Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மார்க்சிய பெண்ணிய மீதான கேள்விகள் மேல்

மார்க்சிய பெண்ணிய மீதான கேள்விகள் மேல்

  • PDF

ஜெர்மனில் பெர்லின் நகரில் நடந்த (2000-08-05) பெண்கள் சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஆர்வம் ஊட்டும் வகையில் ஒரு விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துகளை ஒட்டிய விவாதத்தை வளர்த்து எடுக்கும் வகையில்,

அன்று முன்வைத்த கருத்துகள் சிலவற்றின் மீது பார்ப்போம்.

 

1.பொருளாதார விடுதலையே பெண்ணை விடுவிக்கும் என்று மார்க்சியம் பிரகடனம் செய்வதாகவும், பெண் பொருளாதார விடுதலையை பெற்ற போதும் ஆணாதிக்கம் ஒழிந்துவிடவில்லை என்ற வாதங்கள் மீது பார்ப்போம்.

 

இந்த விவாதம் மாhக்சியத்துக்கு எதிரானது. மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை கோருகின்றதே ஒழிய, பொருளாதார வாதத்தை கோரவில்லை. வர்க்கப் போராட்டத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாத எல்லா நிலையிலும், பொருளாதார வாதத்தை மார்க்சியமாக காட்டுவது நிகழ்கின்றது. தொழிலாளர் வர்க்கம், வர்க்கப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் புரட்சிகர வரலாற்று நிகழ்வை, வெறும் தொழில் சங்க பொருளாதார கோரிக்கைக்குள் புரிந்த கொள்கின்ற போது, அரசியல் போராட்டம் பின்தள்ளப்பட்ட எல்லா நிலையிலும், பொருளாதார வாதம் முதன்மை பெறுகின்றது. இது சகலதுறையிலும் விரவிப் பரவுகின்றது. மார்க்சியத்தை பொருளாதாரவாதமாக புரிந்து கொள்வதன் ஊடாக, மேல் கட்டுமான வர்க்கப் போராட்டத்தை கைவிடுவதுடன் மட்டுமின்றி, அனைத்தையும் பொருளாதார வடிவத்துக்குள் காட்டி விடுவதும் நிகழ்கின்றது. இது வர்க்கப் போட்டத்தின் உயிர்துடிப்பான போட்டத்தை முடக்குவதுடன், சமுததாயத்தின் பிரச்சனைக்கான தீர்வுகளை புரட்சிக்கு பின் என்ற வாதத்தை முன்வைத்துவிடுகின்றனர். வர்க்கப் போரட்டம் சமுதாயத்தின் அனைத்து மேற் கட்டுமனம் மீதும் நாள்தோறும் நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ளாத வரை, அதை மாற்றும் போராட்த்தில் எமது கவனத்தை செலுத்தவரை, சீர்திருத்தம் கோட்பாட்டு ஆதிகத்தை பெற்று நடைமுறைத் தத்துவமாக மாறுகின்றது. மேல் கட்டுமானத்தில் கோரப்படும் ஜனநாயகக் கோரிக்கையில் பாட்டாளி வர்க்கம் ஊன்றி நிற்க்க தவறி, பொருளாதார வாதத்துக்குள் முடங்கிவிடும் போது, பொருளாதார எதிர்ப்புவாதமாக மாறி சீர்திருத்தம் ஆதிக்கத்தை பெற்றுவிடுகின்றது. இது பொருள்முதல்வாதத்தை மறுக்கும் பொருளாதரவாத எதிர்ப்பாக மாறிவிடுகின்றது. இது மார்க்சிய எதிர்ப்பாக மாறுகின்றது.

 

பெண் பொருளாதார ரீதியாக விடுதலை அடைகின்ற போது, பெண் விடுதலை அடைவாள் என்பது மார்க்சியம் அல்ல. அது மட்டுமின்றி இது வர்க்கப் போராட்டமும் அல்ல. ஏங்கெல்ஸ் பெண்ணின் பொருளாதார விடுதலை பெண் விடுதலைக்கு முன்நிபந்தனை என்ற கூறினரே ஒழிய, அது ஆணாதிகத்தை ஒழிக்கும் என்று என்றும் கூறிவிடவில்லை. பெண் சுதந்திரமாக சிந்திக்கவும், சுயமாக போராடவும், அவள் பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருப்பது முடிவுக்கு வரவேண்டும். இந்த குறித்த நிலமைதான் இன்று வரை, பெண்ணின் சமூக பங்களிப்பை மட்டுப்படுத்துகின்றது. ஆண்கள் அளவுக்கு சமூக ஈடுபாடு குறைவாக இருப்பதும், கல்வியல் பின்தங்கி இருப்பதும், தலமை தாங்குவதில் முன்னேற முடியாது இருப்பதும் யதார்த்தமாக உள்ளது. பெண் பொருளாதார ரீதியாக சுதந்திரம அடைவது, அவளின் விடுதலைக்கு முன்நிபந்தனையாகும்.

 

இந்த பொருளாதார விடுதலை என்பதை மார்க்சியம் இறுதியானதும் முடிவானதுமாக என்றுமே முன்வைத்ததில்லை. ஆனால் பெண்ணின் பொருளாதார விடுதலை பெண் விடுதலைக்கு நிபந்தனையானது என்பதை முன்வைத்ததுடன், புரட்சிக்கு பிந்திய சோசலிச சமூகங்களில் பெண்ணின் பொருளாதார விடுதலைக்குடாக பெண்ணை முதலில் விடுவித்தது. பெண்ணின் விடுதலை என்பது பல பண்பாட்டு கலாச்சார புரட்சியூடாகவே நிறைவு பெறும் என்பதை பாட்டாளி வர்க்கம் தெளிவாக விளக்கியுள்ளது. இதுவும் சோசலிச சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூகத்தை நோக்கிய மாற்றத்தை, அடிக்கட்டுமான பொருளாதார அலகை மாற்றிச் செல்லுகின்ற போது பெண் விடுதலை மேலும் துல்லியமாக கோருகின்றது.

 

2.சோசலிச புரட்சி பெண் விடுதலையை பெற்றுத்தரும் என்ற வாதமும், சோசலிச சமூகங்கள் பெண்விடுதலையை பெற்றுத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவும் பார்ப்போம்.

 


இவை இரண்டும் மார்க்சியத்தை விட்டு விலகிச் செல்லும் வாதமாகும். சோசலிச சமூகம் பெண் விடுதலையை பெற்றுத் தரும் என்று கூறுவதன் மூலம், சோசலிச புரட்சி வரை பெண்களின் பிரச்சனையை ஒத்திப் போடுவது போன்ற பொருளாதார வாதம்  முன்வைக்கப்படுகின்றது. சோசலிச புரட்சியை நோக்கிய தயாரிப்பில், ஆணாதிகத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதும் ஒரு வர்க்க கடமையாகும். ஆணாதிகத்தக்கு எதிரான போராட்டத்தை சோசலிச சமூகத்துக்கு முன்பே தொடங்குவது, அடிப்படையான பாட்டாளி வர்க்க கடமையாகும்;. இதுவே வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றது. யாரும் முரண்பாடுகளையும் அதனால் எழும் போராட்டங்களை ஒத்தி வைக்கமுடியாது. சோசலிச சமூகம் வரை காத்திருக்க கோராமுடியாது. போராடும் உரிமை உயிர் வாழ்தலின் அடிப்படை நியதியாகும். ஆனால் சோசலிச சமூக மாற்றமின்றி பெண் விடுதலையை சாதிக்கமுடியும் என்ற காரியவாத சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, மார்க்சிய விரோத தன்மையை அம்பலம் செய்வதை இது தடுக்காது. சோசலிச சமூகமும் அடுத்த கட்ட கம்யூனிச சமூகத்தை நோக்கிய வர்க்கப் போராட்டமே பெண்ணின் விடுதலையை நிறைவு செய்கின்றது. இருக்கின்ற சுரண்டல் அமைப்பில் இருந்து தொடங்கும் போராட்டம் கம்யூனிச சமூகத்தில் தான் குறித்த சமூக அவலத்தை களைகின்றது. இந்த நீண்ட போராட்டத்தை மறுத்த அனைத்து விலகலும், ஆணாதிகத்தை பாதுகாப்பதை அடிப்படையாக கொள்கின்றது. நீண்ட இடைவெளியற்ற போராட்டத்தை ஒத்தி போடமுடியாத வரலாற்று நிகழ்வு காணப்படுகின்றது. இது ஏற்ற இறக்கம் கொண்ட வழிகளில் மட்டுமே ஒழிக்கப்படுகின்றது.

 

சிலர் சோசலிச புரட்சி நடந்தவுடன் பெண் விடுதலை அடைந்த விடவில்லை என்ற மார்க்சியத்தை கொச்சைப்படுத்துகின்றனர். இது சோசலிச புரட்சி பெண் விடுதலை தந்து விடும் என்ற பொருளாதாரவாத கோட்பாட்டின் மறு பக்கமாகும். இது கோட்பாட்டு உள்ளடக்கத்தில் பொருளாதார வாதமாகவும், அராஜாக வாதமாகவும் வெளிப்படுகின்றது. பண்பாட்டு கலாச்சார புரட்சியை மறுத்த, கம்யூனிச சமூகத்தை நோக்கிய அடிக்கட்டுமான மாற்றங்களை மறுத்த வழிகளில் இது பிரதி பலிக்கின்றது. புரட்சியின் ஏற்ற இறக்கம் கொண்ட நீண்ட அலைவரிசையான இயங்கியலை மாறுக்கின்ற தன்மை, ஒரேயடியாக மாறிவிடும் என்ற அராஜக பிரமை விதைப்பதன் ஊடாக, எதிர்ப்பதில் இரட்டைத் தன்மை இங்கு வெளிப்படுகின்றது. இது மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள இயங்கியல் மற்றும் புரட்சிகர தன்மையை சிதைக்கின்றது. இது மார்க்சிய எதிர்ப்பாக வளர்ச்சி பெறுகின்றது. மார்க்சியத்தை திரித்த, திரிந்த வழிகளில் புரிந்த கொள்ளும் போது, ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முடக்கப்படுகின்றது.

 

3.மார்க்சிய தலைவர்கள் ஆண்களாக இருப்பதாகவும், மார்க்சியம் ஆண்களின் ஒரு இயக்கமாக இருப்பதாகவும், அதனால் பெண்கள் தனியாக பெண்கள் தமக்குரிய தலமையை உருவாக்க வேண்டும் என்ற வாதம் தொடர்பாக பார்ப்போம்.

 

மார்க்சியம் ஆண்களின் இயக்கமா? மார்க்சியம் ஆண்களின் சொத்துரிமையா? மார்க்சிய தலைவர்களாக பெண்கள் வரமுடியாதா? என்ற அடிப்படையான கேள்வி  இங்கு எழுகின்றது. இது பல நூல்கள் முதல் பூர்சுவா பெண்ணியல் வாதிகள் வரை முன்வைக்கும் விடையமாகி, மார்க்சிய எதிர்பாகி விடுகின்றது. மார்க்சியம் எப்போதாவது எங்கவாது ஆண்கள் இயக்கமாக பிரகடனம் செய்ததா? பெண்களை உள்வாங்க, தலைமையில் இருந்து எட்டி உதைக்க முனைந்தா? இப்படி எங்கவாது நடந்தால் அங்கு விமர்சனம், சுயவிமர்சனம் நிகழ்கின்றது. விமர்சனம், சுயவிமர்சனம் மாறுக்கப்படும் எல்லா நிலையிலும் அக் கட்சி பாட்டாளி வர்க்க கட்சியாக இருப்பதில் இருந்து முதலாளித்துவ கட்சியாக சீராழிகின்றது. மார்க்சியம் தனிப்பட்ட நபர்களினதோ, குறித்த மக்கள் கூட்டத்தினதோ சொந்த சொத்தல்ல. புரட்சிகர வர்க்கமான தொழிலாளர் தலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்ட பாதையில், மார்க்சியத்தை முன்வைத்து யாரும் போராடமுடியும். இங்க புரட்சிகர வர்க்கமான தொழிலாளர் அனைத்து மக்கள் கூட்டத்திலும் காணப்படுகின்றனர். இங்கு ஆண், பெண், சாதி, நிறம்.. என்ற எல்லை கடந்து யாரும் மார்க்சியத்தை முன்வைத்த போராடமுடியும்;. இங்கு மார்க்சியம் ஆண்களினதோ, உயர் சாதிப் பரிவுகளினதோ, வெள்ளைநிறத்தினதோ சொத்தல்ல. சில மார்க்சிய விரோத கோட்பாட்டளார்கள் இப்படி இருப்தாக கூறுவதன் மூலமே, தமது இழிந்த குறுகிய காரியவாத சந்தாப்பவாத பிழைப்புவாத நலன்களை நியாப்படுத்துகின்றனர். பெண்கள், சமூகத்தில் மிக பின்தங்கிய சாதிகள், கறுப்பு நிற மக்கள், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என யாரும் மார்க்சியத்தை தமது புரட்சிகர தத்துவமாக கொண்டு போராடவும், தலமை தாங்கவும், அமைப்புகளை உருவாக்கவும் முடியும்;. இதை யாரும் தடுக்கமுடியாது. இங்கு எந்த வேலியும், அதிகாரமும் கிடையாது. இவை தொழிலாளர் வர்க்க தலமையில் மனிதப் பிளவுகளை கடந்து போராட, பாட்டாளி வர்ர்க்க சர்வாதிகாரத்தை நிறுவதையும், அதை பாதுகாக்கவும், வர்க்கப் போராட்த்தை தொடருவதை அடிப்படையாக கொள்ளும் போராட்டத்தை, முன்னெடுக்கும் எல்லா நிலையிலும் சர்வதேசியமாகிவிடுகின்றது.

 

4.ஆணாதிகத்துக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டமல்ல என்ற வாதம் தொடர்பாக பார்ப்போம்.

 

ஆணாதிகம் மீதான போராட்டம் வர்க்க எல்லை கடந்தது என்ற அரசியல் உள்ளடகத்தில் இருந்து இது முன்வைக்கப்படுகின்றது. இதன் மூலம் வர்க்க போராட்டமின்றி பெண் விடுதலை அடையமுடியும் என்ற கோட்பாட்டு விவாதம் மட்டுமின்றி, நடைமுறையும் முன்வைக்கப்படுகின்றது.

 

இவை உள்ளடகத்தில் சீர்திருத்தவாத காரியவாத நலன்களை அடைப்படையாக கொண்டு தன்னை அடையாளம் காட்டுகின்றது. ஆணாதிக்கம் இயற்கையானதாக இது மறைமுகமாக விளக்கமுனைகின்றது. ஆணாதிக்கம் எப்படி தோன்றியது என்ற வராலாற்று தன்மையை புரிந்து கொள்ள மறுப்பதன் மூலம், ஆண்களின் சொத்துரிமையை தனிப்பட்ட பெண்கள் அனுபவிப்பது முதல், முதலாளித்துவ அமைப்பில் சொத்துரிமை பெற்ற பெண்கள் தமது வர்க்க நலன் சார்ந்து இதை முன்வைக்கின்றனர். அதாவது ஆணாதிக்க சொத்துரிமை வழியில் சலுகை பெற்ற பெண்கள் தமது சொத்துரிமையை பாதுகாக்க, வர்க்கப் போராட்த்தில் இருந்து பெண்ணியத்தை விலக்கிவைக்க விரும்புகின்றனர்.

 

ஆனால் ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமை அமைப்பில் ஆண்களின் தனிச் சலுகையில் இருந்து உருவானது. ஆணின் வாரிசை பெத்துப் போடுவதன் ஊடாக பெண் ஆணின் அடைமையானதால், சொத்தையும் சொந்த குழந்தை செல்வத்தையும் ஆணிடம் இழந்த பெண், ஆணுக்கு சேவை செய்வதன் மூலம் ஆணின் தயவில் வாழ நிர்ப்பந்தித்த மூலதன அமைப்பு, பெண்ணை ஆணின் அடைமையாக வாழ வழிகாட்டியது. இதற்கு எதிரான போராட்டம் என்பது மூலதனத்தை தகர்ப்பதில் சார்ந்துள்ளது. அதாவது தனிச் சொத்துரிமை அமைப்பின் மேல் கட்டப்படும் அனைத்து மேல் கட்டுமான அமைப்பின் மீதான போராட்டங்கள், திட்டவட்டமாக வர்க்கப் போராட்டமாக இருப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. ஆணாதிக்கம் அடிக்கட்டுமான அமைப்பில் உருவான பிளவாகும். சொத்தை இழந்த பெண் இங்கு ஆணின் அடிமையானாள். இதன் அடிப்படையில் உருவான பண்பாடுகள், கலாச்சாரங்கள் அது சார்ந்த மொழிகள் என அனைத்தும், ஆணின் தனிச் சொத்துரிமை எல்லைக்குள் வளர்ச்சி பெற்றவையே. இன்று ஆண்கள் பெருமளவில் சொத்திழந்த போதும், சிறுயளவு பெண்கள் சொத்தை பெற்ற போதும் (இங்கு பெண் சொத்தை பெற்றதால் ஆண் சொத்தை இழக்கவில்லை. மூலதனக் குவிப்பு சுரண்டல் வடிவில் உச்சக் கட்டத்தை அடைந்தன் ஊடாக இவை நிகழ்கின்றது.), ஆணாதிக்க உறவு சொத்துரிமை வடிவில் நீடிக்கின்றது. இது பண்பாட்டு, கலாச்சார தளத்தில் மிக இழிவாக மூலதன வடிவில் நீடிக்கின்றது. பாட்டாளி வர்க்கப் போராட்டம் புரட்சிக்கு முந்திய நிலையில், மேல் கட்டுமானத்தில் நிகழ்கின்றது. புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் தான் அடிக்கட்டுமான பொருளாதார அலகின் மேல் நிகழ்வதன் ஊடாக, மேல் கட்டமான புரட்சி மேலும் வீறுகொள்ளுகின்றது. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான தயாரிப்பு மேல் கட்டுமான மீதான அனைத்து தளத்திலும் தயாரிக்கப்படுகின்றது. இது நடை முறைப் போராட்த்தில் ஜனநாயக கோரிக்கை முதல் கம்யூனிச சமூகக் கோரிக்கை வரை முன்வைத்து ஆயுதபாணியவதுடன், பல வீரமிக்க போராட்த்தையும் முன்னெடுக்கின்றது. கேரிரிக்கைகளை வென்று எடுக்கின்றது. இதை நிரந்தரமாக்கவும், ஓரேயடியாக இவற்றை முடிவு கட்டவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ போராடுகின்றது. பெண் விடுதலைகான தயாரிப்பை புரட்சிக்கு முந்திய ஜனநாயக கோரிக்கையிலும் பாட்டாளி வர்க்க கோரிக்கையிலும் தயார் செய்கின்றது. நடைமுறை போராட்த்தில் தலைமை தாங்கி கோரிக்கைகளை வென்று எடுப்பதுடன், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுகின்றது. இந்த வர்க்கப் போராட்டம் என்பது மார்க்சியத்தின் புரட்சிகர தன்மையால் தலைமைதாங்கப்படுகின்றது.

 

5.மார்க்ஸ் கம்யூனிட்கட்சி அறிகையில் பெண்ணியம் பற்றிய கதைக்கவில்லை அல்லது மார்க்ஸ் அக்கறை கொள்ளவில்லை என்ற கருத்த தொடர்பாக பார்ப்போம்.

 

இந்தவாதம் தவறானது. மார்க்ஸ், எங்கெல்ஸ் பெண்கள் துன்பம் பற்றி கதைத்துள்ளதுடன், புகழ் பூத்த பெண்ணிய நூல்களையும் தந்தவர்கள். அவர்கள் தமது கடினமான போராட்ட காலத்தில் கிடைத்த நேர எல்லைக்குள் இவைபற்றி கதைத்தேயுள்ளனர். இவர்கள் மார்க்சியத்தை நிறுவும் போராட்த்தையே தமது காலத்தில் செய்தனர். பொருள் முதல் வாத்தின் முரணற்ற விதியை நிறுவதிலும், அதன் மீது சகல சிந்தனைகள், துயரங்கள் நிலவுவதையும், இயற்கை கடந்த நிகழ்ச்சிகளில் நிறுவதில் போராட வேண்டியிருந்தது. அவர்கள் தேசிய இனப் பிரச்சனை, சுற்றுச் சூழல், ஆணாதிகம், நிறவாதம், காலனியாதிக்கம் என என்னற்ற பிரச்சைகள் மீது தனித்துவமான ஆய்வுகளை தனித்து செய்வதில் அதிக கவனம் எடுக்க அவர்களின் ஆயுள் போதாகவே இருந்தது. இருந்த போதும் இவைகள் பற்றிய ஆய்வுகளை நடத்தி, தமது தெளிவான மார்க்சிய அபிரயங்களையும் கூட முன்வைக்க பின்நிற்க்கவில்லை. அவை வரலாற்று ரீதியாக முக்கியமானவையாக இன்றும் திகழ்வது  காணமுடியும்.

 

6.சோசலிச சமூகங்களில் புரட்சிக்கு பிந்திய சமூகங்களில் பெண்விடுதலையில் கவனம் எடுக்கவில்லை என்ற அபிராயங்கள் மீது பார்ப்போம்.

 

இந்த கருதுகோல் முற்றாக தவறானவை. சோவியத் புரட்சியைத் தொடர்ந்து பெண்களுக்கு சட்டப்படி வழங்கிய உரிமைகளை, உலகில் எந்த நாடும் கொண்டிருந்தில்லை. அதன் தொடர்ச்சியில் பெண்கள் விடுதலையில் தொடாச்சியாக அவர்களை விடுவிக்கும் பல்வேறு நடைமுறைகளை கையாண்டனர். இவை அந்த நாடுகளின் பெண்கள் வராலாறு ஆதாரபூhவமாக உள்ளது. லெனின் தனது கட்சி மீதான விமர்சனத்தில், பெண்கள் விடுதலையை மேலும் பண்பாட்டு, கலாச்சார, பொருளாதார தளத்தில் தீவிரமாக்க தவறியதற்காக கடுமையான விமர்சனத்தைக் கூட "சோஷலிச சித்தாந்தமும் கலாச்சரமும் குறித்து" என்ற நூலில் செய்துள்ளார். சீனாவில் பெண்களின் கல்வி முதல் கிராமப்புற பெண் அiடிமைத்தனம், மற்றும் பெண் குழந்தை உழைப்பு போன்றவற்றை தகர்க்கும் போராட்த்தை கலாச்சார புரட்சி காலத்தில் தீவிரமாக்கி சமூக வடிவமாக்கினர். இவை பற்றிய தகவல்களை எனது "ஆணாதிக்கமும் பெண்ணியமும்" நூலில்  தொகுத்துள்ளேன்.

 

Last Updated on Saturday, 17 June 2017 13:30