாட்டின் தொடர்ச்சியே. இவை அனைத்தும் வர்க்கத்தன்மைக்க்கு உட்பட்டதே. இம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வர்க்கப் போராட்டம் மட்டுமே தீர்வாகப்படலாமே ஒழிய, ஒரு கொலையை செய்வதன் ஊடாக அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதுடன் நீர் குறித்த முரண்பாட்டை வர்க்கப் போராட்டத்திற்கூடாக தீர்க்காமல் இடைப்பட்ட ஒரு தீர்வாக ஒரு கொலையை செய்து சமரசவாதியாகவும், சாதாரண மனிதனை விட மோசமான ஒரு நிலைக்கு சென்றதோடு சமரின் குறித்த பணியை நிராகரித்தமையாலும், சமரிலிருந்து உங்களை வெளியேற்றுகிறோம்.

ஆசிரியர் குழு

குறிப்பு: இது தொடர்பாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் சமர் வரவேற்கின்றது.