Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மாமா வேலை பார்க்கும் வீரமணியும், அதற்கு எடுபிடி வேலை பார்க்கும் லும்பன்களும்

மாமா வேலை பார்க்கும் வீரமணியும், அதற்கு எடுபிடி வேலை பார்க்கும் லும்பன்களும்

  • PDF

சமுதாய நலன்களையும் அதற்கான போராட்டங்களையும் தம்மால் செய்து காட்ட முடியாவிட்டால், உடனடியாக எடுபிடி லும்பன் அரசியல் வள்ளென்று குலைக்கத் தொடங்குகின்றது. இப்படி மக்களையும், அவர்களின் வாழ்க்கையும், கூட்டிக்கொடுப்பவன் விபசாரத் தரகன் தானே. மக்களின் வாழ்வியலைத் திட்டமிட்டு சிதைத்துக் கொண்டுடிருக்கும் கும்பலுடன், கூடிப்படுப்பவன் மாமா தானே!

 இன்று கோடானு கோடி மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

வாழ்விழந்த மக்களுக்காகப் போராடாது, அவர்களை வைத்து விபச்சாரம் செய்யும் தொழில் தரகனாகத்தானே, வீரமணி செயல்படு;கிறார். வாழ்விந்த அந்த மக்களுக்கான போராட்டத்தை மாமா வீரமணி எங்கே நடத்துகின்றார்? இவரை ஒரு மாமா என்று சொல்லாது, ஒரு புரட்சிக்காரன் என்று சொல்லும் தர்க்கத்துக்குரிய யோக்யதை அவரிடம் உண்டா! இவர் மக்களின் தோழனா! எப்படி? சொல்லுங்கள். அந்தத் தகுதி அந்த மாமாக்களுக்கு ஒரு நாளும் கிடையாது. ஒரு தோழன், புரட்சிக்காரன், மக்களின் நண்பன் என்று சொல்லும் எந்த அம்சத்தையும் இன்று வீரமணி செய்யும் மாமா வேலையில் இருந்து எடுத்துக் காட்ட யாராலும் முடியாது.

 

ஆகவே தான் உண்மையாக மக்களுக்காகப் போராடுபவர்களின் பிறப்பு குறித்து, மொழி குறித்து விவாதம் நடத்துகின்றனர். மக்களுக்காக செயல்பட முடியாதவர்கள் என்ன செய்கின்றனர்? பால், இனம், நிறம், சாதி, மதம்.. என்று பிறப்பு குறித்த குறுகிய மனிதம் பற்றி பேசத் தொடங்குகின்றனர்.

 

கடைந்தெடுத்த போக்கிரிகள் இவர்கள். இவர்கள் தான் முதல்தரமான மக்கள் எதிரிகள். மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு, மக்களைப் பிளந்து, அதற்குள் தமக்கு தாமே முடிசூட்டிக் கொள்வதில்தான் இவர்களின் அரசியல் அற்பத்தனமே உள்ளது. அத்துடன் இந்த அற்பத்தனத்தை அம்பலப்படுத்தும் மொழி குறித்தும், நடைமுறை குறித்தும் விவாதம் நடத்துகின்றனர்.

 

இந்த மாமாவுக்காக விவாதம் செய்யும் லும்பன் எடுபிடிகள் ஒருபுறம்;. மாமா வீரமணி கும்பலுக்கு பின்னால் கோடி கோடியாக பணம் புரளும் தொழில் தான், அவரின் அரசியல். மக்கள் சேவை என்பதே பணமாக புரளும் அதிசயம்; நடக்கிறது அங்கு தோழன், புரட்சிக்காரன் என்பதெல்லாம், பணம் பண்ணும் வித்தையா! கோடி கோடியாக மக்களை கொள்ளையிட்டு திரட்டிய பணம், அதைக்கொண்டு நக்கி வாழும் கும்பல் தான் இவர்கள். இவர்கள் பார்ப்பது விபசாரத் தரகு வேலையைத் தவிர வேறொன்றுமில்லை.

 

புரட்சி, சாதி ஒழிப்பு, மக்கள் என்று கூறிக்கொண்டு, கோடி கோடியாக பணத்தைப் பிடுங்கி, அதைக்கொண்டு வாழும் அற்ப மனிதர்கள் இவர்கள். இந்த மாமா வகையறாகளுக்கு அரசியல் என்பது, விபச்சாரம்தான். தி.மு.க மூலம் கருணாநிதி கோடி கோடியாகக் கொள்ளை அடிக்க முடிந்தது என்றால், தி.க மூலம் அதையே மாமா வீரமணி செய்துள்ளார். மாமாமவன் முதலமைச்சர் ஆகியிருந்தால், கருணநிதியை மிஞ்சும் உலக கோடிஸ்வரன ஆகியிருப்பான்.

 

அப்படிப்பட்ட இழிந்த அரசியல் பொறுக்கிகள் இவர்கள். இந்த அரசியல் வாதிகளின் தொழிலே மாமா வேலைதான். ஏகாதிபத்தியம் முதல் அதன் கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்கள் வரையிலான அவர்களின் செயல்பாடுகள், மக்களின் வாழ்வை அழிக்கும் பிழைப்பாக அமைந்துள்ளது. இங்கு தியாகம் என எதுவும் கிடையாது. சொத்து முதற் கொண்டு, உயிர் தியாகம் வரை எதுவும் கிடையாது. மக்களிடம் பிடுங்குவதில் தான், இவர்களின் வாழ்வின் அடித்தளம் அமைகின்றது. பிடுங்குவதில் இருந்து எறிகின்ற சில சில்லறைகளைக் கொண்ட மனிதபிமானம், மனித நல செயற்பாடுகள் என்பதெல்லாம், பிடுங்குவதை மூடிமறைப்பதற்கும், மக்கள் தமக்கு எதிராக போராடாமல் தடுப்பதற்குமே. பணம் என்பதே மனித உழைப்பு தான். அதற்கு வெளியில் அரசியல் பொருளாதார விளக்கம் எதுவும் கிடையாது. மக்கள் உழைப்பை சுரண்டி, அதில் சில எச்சில் பருக்கைகைளை எறியும் சில்லறை செயல்பாடுகள் அவர்களது தொண்டு.

 

மாமா வீரமணி அந்த வகைப்பட்ட ஒரு வீரியம் மிக்க ஒட்டுண்ணி. தானும் இதைச் செய்வதுடன், எகாதிபத்திய பணத்தைப் பெற்று தனது மாமா வேலையை தொடருகின்றார். மக்கள் போராட்டம் என்பது கூட்டிக்கொடுப்பதல்ல. மக்களின் எதிரியுடன் கூடி மக்கள் தொண்டு செய்தாக காட்டி, விபச்சாரம் செய்வதல்ல. எகாதிபத்தியம் ‘தொண்டு செய்ய’ எறியும் சில்லறைகள, எந்த வழியில், எப்படி அந்த மக்களிடம் சுருட்டுகின்றது என்பதை தோலுரித்துக்காட்டி, அதை எதிர்த்து போராடுவது தான் மக்கள் போராட்டம்.

 

மக்களுக்காக போராடுவது என்பது எதிரியுடன் கூடி மாமா வேலை பார்ப்பதல்ல. மாமா வீரமணி கும்பலின் எதிரிகள் யார்? எந்த எதிரிக்கு எதிராக, எப்படி, எந்த வகையில் போராடுகின்றாh.

 

மாமா வீரமணியின் எதிரி யார் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் தான்.


ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவு மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கூட, ஒரு இயக்கம் நேர்மையாக போராடமுடியும். முரண்பாட்டின் அடிப்படையில் நேர்மையாக, சமரசமின்றி போராடாத யாரையும் யாhரும் ஆதரிக்க முடியாது. இப்படி தி.க தலைவராக உள்ள மாமா வீரமணியை எந்த வகையில், எப்படி நாம் இனம் காண்பது?

 

இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக, எதிரியுடன் கூடியல்லாவா, மக்களின் தாலியை அறுக்கின்றனார். தமிழ் மணத்தில் இடதுசாரி தோழர்கள் நடத்திய விவாதம் மிகச் சரியானது.

 

சாதி ஒழிப்பை உள்ளடகிய இந்து மதத்தை, இந்த மாமா வீரமணி கும்பல் எப்படி ஒழிக்கப் போராடுகின்றது. தமிழுக்காக எப்படி இவர்கள் போராடுகின்றார்கள்.

 

மக்களைச் சார்ந்த எந்த போராட்டமும் இவர்களிடம் கிடையாது. மாமா வேலை பார்ப்பதே போராட்டம் என்றால், அதைத்தான் எல்லா களவாணி அரசியல் வாதிகளும் செய்கின்றனரே!

 

இதை விடுத்து பிறப்பு பற்றியும், மொழி பற்றியுமாக விவாதத்தைக் குறுக்கி திசைதிருப்பிக் காட்டுவது என்பது அவர்களின் அற்பத்தனமாகும். அதே வகை மாமாத்தனமாகும்.

 

மொழி சொல்லும் செய்தி, அது அரசியல் ஆழம் கொண்டது. இது தவறு என்றால் அதை அரசியல் நடைமுறை ரீதியாக மறுக்க வேண்டும். நேர்மையாக போராடுபவர்களின் பிறப்பு மற்றும் குறித்த சாதியை தேடி புழுக் கிண்டுபவர்கள் தமது சாதீய பிழைப்புவாத அரசியல் ஈனத்தனத்தையே காட்டுகின்றனர்.

 

எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் இவர்கள். அரசியல் ரீதியாக செயல்படும் கூட்டிக் கொடுப்புக்கு எதிராக எழும் நியாயமான குரல்களுக்கு பதிலளிக்க முடியாதவர்களின் புறம்போக்கு களிசடைத் தனம் இது.

பி.இரயாகரன்
28.06.2007

Last Updated on Saturday, 19 April 2008 06:41