Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் —பாசறைகளை அழித்தல்

போர் நிறுத்த ஒப்பந்தம் —பாசறைகளை அழித்தல்

  • PDF

இந்தப் போராட்டங்களுக்கிடையில் நிஜாம் நவாப், காங்கிரசு அரசாங்கத்துடன் ஒரு சமரசத்திற்கு வந்தான். ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக இருப்பதற்கு அவனது ஆட்சிக்கு அனுமதி கிடைத்தது. இவ்வகையாக, காங்கிரசு அரசாங்கம் தெலுங்கானா மக்களுக்குத் துரோகம் செய்தது. இந்தச் சமரசத்தினால் நிஜாம் நவாப் திரும்பவும் தெலுங்கானா மக்களின் போராட்டத்தை கொடூரமாக அடக்குவதற்கு ஆரம்பித்தான். மாநில காங்கிரசு ஏற்கனவே போராட்டத்திற்கு வருந்தி விலகிவிட்டது. இதன்மூலம் மாநிலக் காங்கிரசு அதிகாரபூர்வமாக வெள்ளைக் கொடியை உயர்த்தியது. இதன் வழியாக காங்கிரசு அரசாங்கமும், மாநில காங்கிரசும் தெலுங்கானா மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு நவாப்பிற்கு மறைமுகமாக உதவின. மக்களின் இயக்கம் நசுக்கப்படுமென்று அவர்கள் வீணான கனவு கண்டனர். ஆனால் முடிவுகள் இதற்கு எதிராக அமைந்தன.