Language Selection

இன்றுள்ள நிலையில் புலிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து வெறுமனே அம்பலப்படுத்தல்களை மட்டும் செய்தால் போதாது, புலியினை போராட்டக்களத்தில் இருந்து அகற்றி புதிய தலைமையை மக்கள் முன் கொண்டுவர வேண்டுமாயின், முதலில் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கின்ற தேசபக்த சக்திகளிடையே சரியான விவாதங்களிற்கு ஊடாக பொது அரசியல் வழியொன்று கண்டுபிடிக்கப்படல் வேண்டும். இது பிரதானமானது. நான் இன்று பல போக்குகளை காண்கிறேன்.

(1) வெறுமனே புலி எதிர்ப்பு

(2) பிழையான படுபிற்போக்கான அரசியல் கருத்துக்கள்

(3) சரியானதை தேடிக்கொண்டு இருப்பவர்கள் (இவர்களிடமும் பல தவறான கருத்துக்களும் மாறுபட்ட பார்வைகளும்)

நான் நினைக்கிறேன், புலிகளை அம்பலப்படுத்தல் மட்டும் எமது தேச விடுதலையை பெற்றுத்தராது. ஏனென்றால் ஸ்ரீலங்கா இனவாத அரசின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஆயுத ரீதியில் புலிகள் மட்டுமே முகம் கொடுப்பதால், இந்த அம்பலப்படுத்தப்படும் உண்மைகள் மக்களிற்கு புரிந்தாலும் புலிகளின் போராட்டத்தலைமையை மக்கள் நிராகரிக்க முடியாத நிலையின்று நாட்டில்.

 

எனவே எம்முன்னுள்ள உடனடிப்பணி ஒருவர் கருத்துக்கு, மற்றவர்கள் மதிப்பளித்து ஊன்றிக்கவனித்து பலத்த விவாதங்கள் ஊடாக முதலில் சரியான அரசியல் மார்க்கம் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். அதற்கு முதலில் தோழர்களே மற்றவர்களின் கருத்துகளுக்கு உதாசீனம் செய்யாது, சொற்பதங்களை கேலியாக குறிப்பிடாமலும், அவை பற்றிய விவாதங்களை தேச விடுதலைப் போராட்டத்தில் உண்மையான விசுவாசம் இருந்தால் நடத்துவது இன்று அவசியமானது.

 

அதன் பின் பொதுவான உடன்பாடு உடையவர்கள் தத்தமது அரசியல் கருத்துக்களின் கீழ் அமைப்பாக திரண்டு எதிர்காலத்தில் உண்மையான மக்கள் விடுதலை இயக்கம் ஒன்றிற்காக தொடர்ந்தும் விவாதிப்பதுடன், தனித்தனியாக, நட்புரீதியாக ஆயுதமேந்தி புலி ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக போராடலாம்.

 

இன்றைய போராட்டத்தில் (தமிழீழ தேசிய விடுதலைப் போரில்) நீங்களும், நானும் விரும்பியோ விரும்பாமலோ புலி தான் தமிழ் மக்களின் தேசிய இனவடிப்படையை கட்டிக் காக்கும் போரில் ஈடுபட்டுள்ளது. புலி இன்னமும் அரசுடன் சமரசத்துக்கு போகலாம் என்ற நிலையுள்ள போதும் இல்லை என்றுமில்லை. தமிழ் பிரதேசம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை இன்னமும் கைவிடக்கூடிய நிலையில் இருப்பதாகவில்லை. புலிகள் மக்களில் தங்கியில்லாமல், துப்பாக்கியிலும் புதிய புதிய ஆயுதங்களின் வருகையிலும் பழிக்குப்பழி, சிங்களப் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு, சில தலைவர்களை கொன்றால் பிரச்சனையை வெல்ல முடியும் என்ற பிற்போக்கு அரசியலை கொண்டுள்ளவரை, தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு தலைமை தாங்கும் திராணியில்லை. ஆனால் தமிழ் மக்களின் தேசியத்தன்மை, (1) பாரம்பரிய பிரதேசம் பறிப்பதற்கு எதிராகவும் (2) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு பதில் பம்மாத்து மாகாணசபைக்கு எதிராகவும் இப்படிப்பல, குறிப்பாக தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு எதிராகவும் ஒரு தற்காப்பு யுத்தத்தை மட்டும் பலமாக இன்று நடத்தி கொண்டிருக்க முடியும்.

 

மேலும் நீங்கள் இதழில் எழுதியது, சி.ஐ.ஏ புலிகளிற்கு உதவுகின்றது. புலிகள் அமெரிக்காவின் (சி.ஐ.ஏ) யின் கைக்கூலி.

 

தமிழீழப்போராட்டத்தில் தோன்றிய அனைத்து இயக்கங்களுமே குட்டி பூர்ஷ்வா இயக்கங்கள் தான் என்பது எமது கருத்து. அதில் சில இயக்கங்கள் பாட்டாளி மக்களின் விடுதலை தான் உண்மையான விடுதலையை முழுமக்களுக்கும் பெற்றுத்தரும் என்றுணர்ந்து பாட்டாளி வர்க்கக் கட்சியான கம்யுனிஸ்ட் கட்சியை கட்டும் நோக்கில் வேலை செய்தாலும், அவற்றிடையே சரியான தத்துவார்த்த அறிவின்மை, வேலைமுறை இன்மை காரணமாக அவையும் குட்டிபூர்ஷ்வா இயக்கத்திற்கு மேல் வளர்ந்து பாட்டாளி வர்க்க கட்சியாக முடியாமல் சிதைந்து போயின. சில இந்தியக் கைக்கூலியாயின. புலி முதலில் குட்டி பூர்ஷ்வா இயக்கமாகத் தோன்றினாலும் பின் அது பூர்ஷ்வா இயக்கமாக வளர்ந்து வந்தது. (தேசிய முதலாளியா, தமிழ் தரகு முதலாளியா என்பது விவாதத்துக்குரியது. அது தமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் தன் தலைமையை வலிந்து ஆயுதத்தால் திணித்துக்கொண்டது. பூர்ஷ்வா இயக்கம் மக்கள் அரசியல் மயப்படுவதை என்றுமே அங்கீகரித்ததில்லை. புலியும் அதற்கு விதிவிலக்கில்லை. எனவே அது தமிழ் தேசிய எழுச்சியடைந்த இளைஞர்களைக் கொண்டு ஒரு இராணுவத்தை கட்டிக் கொண்டு தமிழீழத்தின் ஆட்சியதிகாரத்தை தன் கையில் எடுப்பதற்காக போராடிக்கொண்டு வருகிறது. இன்று நடக்கின்ற பிரதான தமிழீழம் என்கின்ற போரில் புலிகள் (பூர்ஷ்வா) தமிழ் மக்கள் சார்பில் போராடுகின்ற ஒரு அமைப்பு என்பதனை யாரும் நிராகரிக்க முடியாது.

 

அப்படி நிராகரிப்பின், தமிழ் மக்கள் மத்தியில் பல வர்க்கங்கள் உண்டு என்பதனை நிராகரிப்பதாகவே அமையும். எனவே இன்று நடக்கும் இந்த விடுதலை யுத்தத்தில் புலிகள் போராட்டத்தில் ஒரு நேச அணி. ஆனால் இந்தப் புலிகள் ஆட்சியதிகாரத்திற்கு வர எந்தப் பிற்போக்கு கும்பலிடமும் உதவி பெறுவார்கள். இது அவர்களின் குணாம்சம்.

 

மேலும் தமது அரசியலில் குழம்பிக்கொண்டு இருப்பார்கள். எதனையும் தெளிவாக முன் வைக்கமாட்டார்கள். இன்று மூன்றாம் உலக நாடுகள் பூராவும் மக்கள் விடுதலை யுத்தங்கள் ஏகாதிபத்திய கூலி அரசுகளிற்கு ஏதிராக நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகில் ஒரு கம்யூனிச நாடும் இன்று இல்லாமையால், சரியான திசைவழி இன்றியும், கம்யூனிசம் பற்றிய தெளிவின்மையாலும் இப்போராட்டங்கள் திசை இலக்கு இன்றி போய் கொண்டுள்ளன. இது ஏகாதிபத்தியத்திற்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. அது இரு வழிகளை கைக்கொள்கிறது.

(1)அரசிற்கு சகல உதவிகளையும் செய்து போராட்டத்தை நசுக்க முயல்கிறது.

 

(2)போராடும் சக்தியில், மக்களை தங்கியிராத சக்திகளை பல வழியிலும் வளர்த்தெடுத்து, புரட்சிகர அமைப்புக்களை அழித்தொழிப்பது சில சமயம் போராட்டம் வெல்லப்படுமானால் ஆட்சியதிகாரத்திற்கு வருபவர்களாக இவர்களை வளர்ப்பது. உதாரணம் எரித்திரியா.

 

எமது தேசத்தில் நானும் நீங்களும் விரும்புகின்ற கம்யூனிச அமைப்பு தோன்றுவதற்கு, தமிழ் ஈழம் முன் நிபந்தனையாக உள்ளது. அதன் பின் ஜனநாயக அரசு ஒன்று ஆட்சிக்கு வந்து, அது பரந்துபட்ட மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராட்டம் நடத்த வேண்டும் (இது தான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்று கருதுகிறேன்.) அதன் பின் சோசலிசப் போராட்டம், இப்படியே தொடர்ந்து கம்யூனிசப் போராட்டம் வரை செல்லுமென்பது என் கருதுகோள்.

 

முன்னிபந்தனையான தமிழீழம் என்பதில் பல வர்க்க அமைப்பும் போராடுவது தவிர்க்க இயலாதது. இதில் ஏகாதிபத்தியம் தன் சார்பு நிலை எடுக்கக்கூடிய அமைப்பை பலம் பொருந்தியதாக வளர்த்து விடுவது தவிர்க்க முடியாதது.

 

எனவே நாம் வெறுமனே கூச்சலிட்டுப் பயன் இல்லை. மாறாக உலகப் புரட்சிகர அமைப்புக்களுடன் நட்புறவுகளைப் பேணி ஆழமான விவாதங்களை படிப்புக்களை நட்புச்சக்தி, போர் வழி, மார்க்கம் என்பவற்றை முன்வைத்து பல மடங்கு கஸ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். எனவே முதலில் பிரதான பணியாக:

 

(1)  போராட்டம் பிரதானமாக என்ன முரண்பாட்டைக்கொண்டுள்ளது.

 

(2)  யார்(எந்தவர்க்கம்) எதிரிகள் ? யார் நண்பர்கள்?

 

(3)  ஆயுதப் போராட்டமா? இல்லையா?

 

(4)  எமது அரசியல் கோட்பாடு, முழக்கம், வேலைமுறைகள் என்ன!

 

என்பது பற்றிய விடைகளைக் காண அனைத்து சஞ்சிகைகளும், தமது முழுவேலையாக கருதி செயற்பட வேண்டும். அதனை விட்டு நான்கு சிறு கதைகள், இரு கவிதைகள், ஒரு மொழிபெயர்ப்பு கதை எழுதி வெளியிடுவதால், எமது போராட்டம் முன்நோக்கி செல்ல மாட்டாது.

 

மேலுள்ளவை பிழை என்று கூறவில்லை. சரியான அரசியல் மார்க்கமின்றி, இந்த கலை, கலாச்சாரம், இலக்கியம் வளரமாட்டாது. அவை வாசிக்க நல்லவையாகவே இருக்கும். மக்களிற்கு பயன்படமாட்டாது.

 

இந்த நோக்கம் உடைக்கப்பட்டால், அடுத்து நாம் பரந்துபட்ட மக்களின் தலைமையை போராட்டத்தில் நிறுவ, புலிகளை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கலாம். அதனை அங்கீகரிக்காத பட்சத்தில் அவர்கள் மீது ஆயுத யுத்தம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.

 

இன்றுள்ள நிலையில் பிரதான பணியான, சரியான அரசியல் வழி, வேலைமுறையின்றி எவர் வேலை செய்ய முற்பட்டாலும் ரமணியின் பரிதாபகரமான முடிவை நாட வேண்டியிருக்கும்.

 

எனவே உங்கள் சமர் புலிகளை அம்பலப்படுத்துவதையே பிரதானமாக கொண்டிராமல் எமது தேசத்தின் விடுதலை யுத்தத்தில், பரந்துபட்ட மக்களின் நலன்களை கட்டிக்காக்கக் கூடிய பாட்டாளிவர்க்க அரசியல் மார்க்கத்தை கண்டு பிடிக்கும் பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 

குகன்--லண்டன்

 

இன்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசை வழியைத் தீர்மானிப்பதில், புலிகளை பற்றியொரு பார்வை தவிர்க்க முடியாததாகிறது. இது ஒரு முன்நிபந்தனையாக இல்லையெனினும் இவ்விடயத்திற்கு ஒரு தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் உண்டு.

 

சமர் 2. 1. தூண்டில் ஆகியவற்றில் வெளிவந்த விவாதங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றோம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த உலக ஒருங்கமைவும், 2ம் உலக யுத்தத்தின் சற்றுப் பின்னர் இருந்த ஒழுங்கமைவும் இப்போதில்லை. நாளாந்தம் உலகமக்களை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்தியங்களும் புதிய புதிய வழி முறைகளைக் கையாளுகின்றன. வறிய நாடுகளில் எழுகின்ற தேசவிடுதலை யுத்தங்களை அடக்குவதிலும், தமது சந்தைகளை தொடர்ந்து பேணுவதிலும், ஏகாதிபத்தியங்களின் பழைய வழிமுறைகள் சாத்தியமற்றவையாகிவிட்டன. இப்போது முற்றிலும் புதிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இந்த நிலையில் 50ஆண்டுகளுக்கு முன்னைய நிலையைப் போல நாம் சிந்திக்க முடியாது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகவே, உங்கள் கடிதத்திலும் முரண்பட்ட கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கிறது.

 

(1) புலி ஒரு தேசிய விடுதலை இயக்கம், ஆனால் தரகு முதாலாளித்துவ சக்தியா என்பது விவாதத்திற்குரியது என்ற கருத்து.

 

(2) புலி எந்த சக்தியிடமும் உதவி பெறுமென்பதும், அரசுடன் சமரசத்திற்கு போகலாமென்பதும்.

 

முதலில் ஒரு ஏகாதிபத்தியம் புலிகளுக்கு உதவி செய்யவும், புலி உதவி பெறவும் முடியுமானால், ஒன்றில் ஏகாதிபத்தியவாதிகள் முட்டாள்களாகவோ அல்லது புலிகள் தரகு முதலாளித்துவ சக்தியாகவோ தான் இருக்கமுடியும்.

 

தவிர, தரகு முதலாளித்துவமென்பது, அதிகாரத்திலுள்ள ஒரு வர்க்கம். இது போராடுகின்ற சக்தியல்ல ஏகாதிபத்தியங்களின் சார்பில் நின்று மக்களை அடக்குகின்ற சக்தி, இந்த வர்க்கத்திற்கென்று எந்தப் புரட்சிகரமான பாத்திரமுமில்லை. ரஷ்யாவின் நிலப்பிரபுத்துவ ஜார் அரசினைப் போலும், சீனாவின் அரைநிலப்பிரபுத்துவ அரசைப்போலவுமாகும். இதுவே போராட்டத்தில் முதல் எதிரியான வர்க்கம். இதற்கென்று ஒரு தேசியவாதம் கிடையாது. இந்த அடிப்படையிலேயே இந்திய இராணுவத்துடன் (மாகாணசபை அதிகாரம் கேட்டு) புலிகள் நடத்திய பேரமும், சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை சில அற்ப சலுகைக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தமையும் பார்க்கலாம். இது தொடர்பாக இரண்டாவது இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

 

தவிர நீங்கள் குறிப்பிடுவது போன்று மாகாணசபைக்கு எதிராக புலிகள் தன் நலனிலிருந்தே போராட முற்படுகிறது. சொந்த நலனென்பது, எந்த வர்க்கத்தின் பக்கத்திலானது? இது தொடர்பாக இன்னொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம். ஆனால் இருக்கின்ற போராட்டச் சூழலில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வர்க்கங்கள் வெற்றி பெறாமலிருப்பதற்காக, ஏகாதிபத்தியங்களினாலேயே போராட்ட அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போன்று குட்டிமுதலாளித்துவ அமைப்புக்கள் இலகுவில் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டது போலவே போராடும் சக்தியில் மக்களை சார்ந்திராத சக்திகளை பல வழியிலும் வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புக்களை அழித்தொழிப்பது. சில சமயம் போராட்டம் வெல்லப்படுமானால் ஆட்சியதிகாரத்திற்க்கு வருபவர்களாக இவர்களை வளர்ப்பது.

 

புலிகள் ஆட்சியதிகாரத்திற்க்கு வர எந்த பிற்போக்கு கும்பலிடமும் உதவி பெறுவார்கள். இது அவர்களின் வர்க்க குணாம்சம். மேலும் தமது அரசியலில். குழம்பிக் கொண்டு இருப்பார்கள். எதனையும் தெளிவாக வைக்க மாட்டார்கள் என்ற கருத்தே புலிகள் தொடபான எமது கருத்தும். இது தொடர்பாக விரிவாக பிறிதொரு கட்டுரையில் விவாதிப்போம். இது தவிர ஏனைய விடயங்கள் தொடர்பாக எமக்கிடையே ஒத்த கருத்துக்களே உள்ளன.

ஆசிரியர் குழு-

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ