Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் காலம் என்பது என்ன?

காலம் என்பது என்ன?

  • PDF

இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.

காலம் என்பது என்ன?

போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.

நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல விஞ்ஞானிகள் அணுதுகள் அலைவீச்சை விநாடி என்கிறார்கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்று தான்.

சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அளவீடு.

காலத்தை விநாடி, மைக்ரோ செக்கென்ட, நேனே செக்கென்ட் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கிறோம். அல்லது அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.

காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலைவீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடுகின்றன.

அலை வீச்சு என்பது என்ன என பார்ப்போம்

அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டவியல் தத்துவத்தில் பார்க்கலாம்

ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.

ஒளியின் என்றால் துகளும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை. கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இதெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துகளும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.

துகளும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஆன்( on ), ஆஃப்(off ) இது தான் ஒளி. இதின் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொருத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் மைக்ரோ ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.

சரி அப்படி ஆன்(on) ஆஃப்(off ) ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள்- வெளி என எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப்பகுதியில் பார்க்கலாம்.

பொருள் இருக்கு(on), இல்லை(off ). இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா அற்றல்களிலும் இருக்கிறது. பொருட்களிலும் இருக்கிறது.

இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.

ஆன் ஆப் தான் ஒளி என்பது சரி. ஆனால் அது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?

உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை(துகள்) நாம் கண்ணனால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி. இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக்கொள்வோம். கடுகு நகர்கிறது. அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும். கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.

கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்குறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துககொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.

கம்பியூட்டர் மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும். கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க் அல்லது செல்போன் சிம், மெம்மரி காடுகளில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒருபுள்ளி அனைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கம்பியூட்டர் மற்றும் மெம்மரிக்கார்டின் அடிப்படைமொழி(இயக்கம்) இருக்கிறது.

சரி அலைக்கு வருவோம் பொருள்(துகள்) அனைந்து மறைந்து மற்றதுகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது. அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்துவிடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மைத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது.

உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகரத்தக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது. இது தான் அடிப்படை நகர்ச்சிக்கான தத்துவம்.

அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.

சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.

பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு எனபது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொருத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் த்ததுவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை(பொருளை) பொருத்தது என்பது சரி.

ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்

ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது இது ஒரு காலசுற்று. ஆனால் உயிரற்ற பொருட்களில் அப்படி இல்லையே கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.

இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.

நம்முடைய(மனிதனுடைய உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துபோய் விட்டது.

ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வநதவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல. அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?

இது கொஞ்சம் அநாகரீகமான உதாணம் தான் அனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணததில் பாதையில் மீண்டும் உணவாகுமா?

இதற்கு பதில் ஆம் என்பது தான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.

நம்முடைய அறிவின் பயணம்(இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.

இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.

அறிவு என்பது என்ன? அதை எப்படி பின்னோக்கி திருப்புவது? இயக்கமாக இருக்கும் பொருளிலும் வெளியிலும் என்ன இருக்கிறது? அடிப்படை பொருள் என்ன? அது எப்படி வந்தது? இது குறித்த விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்புகளில் பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் ( மாயை என்பது என்ன? அறிவு என்பது என்ன? காலம் எப்படி வந்தது)

உலகளாவிய சிந்தனையாளர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு: அறிவகம் கட்டுரை தொடர் என்பது பொழுதுபோக்குகாகவும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் எழுதப்படுவது அல்ல. அறிவுபரிபூரணம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட காத்திருக்கும் கட்டுரை தான் இங்கு வலைபதிவில் பவனி வருகிறது. இதில் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் உலகளாவில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் போது தான் முழுமையான உண்மை தன்மை ஒளிரும்.

http://tamilarivu.blogspot.com/2008/09/14.html