பேரீச்சை பழம்-50 கிராம்
அத்திப்பழம் - 100கிராம்
பால் - 1லிட்டர்
சீனி - 275 கிராம்
நெய் - 200கிராம்
முந்திரி பருப்பு-50கிராம்
ஏலம்-10
பிஸ்தா-50கிராம்
எஸ்சென்ஸ்-1/2 மூடி
பாதம் - 50 கிராம்
பாதம்,பிஸ்தாவை சிறிது நேரம் ஊறவைத்து தோல் எடுத்து நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரியையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
பாலை தண்ணீர் இல்லாமல் நன்றாக காய்ச்சவும்
பாதி பாலில் நறுக்கிய பேரீச்சை பழம் அத்திப்பழத்தை சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்
அதனை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
பாலில் அத்திப்பழத்தை சேர்த்து நன்கு காய்ச்சவும் தீயை மிதமாக வைக்கவும்,பேஸ்ட் பக்குவம் வந்தவுடன்
சீனியயும் சேர்க்கவும் நன்கு கிளரவும்
கலர் மாறி வரும் வரை நன்கு கிளரவும்
பின் நெய்யை ஊற்றி கிளரவும்
பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன்
நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும் எஸ்ஸென்ஸ் ஊற்றி இறக்கவும்
சுவையான சூப்பர் அல்வா ரெடி
அத்திப்பழம் உடம்புக்கு மிகவும் நல்லது, ஆனால் குழந்தைகள் அவ்வளவாக விரும்புவது இல்லை ,இதனை போல் செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2332&Itemid=1
< Prev | Next > |
---|