Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஒரு பல்தேசிய நாட்டுக்குள் நடக்கும் தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலைப் போராட்டம் என்பன ஏன், எதற்காக தோற்றம் பெறுகின்றன எனப்பார்ப்போம்.

ஒரு பல்தேசிய நாட்டுக்குள் நடக்கும் தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலைப் போராட்டம் என்பன ஏன், எதற்காக தோற்றம் பெறுகின்றன எனப்பார்ப்போம்.

  • PDF

இன்று பல்தேசிய இன நாட்டு தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலை யுத்தம் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் பண்புகளில் இருந்தே எழுகின்றது. மாறாகப் பாட்டாளி வர்க்கம் இதைக் கோருவதில்லை. ஏன் எனின் நாடு பிரிப்பதால் பாட்டாளி வர்க்கம் எந்த விதமான அனுகூலத்தையும் பெற்று விடுவதில்லை. அதாவது சுரண்டும் வர்க்கத்திற்கு இடையில் நடைபெறும் இழுபறியான போராட்டத்தையே மொத்த மக்கள் முன் தேசிய விடுதலைப் போராக நகர்த்துகின்றனர்.


இன்று உலகம் உலகமயமாதலில் வேகம் பெறுகின்றது. இது உலகில் உள்ள தேசிய செல்வத்தை இல்லாது ஒழிக்கின்றது அல்லது கைப்பற்றுகின்றது. பன்னாட்டு தேசம் கடந்த நிறுவனங்கள் உலகை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வகையில் பொருளாதாரச் சுரண்டலை தீவிரமாக்கியுள்ளது.


இந்நிலையில் தேசிய சொத்தின் வாரிசுகளான தேசிய முதலாளிகளின் சொத்துரிமை உலகளவில் மறுக்கப்படுகின்றது. குறைக்கப்படுகின்றது. இந்நிலையில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது.


ஆனால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் , இந்த ஏகாதிபத்திய யுகத்தில் இனியும் ஒரு வர்க்கமாக நீடிக்க முடியாது என்ற உலக மயமாக்கலின் விளைவு, அவர்களால் போராட முடியாத சரணடைவுப் பாதைக்கு இட்டுச் சென்று, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் தரகாக மாறி பாசிசமாக வளர்ச்சி பெறுகின்றது. இந்நிலையில் சொந்த தேசிய இழப்பீட்டை தரகு மூலம் தற்காலிகமாக சமாளிக்க முனையும் தேசிய முதலாளித்துவப் பிரிவு, தனது உற்பத்தி முறையை தரகு முதலாளித்துவமாக மாற்றி விடுகின்றது, மாற்றுகிறது.


இன்றைய உலக மயமாதல் தரகு முதலாளித்துவப் பிரிவைக் கூட இனித் Nவையில்லை என்றளவிற்கு, தனது வலையை விரிக்கின்றது. தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாகவே கொள்ளையடிப்பதன் மூலம் தரகுமுதலாளித்துவப் பிரிவுக்கு வீசி எறியும் எலும்புகளை தடுக்க முனைகின்றது. உலக மயமாதல் மேலும் மேலும் தீவிரமாக, மக்கள் தன்னிச்சையாகவும், திட்டமிட்டும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடத் தொடங்குகின்றனர்.


இதைத் தடுத்து நிறுத்த ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவப் பிரிவும் பாட்டாளி வர்க்கத்தை பிளவு படுத்த முனைகின்றன. இதனைச் செய்ய ஒரு தேசிய இனத்தை முன்னுக்குத் தள்ளி, மறு தேசிய இனத்தை கீழே தள்ளி, இனத்துக்கு இடையிலான மோதலைத் தொடங்குகின்றன. இதைச் செய்வதில் இரண்டு இன தரகு முதலாளித்துவமும் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் தேசிய முதலாளித்துவப் பிரிவு விழித்துக் கொள்ளுகின்றது. அத்துடன் அதற்கு தெம்பைக் கொடுப்பதுடன், தனக்கான பங்கை தக்க வைக்கவும், அதே நேரம் பிளவை மேலும் மேலும் ஊக்குவிக்கின்றது. அதாவது தேசிய முதலாளித்துவ ஒரு பிரிவு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதற்கு பதில் தேசிய இன முரண்பாட்டை பிளவு படுத்தி தீ வைக்க எண்ணெய் வார்க்கிறது.


இந்நிலையில் பாட்டாளி வர்க்கம் பல்தேசிய பாட்டாளிகளின் தலைமையில் ஏகாதிபத்தியத்திற்கு, தரகு முதலாளித்துவ பிரிவிற்கும் எதிராகப் போராட, வர்க்கப் போரை பிரகடனம் செய்கின்றனர். பல்தேசிய ஒன்று பட்ட தேசியத்தை அடிப்படையாக கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போராக, சாராம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்க எதிரான சர்வதேசியப் போராகவும் அமைகிறது.


இந்த வர்க்கப் போர் தேசிய இனங்களின் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்திய போராக இருக்கும். இந்நிலையில் முதலாளித்துவப் பிரிவு, தனது சொந்தப் பங்கை தக்க வைக்க, பெற, பாட்டாளிகளைப் பயன்படுத்த முனைகின்றது. இங்கு தேசிய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவு, பாட்டாளி வர்க்கம் சார்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒரு முற்போக்குப் பாத்திரத்தை வகிக்க முனைகிறது.
ஒரு பல்தேசிய இனத்தின் ஒன்று பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பை வர்க்க மற்றும் தேசியப் போராக மாற்றும் ஒரே ஒரு பாதை பாட்டாளி வர்க்கத்திடம் மட்டுமே இன்று உள்ளது. இதற்கு அப்பாற்பட்ட எந்த முதலாளித்துவப் பாதையும் இறுதியில் பாசிசமாக மாறி ஏகாதிபத்தியத்திடம் சரணடையும்.


பாட்டாளி வர்க்கம் ஒன்று பட்ட தேசிய இனத் தலைமையை பெறத் தவறும் பட்சத்தில் தேசிய இன முரண்பாடு தனித் தேசிய விடுதலைப் போராக மாற்றம் பெற்று விடுகின்றது. ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி அரசுகளும் திட்டமிட்ட இனப்பிளவை ஏற்படுத்த, அதைத் தேசிய முதலாளித்துவப் பிரிவு எண்ணை ஊற்றி வளர்த்தெடுக்கும் போது அது தனித் தேசிய விடுதலைக்கான ஒரு யுத்தமாக ஏற்படுத்தி விடுகின்றது.


இந்தத் தேசிய விடுதலைப் போர் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மீதும் திணிக்கப்பட்ட நிலையில், அத்தேசிய விடுதலைப் போரை ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காது பாட்டாளிகள் தமது கையில் சர்வதேசிய நிலையில் நின்று எடுக்க வேண்டும். .


முதலாளித்துவ சுரண்டும் பிரிவு தமது நலன்களைப் பாதுகாக்க திட்டமிட்டு உருவாக்கும் இன முரண்பாடு ஒரு தேசிய விடுதலைப் போராக மாறும், மாறிய காலத்தில், அப்போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் தனது கையில் சர்வதேசிய நிலையில் நின்று எடுப்பதன் மூலம், அப்போராட்டத்தை ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக உள்ளுர் சுரண்டும் தரகு முதலாளிக்கு, நிலப்பிரபுக்கு எதிராக மாற்றுவதன் மூலம, சொந்தப் பாட்டாளிகளையும் அணி திரட்டியபடி எதிர்தரப்பு பாட்டாளிகளை ஐக்கியப்படக் கோரவும் போராடுவதன் மூலம் ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்க கடமையை நிறைவு செய்ய முடியும்.


இலங்கையில் உள்ள இன்றைய நிலை இதுவாகும். மாறாக இந்தியாவில் தமிழ் நாடு போன்ற பிரதேசங்களில் இதற்கு எதிரான நிலையாகும். அதாவது தமிழ் நாட்டு தேசிய இன முரண்பாடு எகாதிபத்தியத்தாலும், தரகு முதலாளித்துவப் பிரிவாலும் ஏற்படுத்தப்படுகின்றது. இதை தமிpழ் முதலாளித்துவப் பிரிவு ஊக்குவித்து தேசிய விடுதலைக்கான யுத்தத்தை நடத்தக் கோரி நிற்கின்றது. ஆனால் பாட்டாளி வர்க்கம் சொந்த சுரண்டும் வர்க்கத்தையும், அன்னிய சுரண்டும் வர்க்கத்தையும் சரியாக இனங்கண்டு இருப்பதால், தேசிய இன முரண்பாட்டுக்குப் பதில் வர்க்க முரண்பாடு முதன்மையானதாக உள்ளதை இனம் காண்கிறது. தேசிய இனமுரண்பாட்டை சர்வதேசிய நிலையில் நின்று சுயநிர்ணய அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் போராடுகின்றது.


ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கல்தான் சொந்தத் தேசியத்தை சூறையாடுகின்றது என்பதை எவ்வளவு புரிந்து கொள்கின்றனரோ, அந்தளவுக்கு அவ் மக்கள் தேசிய இன முரண்பாட்டில் சிக்காது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று பட்ட வர்க்க தேசியப் போரை அறை கூவுவது நிகழ்கின்றது.


இந்தியாவில் அ. மார்க்ஸ் போன்றோரும் வேறு உதிரிக் குழுக்களும் தமிழ் நாடு பிரிவதற்கான ஒரு தேசிய விடுதலைப் போரை முன்னெடுப்பதுதான் இன்றுள்ள உடனடிக் கடமையாகக் காட்ட முனைகின்றனர்.


உண்மையில் இவர்கள் என்னதான் பாட்டாளி வர்க்கம் பற்றி திரிபை மூடிமறைக்க பேசினாலும் இந்தியாவில் உள்ள சுரண்டப்படும் மக்களின் வர்க்க ஐக்கியத்தை காண மறுக்கும் போது, அது இயல்பில் தேசிய முதலாளித்துவமாக சீரழிகின்றது.

 
ஏன் இந்தியப் பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியாது, என்பது பற்றி இவர்கள் விளக்கவில்லை. ஆனால் தேசிய இன முரண்பாடு உண்டு எனக் கூறுவதற்கு அப்பால் இவர்கள், அதைப்பற்றி ஆய்வு செய்யும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தை இழக்கின்றனர்.


சோவியத் புரட்சிக்கு முன் ருஷ்சியாவில் தேசிய இன முரண்பாடு இருந்தது என்பதும், இந்தியாவில் அது இருக்கின்றது என்பதும் பொதுப்படையானது. அப்படி இருக்க இந்தியத் தேசிய இன முரண்பாட்டிற்கு தனி நாடு கோரும் போராட்டம் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியக் கனவை நனவாக்குவதாகும். .


இன முரண்பாட்டின் பண்பியல் மாற்றம் ஏற்படும் போது மட்டுமே பிரிவினைக்கோரிக்கை முன்வருகின்றது.


ஈழத்து நிலமைக்குள்ள பண்பியல் மாற்றம் என்பது தமிழ் நாட்டுக்குக் கிடையாது. ஆகவே தேசிய இன முரண்பாடு பல் தேசிய நாடுகளில் ஒரு தேசிய விடுதலை போராக பண்பியலில் மாற்றம் அடைவது எப்போது என்றால் பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கக் கடமையைக் கைவிட்டு கைகட்டி நிற்கின்ற ஒரே ஒரு நிலையில் மட்டுமே ஆகும்.


பாட்டாளி வர்க்கம் தனது சர்வதேசக் கடமையை சரியாக முன்னெடுக்கும் எச்சந்தர்ப்பத்திலும் தேசிய இன முரண்பாடு தேசிய இன விடுதலைப் போராக ஒருக்காலும் மாறிவிடமாட்டாது.


அப்படி யுத்தம் கட்டாயப்படுத்தி திணிக்கப்படின், பாட்டாளி வர்க்கம் அதை முறியடித்து தனது அரசை நிறுவிக் கொள்ள சர்வதசிய அடிப்படையில் தேசியப்போர் ஊடான பாதை திறப்பதாகவே அமையும்.


உலகில் இன்று உள்ள பல்தேசிய நாடுகளில் உள்ள எல்லாத் தேசிய இன முரண்பாடும், தேசிய விடுதலை யுத்தங்களிலும், பாட்டாளி வர்க்கம் என்ன நிலையில் உள்ளது என்பதையும் பொறுத்தே, யுத்த தந்திரம் பிரதிபலிக்கின்றது. இந்த தேசிய இன முரண்பாடு சுரண்டும் பிரிவுகள் தமது சொந்த நலனுக்காக மக்கள் முன் இன முரண்பாட்டையும் விடுதலைப் போராட்டத்தையும் திணிக்கின்றன. இதை வெறும் "கற்பிதங்கள்" எனக் கூறுபவன் ஒரு மாங்காய் மடையன் மட்டுமன்றி, ஏகாதிபத்தியங்களின் கனவுகளை நிறைவு செய்ய, மக்கள் அடிப்படை உண்மையைப் புரிய விடாது தடுக்கும் ஒரு செய்முறை கோட்பாட்டை முன்நிறுத்துவதாகும்.


உலகில் உள்ள பல்தேசிய நாடுகளில் எல்லாத் தேசிய இன முரண்பாட்டையும், தேசிய விடுதலை யுத்தங்களும் இதற்கு வெளியில் மனிதனின் சிந்தனையில் உதித்த "கற்பிதங்கள்" உருவானதாக, ஒரு சமூக ஆய்வைத் தன்னும் காட்ட முடியாது, நிறுவ முடியாது.


எனவே பல்தேசிய இன நாடுகளின் தேசிய நெருக்கடியை காரண காரியத்துடன் எல்லாப் பக்கத்தையும் எடுத்து ஆராய்வது அவசியம். நுனிக் கொப்பில் நின்று தொங்கிய படி அடிமரம் பற்றி ஆருடம் கூறமுனையும் அ. மார்க்ஸ் போன்றோரின் கோட்பாட்டை விட்டு விட்டு கீழே இறங்கி வருவதா? அல்லது நுனியில் இருந்து தொப்பென்று விழுந்து அழிந்து போவதா? என்பது தான் உங்கள் முன் உள்ள ஒரே ஒரு பாதையாகும்.