Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம்.

  • PDF

இவை இரண்டு தளத்தில் நடக்கின்றது.


1) வர்க்க யுத்தம்


2) ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையில் நடைபெறும் யுத்தம்


வர்க்க யுத்தம் என்பது தவிர்க்க முடியாது சாராம்சத்தில் தேசிய யுத்தமாக உள்ளது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவை எதிர்த்தும் நடக்கும் இவ்யுத்தம் சொந்த தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சுரண்டலை எதிர்த்தும் நடத்தும் இவ்யுத்தம் ஒரு வர்க்க யுத்தமாக இருந்தாலும், சாரம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு தேசியமாக உள்ளது. இது சர்வதேசிய நிலைக்குள் நின்று நடப்பதுமாகும். இவ்யுத்தம் நிட்சயமாக பாட்டாளி வர்க்க தலைமையில் மட்டும் நடக்க கூடியது. இவ்யுத்தத்தில் பல்வேறு பிரிவை தனது தலைமையில் அணிதிரட்டும் பாட்டாளி வர்க்கம், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்கக் கோருகிறது. இதற்கு தேசிய முதலாளித்துவப் பிரிவு சுரண்டவும், அதை எதிர்க்கும் முரண்பாடான குணாம்சத்தை இந்த தேசியப் போரின் ஐக்கிய முன்னணி தன்னகத்தே கொண்டுள்ளது.


ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையே நடக்கும் மோதலும், அதன் ஆட்சி மாற்றங்களும் அடிப்படையில் அம்பலப்பட்ட பிரிவை அகற்றுவது அல்லது ஏகாதிபத்திய சுரண்டல் மண்டலங்களை கைப்பற்றுவது என்றளவில் உள்ளது.


பாட்டாளிகள் இரு பிரிவையும் எதிர்த்து, இதில் எழும் தேசியத்தின் பொய்மையை அம்பலப் படுத்தியும் போராட வேண்டும். மாறாக உண்மையான வர்க்கப் போரை, சாராம்சத்தில் தேசியப் போரை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளுர் ஆளும் அதிகார வர்க்கப் பிரிவுகளை எதிர்த்துக் கோர வேண்டும்.


ஆகவே தேசியம் என்றும் வர்க்கம் சார்ந்தது. தேசியம் என்பது குறைந்த பட்ச பொருளாதார அலகைப் பாதுகாத்தல் என்பதை தாண்டியது அல்ல. இந்தப் பொருளாதார அலகு நிலத் தொடர், கலாச்சராம், மொழி எனப் பல்வேறு துறைகள் மீது தனது ஆதிக்கத்தை பிரதி பலிக்கின்றது.