Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

  • PDF

பிரான்ஸையும், பாரிசையும், புலம் பெயர் சமூகத்தையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கிய 11 வயது சிறுமி நிதர்ஷினி மீதான கற்பழிப்புக்கு, படுகொலைக்குப் பின்னால் கப்பம் மற்றும் கொள்ளையின் பின், தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் தமிழ் (கணிசமான பிரஞ்சு மக்களும்) மக்கள் திரண்டு தமது அனுதாபத்தை, அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர்.


மனிதக்குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் பாடசாலைக்கு வந்து பசி தீர்க்க ஆவலாக உண்ண புறப்பட்ட போது, காமப் பசியால் அலைந்த இரண்டு நாய்களுக்கு (பேட்சன், தியாகரூபன்) உணவாகியது மட்டுமின்றி, அக்குழந்தையைச் சுவைத்துண்டு வெறிதீர்த்த பின், மின்சார வயரால் கழுத்தை இறுக்கி வழக்கம் போலவே கொலைக் கலாச்சாரத்தின் அனுபவத்துடன் தடயத்தை அழிக்கும் கைவந்த கலையாகச் செய்து முடித்து வைத்தனர்.


தமிழ்ச் சமூக ஒழுக்க விழுமியங்கள் பெண் குழந்தைகள் மீது மிக கண்டிப்பான வகையில் கடைப்பிடிக்கும் ஆண்கள் சார்ந்த ஆணாதிக்கமும், அந்த ஆண் வர்க்கமும் தான், இப்படுகொலைக்கு முழுப் பொறுப்பாகும்.


குற்றவாளிகள் மிக திட்டமிட்ட வகையில் இயக்கப் போராட்ட அனுபவத்துடன் இந்தக் கோரத்தை நடத்தி தப்பியபோது, தற்செயலாகப் பிடிபட்ட நிலையில், அதன் பாதுகாப்பில் எல்லோரும் குற்றவாளி மீது காறி உமிழ்ந்தார்கள். ஆனால், குற்றவாளி தானாகச் சமூகத்தில் உருவாவதில்லை. குற்றவாளியை உருவாக்குபவர்களே பின்னால் குற்றவாளி மீது கண்டனம் செய்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்து ஒழித்துக் (மறைத்துக்) கொள்கின்றனர்.


பாலியல் வன்முறை எப்படி, அவன் முன் இரக்கமின்றி தோன்றுகின்றது? ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்துடன் கொலை வெறி எப்படி அரங்கேறுகின்றது? உழைக்க மறுத்து கொள்ளையடித்து சொகுசாக எப்படி வாழமுடிகின்றது? என்பதைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.


இந்தக் கொலை நடந்த அதே வாரம் வெளியாகிய பிரெஞ்சு ‘‘ஞருநுளுவுஐழுNளு னுநு குநுஆஆநுளு’’ (பெண்கள் பற்றிய கேள்விகள்) பத்திரிகையில் என்ற பொருத்தமான தலைப்பில் ‘‘ஆயுசுஊர்நு னுரு ளுநுஓநு – டுநுளு குநுஆஆநுளு யுருளுளுஐ’’ (பாலியல் சந்தையில் பெண்ணும் கூட) கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.


பாலியல் என்பது மனிதர்களில் இயல்பானது. இந்தப் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமூகம் இருக்காத எல்லா நிலையிலும், ஆண் - பெண்ணுக்கு இடையில் முரண்பாடுகள் வன்முறைகள் இயல்பாகின்றன. இந்த இடைவெளியில் கட்டியமைக்கப்பட்ட ஒழுக்கம் மனித வளர்ச்சிக்கு எதிரானதாக உள்ள போது, தனிமனித ஒழுக்க மீறல்கள் சமூகம் மீதான வன்முறையாக வெளிப்படுகின்றது.


இந்தச் சமூகத்தில் மனித வளர்ச்சியின் இயல்பான பாலியல் தேவை மறுதலிக்கப்பட்டு, அது இடையூறாக, மனித வளர்ச்சிக்கு மாறாக நலம் அடித்த மனிதர்களை ஆண் - பெண் வேறுபாடின்றி உலகில் விதைக்கப்பட்டு வெம்பிப் போனவைகளை, சமூகத்தின் ஜனநாயக எதிரியாகக் காட்டிய பின் அறுவடைகளை ஆணாதிக்க முதலாளித்துவ வர்க்கம் சூறையாடுகின்றது.


இந்த வகையில் நலம் அடித்த ஆண் - பெண் சமூகத்தின் முன், சினிமாவில், "பெண்"பாலுறவு (ளுநஒ) பதுமையாக எல்லாத் துறைகளிலும் மாற்றப்பட்டு விட்டாள். குழந்தைகள் முன் கொட்டிக் குவிந்துள்ள கணினி விளையாட்டுகளில், ஆண் பெண் உறவை விளையாட்டுப் போல் ஈடுபட்டு இன்பம் காணும் கணினியில் காட்டூன்களில், (கேலிச்சித்திரம்) விளம்பரங்களில், பயன் படுத்தக் கோரும் உடைகளில், தொலைக்காட்சியில், பொழுது போக்கு என திரும்பும் இடமெல்லாம் பெண் மீதான பாலுறவு (ளுநஒ) கவர்ச்சியே பின்நவீனத்துவக் கோட்பாட்டில் உலகமயமாக்கப்பட்டுள்ளது. இன்று மறுதலையாகப் பெண்களைக் கவர ஆண்கள் கூட, பெண்கள் முன் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டுவிட்டனர். செக்ஸ் கிளப்புகள், காபரேக்கள், மசாஜ் நிலையங்கள், துகில் உரியும் நிலையங்கள் ஆண் - பெண் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவரவர் இரசனைக்கு ஏற்ப இந்த ஜனநாயக மூலதனம் உருவாக்கிப் பாதுகாக்கின்றது.


ஆணாதிக்கம் ஆண் முன் இந்த கவர்ச்சிகரமான வியாபார இரசனை மோசமான பண்பியல் பாய்ச்சலை, தனிநபர் ஒழுக்க மீறல்களை அரங்கேற்றுகின்றது. அப்போதுதான், இது சட்டத்தின் முன் மாபெரும் குற்றமாக, ஆணாதிக்க ஒழுக்கத்தின் முன் அத்து மீறலாக வடிவம் பெறுகின்றது.


பால்மணம் மாறாத தமிழ்ச் சிறுமியின் மீது தமிழ் ஆணாதிக்க ஒழுங்கு மீறல் மூலம் வன்முறையைக் கையாண்ட தமிழ் காமுகன் எப்படி உருவாக்கப்படுகின்றான்? இதுவல்லவா எதிர்காலத்தில் சிறுமிகள் மட்டுமல்ல, பெண்கள் மீதான பாலியல் வன்முறையைத் தடுக்க போராடமுடியும்?


ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்? என சாதாரண உலகம், கடந்தகால இலக்கியத்தின் உவமைகள் உடன் மதத்தின் துணையுடன் பெண்ணை ஆணின் பதுமையாக காட்டவே செய்கின்றது. பெண் ஆண் போல் ஓர் உயிர் என்பதை ஏற்க மறுத்து ஆணின் நுகர்வுக்கும், போகத்துக்கும், ஆணின் கடமைக்கும் மட்டுமே ஆண்டவன் படைத்தான் என்பதன் மூலம், பெண்கள் கணவன் என்ற ஆணின் முன் பாலுறவு (ளுநஒ) பண்டமாக மட்டும் இருக்க கோரும் ஒழுக்கவியல், மற்ற ஆண்கள் முன்னும் நுகர்வுக்குரிய பொருள்தான்.


இந்த ஆணாதிக்க ஒழுங்கைக் கட்டிக் காக்கும் சடங்குகளை ஒட்டிய மந்திரம் எப்படி பெண் மீதான கற்பழிப்பைச் செய்கிறது எனப் பார்ப்போம். திருமணத்தில் கூறும் சமஸ்கிருத மந்திரத்தின் ஒரு பகுதியில் பெண்ணை நோக்கி "நீ இதுவரை இந்திரனுக்கு ஒருநாள் மனைவியாக, பின் தேவர்கள் அனைவருக்கும் மனைவியாகி, பின் எனக்கு மனைவியாகி, இப்பொழுது நான் உன்னை இவனுக்கு மனைவியாக்குகிறேன்"(2.6)69 என்கின்ற போது பெண் பண்டமாக, ஆணின் வக்கிர பாலுறவு (ளுநஒ) தேவையைப் ப+ர்த்தி செய்யும் உயிரற்ற ஜடம்தான். படத்தில் முகம் பார்த்த திருமணங்கள், பெண்ணைப் பார்த்த திருமணங்கள் எல்லாம் ஓர் ஆணைப் ப+ர்த்தி செய்வதையே நோக்கியுள்ளது.


புலம் பெயர் சமூகத்தில் கணிசமான கனடா இளைஞர்கள் தமது மனைவியை, குழந்தையைக் கனடாவில் விட்டுவிட்டு இந்தியா சென்று தமது உல்லாசத்தை எப்படி கழிக்கின்றனர் எனப் பார்ப்போம். தாம் திருமணம் செய்ய வந்ததாகக் கூறி கன்னிகழியாத இளம் பெண்களைச் சீதனத்துடன் பெற்று, அவர்கள் பணத்தில் ஒரு மாதம் சம்மதத்துடன் கற்பழித்து நடுரோட்டில் பிள்ளையுடன் விட்டுச் செல்வது வாடிக்கையாக உள்ளது. பணம் வாங்கி, கொழுத்த விருந்துடன் உல்லாசப் பயணம் செய்யும் தமிழன் மூளை அல்லவோ மூளை. இது ஒரு பெண் தனது திருமணத்தில் அவள் சம்மதத்துடன் எப்படி கற்பழிக்கப்படுகின்றாள் என்பதைக் காட்டுகின்றது. இங்கு ஏமாற்றுவது மட்டும்தான் நிகழ்ச்சியில் வேறுபடுகின்றது. அதைத் தாண்டி எந்த விளக்கத்தையும் தங்கை என்பதாலோ, அக்கா என்பதாலோ மாறிவிடுவதில்லை. அக்கா, தங்கை என பல வகையில் விளித்தல் கூட, தப்பு நடந்து விடும் என்ற ஒழுக்கத்தைப் பாதுகாக்கத்தான்.


இன்று உயர்ந்த கலை படைப்பாளிகள் எனப் பலர் புகழ் பிழைக்கும் சுதந்திரமான ஜனநாயக தனிமனித உரிமைகளின் வரைவிலக்கணம் விபச்சாரமாகும். இதன் பிம்பமாகத் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகி முதல் அனைத்துப் பெண்களின் தெரிவு, காட்சி, காட்சி படிமங்கள், வசனங்கள், பாடல்கள் .. என அனைத்தும் பெண் மீதான கவர்ச்சியை வைத்து சினிமாவாக்கி ஆணாதிக்கச் சமூகம் முன் காட்சிப்படுத்தப்படும் போதும், அதனால் உணர்ச்சி வயப்பட்ட ஒரு நபர் சமூகமீறலைச் செய்து சமூக ஒழுக்கத்தை மறுத்து காமுகனாகி பெண்ணைக் குதறும் போதும், எப்படி அவன் மட்டும் குற்றவாளியாகக் காணமுடியும்.


இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து, அதைப் போற்றும், அதில் கலை அம்சத்தை மெச்சி பாதுகாக்கக் கோரும், அதில் தனிமனித உரிமையைக் கோட்பாட்டில் கோரும்.... அனைவரும் தான் முதல் குற்றவாளிகள். அதன் பின் இதில் ஈடுபட்டவன் இரண்டாவது குற்றவாளியாகின்றான். ஆனால் வழக்கில் எதிர்மறையே எப்போதும் உள்ளதுடன் தூண்டியவன் இந்த அமைப்பின் காவலன் ஆகின்றான்.


இன்று வெகு விமர்சையாக நடத்தும் நாட்டிய அரங்கேற்றங்கள், எப்படி பாலியலைத் தூண்டுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது எனப் பார்ப்போம். இசை மற்றும் அதையொட்டி ஆடுவது எல்லாம் மனிதன் உழைத்துவிட்டு அதன் களைப்பைப் போக்க, தமது துயரங்களை மறக்க தன்னியல்பில் தமக்குள் உருவானவை என்பதை மறுத்து, நடனங்கள் ஆடிக் காட்டுவதற்காக, அதை இரசிப்பதற்காகப் பெண்கள் பல விதத்தில் அலங்கரித்து அரங்கேற்றப்படுகின்றனர். அதாவது மொடலிஸ் எதைச் செய்கின்றாளோ, அதே போன்று வாழ்க்கையில் எந்த விதத்திலும் நடனத்தை, இசையைப் பயன்படுத்தாத வகையில் அரங்கேறும் அரங்கேற்றங்கள், பெண்ணை ஆணாதிக்கச் சமூகம் முன் இரசிப்புக்காக, கவர்ச்சிக்காக அரங்கேற்றுவதன் மூலம், அப்பெண் பல ஆண்களின் கனவுக் கன்னியாக, அதே நேரம் நினைவில் கற்பழிக்கப்பட்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகக் கூடிய வகையில் அரங்கேற்றம் பாலுறவு (ளுநஒ) பதுமைகளைச் சமூகம் மீது கவர்ச்சியாக்கி விடுகின்றது.


பார்ப்பனர்களின் முன், பழைய நிலப்பிரபுத்துவக் கால மன்னர்கள் முன், நிலப்பிரபுக்கள் முன் கோயிலில் விபச்சாரியாக விடப்பட்ட தேவதாசிகள், விபச்சாரத்தின் முன் ஆடிக்காட்டிய அரங்கேற்றங்கள், பெண்ணை ஆடவிட்டு பெண்ணை அவர்களின் வைப்பாட்டியாக மாற்றிய தொடர்ச்சியில் தான் உருவானது. ஆனால் இந்தப் போக்கு முடிவுக்கு வந்தாலும் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் பழையதை மறுத்து, புதியதைக் கோரும் பின்நவீனத்துவ உலகமயமாதலில் ஆண்களுக்கு விளம்பரமாகி கவர்ச்சி நாயகியாகும் பெண், ஆணாதிக்கவாதிகளால் மனதிலும், படத்திலும் கற்பழிக்கப்பட மட்டுமே அரங்கேற்றம் நீடிக்கின்றது.


இதுபோலத்தான் சாமத்தியச் சடங்குகளும் நடக்கின்றன. ஒரு பெண் ஆணின் இரசனைக்கும், மனதில் கற்பழிக்கவும், பிள்ளை பெற தயாராகப் பெண் உறுப்புகள் வளர்ச்சி பெற்று விட்டது என்பதையும் பறை சாற்றும் வகையில் மட்டும் சடங்குகள் என்ற பெயரால் நடத்தப்படும் கேவலங்கள், ஆணாதிக்கச் சமூகம் முன் அப்பெண் கூர்மையான பார்வைக்கு உள்ளாக்கப்படுகின்றாள். ஏன் கொல்லப்பட்ட அக்குழந்தையின் சாமத்தியச் சடங்கும் மிக அண்மையில் தான் பெரிதாகக் கொண்டாடியதாக அறியும் போது, குற்றவாளிகளுடன் இருந்த சட்டத்துக்குப் புறம்பான கொடுக்கல் வாங்கலுடன் பெற்றோரின் முன் தொடர்பு, சாமத்தியச் சடங்கு மூலம் பிள்ளையை விற்று பணம் வாங்கும் பெற்றோரின் அழைப்புக்கு உட்பட்டு இருக்கும் வாய்ப்புகள் இருக்கும் என ஊகிக்க முடிகின்றது.


இறந்த நிதர்ஷினியின் பெயரில் எழுதிய கவிதையில் ஆணாதிக்கம் கொப்பளிக்கும் வரிகளைப் பார்ப்போம். "..கரும்பே, கற்கண்டே, என்று - என்னை ஆரத் தழுவி - பாசம் சொறிந்து - வாழ்த்துக்கள் கூறி - மாதம் எட்டு கூட ஆகவில்லை"70 என்று மீளவும் இச்சமூகம் முன், மீள அக்குழந்தையைக் கற்பழித்ததைக் இது (என்ன எட்டு மாதம்) காட்டவில்லையா? அக்குழந்தை மீதான ஆர்வத்தை, தூண்டுதலைப் பொறுப்பற்ற ஆணாதிக்கப் பெற்றோர்கள் தமது பொறுப்புணர்ச்சியற்ற போக்குகளால் ஊக்குவித்தனர், ஊக்குவிக்கின்றனர். ஒரு பெண் தனது இறந்த முட்டைகளை வெளியேற்றுவது (மாதவிடாய்) என்பது இயல்பானது. ஆனால் அந்த இயற்கையின் வளர்ச்சி மாற்றத்தை விற்பதிலும், பாதுகாப்பதிலும் சமூகச் சடங்குகள் என்ற பெயரில் பணச் சடங்கு நடத்தும் சீரழிவுகள், பெண் குழந்தைகளைச் சுதந்திரமாக இந்த ஆணாதிக்க உலகில் நடமாடவிடாது, ஆண்கள் முன் வெட்கிப் போய் வன்முறைக்குப் பலியிட தயாரான ஆடுகளாக நடமாடவிடுகின்றது இந்தக் கேடுகெட்ட சமூகம்.


நாடகம், கதை, கவிதை, ஓவியம் ...என இலக்கியத்தில் பெண் வருணிப்பு என்பது ஆண் முன் கிளர்ச்சியை ஏற்படுத்தும் உளவியலாக உருப்பெறுகின்றது. இதன் வெளிப்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஒருவனைக் குற்றவாளியாகக் காட்டி துண்டுப்பிரசுரம், அனுதாப அஞ்சலிகள் குவிப்பதால் இந்த உணர்ச்சியைத் தூண்டும் போதைகளை மறைமுகமாகப் பாதுகாக்கின்றனர். போதை மனிதனை மெய் மறக்கச் செய்கின்ற போது, சமூகத்தைக் கட்டுடைத்து ஒழுக்கத்தை மீறி குற்றத்தைத் தூண்டியது போதையே ஒழிய, தனிப்பட்ட அவன் அல்ல. யாரும் கற்பழிப்பதற்காக மண்ணில் பிறப்பதில்லை. சமூகம் தான் குற்றவாளிகளை உருவாக்குகின்றது. அது ஒருசிலர் மீது கட்டுப்படுத்த முடியாத வெறியாக வளர்ந்து விடும் போது திட்டமிட்ட வகையில் அதை அனுபவிக்க தொடங்குகின்றது.


சமூகத்தைப் புரட்டிப் போடப் போவதாகக் கூச்சலில் ஈடுபடும் பின்நவீனத்துவ வாதிகளின் அனுசரணையுடன், அண்மையில் எக்ஸில்:5-இல், பிரெஞ்சில் கவிதை எழுதுவதாகக் கூறப்படுபவரும், புகலிடச் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான காலமோகன் (என உப்புச் சப்பு இன்றி புகழ்பவர்கள்.) தனது பெயரை மறைத்து "ஜெயந்தீஸ்சன்"என்ற புனைபெயரில் தனது ஆசையை நண்பியிடம் (பெண் நண்பர்) கூறி, நண்பிகள் உடன் கூட்டுக் கலவி செய்ய வேண்டும் எனக் கூறி பலவித ஆசைகளும் ஐடியாக்களும் (நிதர்ஷினி மீது அந்த வன்முறைகள் குதறிய போது இரண்டு மிருகத்தின் கூட்டுக் கலவியின் ஐடியாக்களை இந்த எழுத்துக்கள் போன்றவைதான் தூண்டியதோ?) மின்னிப் பொறித்தன என தனது வக்கிரத்தைக் கொட்டுகிறார்.


இது போல் இருண்ட "இருள் வெளி" மலரில் அரவிந் அப்பாத்துரை என்ற ஏகாதிபத்தியக் கழிசடை தனது சிறுகதையில், ஒரு பெண் சினிமா பற்றிய புத்தகத்தில் ரஜினி, கமல்.. போட்டோவைப் பார்த்து விட்டு, பக்கத்து அறையில் இருந்தவர்கள் உடன் உறவு கொள்ள ஆசைப்பட்டாள் என்கின்றார். இது போல் பக்கத்து அறையில் இருந்த மூவருடன் உறவு கொள்ள எண்ணினால் அதையே கற்பழிப்பாக நடத்தினால், செய்ய ஆசைப்பட்டால் இலக்கியமோ?


கனடா நாட்டில், ஒரு பெண்ணியவாதியுடன் உடல் உறவு கொண்டது போல் பாவனை செய்து எழுதிய எழுத்தாளரையே, கற்பழித்த குற்றச்சாட்டில் கம்பிகளை எண்ண வைத்தது. இதே போல் எக்சில்: 2 - இல், பெண்கள் தன் மார்பை இந்தாபிடி இந்தாபிடி என திரிபவர்கள் என சுகன் (இவர் தலித்தியம் பேசி அதன் அரசியல் விபச்சாரத்தில் வேட்டி கட்டிக் சாமத்தியச் சடங்கின் பிரதான காதநாயகனாக, பார்ப்பனருக்கே ஆணாதிக்கத் தலித்தாக வழிகாட்டியவர்.) எழுதியதும், அதை அம்மாவில் சேனன் போற்றியதையும் (போற்றியதற்காகச் சுகன் தலித் தண்ணீர் அடிக்க 100 பிராங் வழங்கினார்.) பார்க்கின்றோம்.


ஏன் இதைப் பிரசுரித்தோர், இதைப் போற்றுவோர் தமது மனைவியுடனோ, தமது தங்கையுடனோ அல்லது அப்பெண் தனியாகவோ, வேறு பெண்களோ போகும் போது இதை வாசித்து, இதைச் சரியென ஏற்றுக் கொண்ட ஒருவன் அல்லது உணர்ச்சி வயப்பட்ட ஒருவன் பெண்கள் தங்கள் மார்பை "இந்தாபிடி இந்தாபிடி"என "பிடிக்க" திரிபவர்கள் என பின்நவீனத்துவத் தத்துவப்படி பிடித்தால், பிடித்தவனை ஆணாதிக்கவாதி என்று கூறி, கழுவில் ஏற்ற, எழுதி பிரசுரித்தவர்கள் ஈறாகப் பலர் பின் நிற்க மாட்டார்கள்.


ஆனால் உண்மையான குற்றவாளி யார்? இதை எழுதித் தூண்டிவர்களே என்பது மறைக்கப்பட்டு, இலக்கிய இரசனையால், ஊர் உலகத்தில் இல்லாததையா எழுதினோம் என்றும், கட்டுடைப்பு இப்படித்தான், கவிழ்த்துப் போடல் இதுதான், ஒழுங்கு மீறலின் உன்னதமான படைப்பு என பலவாகக் கூறி குற்றத்தைத் தூண்டியவன் தப்பிவிடுகின்றான். நடைமுறையில் குற்றவாளி ஊர் உலகத்தில் இல்லாததையா நடைமுறைப்படுத்தினான் எனின் இல்லை என்பதையும் மறுக்க முடியாது. இந்த உலகத்தில் இலக்கியம் வேறு நடைமுறை வேறு அல்ல, என்பதை, நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இதற்கு உண்மைச் சம்பவம் ஒன்றைச் சுட்டுவது அவசியம். யாழ் பல்கலைக்கழகத்தில் கி.பி. 1985-இல், நடந்த (ராக்கிங்) பகிடி வதையைத் தொடர்ந்து அதில் பெண்கள் பற்றியும், ஒரு குறித்த பெண்ணைச் சுட்டியும், அப்பெண்ணின் மார்பு பற்றிய வருணணையால் உந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவன் முதலாம் வருட பெண்ணின் மார்பைச் சிலர் முன் பிடித்தான். இதனால் அவமானப்பட்ட பெண் அன்றிலிருந்து தனது படிப்பைத் தொடராத மன நோயாளியாகச் சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டாள். இந்தச் சம்பவத்தைத் தெரிந்தவர்கள் மறைக்க, தெரிந்த நிர்வாகம் மூடிமறைத்த நிலையில், என்முன் சில பெண்கள் இதைக் கூறினார்கள்.

 
இதை அடுத்து உடனடியாகவே பகிஸ்கரிப்புக்கு (புறக்கணிப்புக்கு) அழைப்பு விடுத்து, ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கவே பல்கலைக்கழக மானத்தைக் காப்பாற்ற விழுந்தடித்து வந்த நிர்வாகம், உடனடியாகவே அம்மாணவனை மூன்று வருடக் காலம் பல்கலைகழகத்தில் இருந்து நீக்கியது. இருந்த போதும் உண்மையான குற்றவாளி அவன் மீதான வக்கிரங்களைத் தூண்டியவர்கள் என்பதுதான் யதார்த்த உண்மையாகும். தூண்டிய குற்றவாளிகள் இன்று பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக, சமூகத்தின் முன்னோடிகளாக இருந்து சமூகத்திற்கு வழிகாட்டுகின்றனர். இதைத்தான் சிலர் சமூக மாற்று இலக்கியமாகத் தமது ஆணாதிக்க வக்கிரத்துடன் எழுதியும், பாராட்டியும், பிரசுரித்தும் அங்கலாய்க்கின்றனர்.


கி.பி. 1985-ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக (ராக்கிங்கில்) பகிடி வதையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூற எழுதப்பட்ட துண்டுப் பிரசுரத்தை, நான் தனியாக விநியோகித்தேன். அதில் "ஒரு மாணவியின் மேலாடைகளை அவள் எவ்வாறு கண்ணாடி முன் நின்று கழற்றுவாள் என்று அவள் முன்னாலே லேசாகவே பேசும் நீங்கள் உங்கள் தங்கையின் மேலாடை கழற்றப்படுவதைப் பற்றி யாராவது பேசினால் என்ன செய்வீர்கள்?"எனக் கேட்டு எழுதப்பட்ட துண்டுப் பிரசுரத்தை நான் தனியாக விநியோகித்தேன். மேலும் "கிராமிய நிலப்பிரபுத்துவப் பண்பாடு பெண்களை அடிமைகளாகக் கருதுகின்றது. முதலாளித்துவப் பண்பாடு அவர்களைச் சந்தைப் பொருட்களாகப் பார்க்கின்றது. உங்கள் ராக்கிங் கேள்விகள் ச(ந்)தைப் பொருட்களாகவும், அடிமைகளாகவும் கருதும் கலப்பான பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல.


உங்கள் கேள்விகள் பெண்கள் பற்றிய ஏகாதிபத்தியங்களின் காமவிகாரப் பண்பாட்டுப் பிரச்சாரங்களில் இருந்து பெற்ற வக்கிரமான மன உணர்வுடன் வெளிப்படுகிறதே அன்றி.. ..கலாச்சாரப் பண்பாட்டு அம்சங்கள் பல (தமிழ், ஆங்கிலம்) திரைப்படங்கள், சஞ்சிகைகள் மூலமாக அறிமுகமாகும் ஏமாற்றுக் கலை வடிவங்கள் மக்களை வெறியர்களாக்கி சீரழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்குடன்.."என்று அம்பலப்படுத்தி எழுதப்பட்ட துண்டுப் பிரசுரத்தை விநியோகித்த போது, "எனக்கு மனநோய்"என்று துண்டுப் பிரசுரம் போட்டு பத்திரிக்கையில் பிரசுரித்தனர். அதையே நன்னி நன்னி போராடியதாகக் கூறி மீளவும் அதே நோக்கத்துக்காக எனக்குக் கல்வெட்டு அடித்தார் ஷோபாசக்தி. பெண்கள் மீதான ஆணாதிக்க ஊற்று மூலத்தைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியப் பண்பாட்டை இன்று இலக்கியமாக, தமது ஆணாதிக்க வக்கிரத்துடன் வெளிப்படுத்துவது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. அதைப் போற்றுவோர், அதை வெளியிடுவோர் என அனைவரும் இச்சமூகத்தின் குற்றவாளிகளே.


ஏன் விடுதலைப் போராட்டத்தைக் குத்தகைக்கு எடுத்த விடுதலைப் புலிகள் ஆணாதிக்க ஒழுக்க மரபைப் பாதுகாக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியில், வீதிகளில் பெண்கள் மீது பகிடி விடுவோரையும் தமது கட்டுப்பாட்டை மீறுவோரையும் கட்டுப்படுத்த தமது அடியாட்படையாக, இந்தப் பாலியல் வன்முறைக் கொலைக்காரர்களை வைத்து தாக்குதலை நடத்தினர். இந்த நிகழ்வால் தான், பாரிஸ் ஈழமுரசு 16.02.1999 - இல், "புல்லுருவிகள்"என ஆசிரியர் தலையங்கம் எழுதியதன் மூலம், மெதுவாக நழுவ முயன்ற போதும், குற்றவாளிகளின் பெயரை வெளியிடாது (பிரெஞ்சு தொலைக் காட்சி பெயரை வெளியிட்டு இருந்தது.) கரைப்பகுதியைச் சேர்ந்தவர் என்று போட்டது. மக்களிடம் இருந்து "ஏன் பெயர் போடவில்லை"என்ற கேள்வியால் அடுத்த இதழில் பெயரைக் குறிப்பிடுகின்றனர். இதில் கரை பகுதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டது (ஊரின் பெயர் பாவிக்காது.) என்பது சாதிப் பெயராகி புதிய சர்ச்சையாகியது. இதை அடுத்து அடுத்த நாள் மன்னிப்பு கோருகின்றனர். தாம் எப்படி தமது அடாவடித்தனங்களுக்கு இயக்கத்தினுள் வைத்து குற்றவாளிகளைப் பயன்படுத்தி சேவை பெற்று வளர்ந்ததை, சுயவிமர்சனம் செய்து போராட்டத்தைத் தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பான பணியைக் கைவிட்டு, யார் அவன் என்பது முதல் பெயரை மறைத்து, ஊரை மறைத்ததன் மூலம் குற்றவாளிகளின் ஊற்று மூலத்தைத் தொடர்ந்து திறந்தே வைத்துள்ளனர்.


குற்றவாளி, ஊரில் இயக்கத்தை விட்டு ஏன் வந்தார்?, இந்த மாதிரி கொடூரமான கொலைகளைச் செய்ய இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்த போராட்டம் காரணமா? அங்கு தண்டனை பெற்றவரா?, பின் எப்படி மீள இயக்கத்துடன் இயங்க முடிந்தது? விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பில் தனிப்பட்ட முறையில் பணம் சேர்த்தாரா? பல பெண்களை மிரட்டி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அதைப் படமாக்கி மீள மீள பெண்களைப் பயன் படுத்தியது, வேறு பெண்கள் மீதான கொலைகள் என மக்களால் கேட்கப்படும், பேசப் படும் இது போன்ற பல விடயங்கள் பற்றி எல்லாம், யுத்த ஆய்வு போல் விடுதலைப்புலிகள் செய்து, குற்றவாளிகள் உருவாகும் ஊற்று மூலத்தைக் கண்டறிவதன் மூலம், தமிழ் மக்களின் நம்பிக்கையை அல்லவா ஊட்டியிருக்கவேண்டும். இல்லாது மக்களுக்குள் மக்கள் பேசிய இரகசியமான விடயமாக இது நீடிக்கும் சமூகம் உள்ள வரை, குற்றவாளியின் ஊற்று மூலம் எல்லாவற்றிலும் தொடர்வது தவிர்க்கமுடியாது.


இதை வைத்து ஜனநாயகமாகச் சுதந்திரமாகச் செய்தி விடுவதாகக் கதையளந்து குரு ஈழமுரசை அடியொற்றி பத்திரிக்கை நடத்தி பிழைப்போர், வானொலி, தொலைக்காட்சி நடத்துவோர் என எல்லோரும், பிணத்தின் மீது உண்மைகளை ஆராயத் தவறி, குற்றவாளி மீது தமது திட்டுதல் ஊடாக, குழந்தையின் பால் முகம் மீது தம்மைத் தாமே மறைத்துக் கொண்டனர்.


பாரீஸ் புத்தகக் கடையில் விற்கும் வக்கிரமான நீலப்படப் புத்தகங்கள் மீதும் அஞ்சலிக் கவிதை பாடியும், பாரிஸ் வியாபார நிலையங்களில் விற்பனைக்காகப் பரப்பியுள்ள இந்திய மலின சஞ்சிகை மீதான கவர்ச்சி பெண்கள் மீது கறுப்புக் கொடி கட்டியும் துக்கத்தைப் பறக்க விட்டதன் மூலம், நேரடிக் குற்றவாளிக்கு எதிராக மறைமுகக் குற்றவாளிகள் ஆணாதிக்க எதிர்ப்புவாதிகளாகி ஒழுக்கத்தின் பாதுகாப்பாளராகி விடுகின்றனர். ஆனால் அக்குற்றவாளி கிளுகிளுப்பூட்டும் எத்தனை நீலப்படப் புத்தகத்தைப் படித்தும், எத்தனை கவர்ச்சி நாயகிகளின் படத்தை வாங்கி கண்டு களித்து ரசித்ததனால் வெறியூட்டுதல்களை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரிந்ததே. வக்கிரங்களை தூண்ட காரணக்கர்த்தாவாக இருந்த உங்கள் கைகள் கறுப்புக் கொடி கட்டினால் சுத்தமானவையாக மாறிவிடுமோ? இப்படி உருவேற்றப்பட்ட எத்தனை பேர் ஆணாதிக்க ஒழுங்குக்குப் பயந்து உணர்ச்சியை அடக்கிய படி, அமைதியாக நடமாடுவர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.


சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவரையே உழைக்க வைத்து அதில் சுகம் காண்பது எல்லாம் இந்த ஜனநாயக அமைப்பில் பாதுகாக்கப்படுகின்றது. நாகரிகம் அடைந்த முதலாளித்துவ - நவீனத்துவ வளர்ச்சியிலும், இன்று உலகமயமாகும் பின் நவீனத்துவக் கால ஏகாதிபத்திய மேற்கு நாடுகளிலும் சிறுவர் மீதான 18 மணிநேர உழைப்பு, சிறுவர் மீதான பாலியல் வன்முறை ஒரு நூற்றாண்டுக்கு முன் மிகக் கோரமாக இருந்தது. அது சில பண்பியல் மாறுபாட்டுடன் உலகு எங்கும் எல்லா இடத்திலும் இன்று உள்ளது.


இந்த வன்முறைகளில் ஈடுபடும் கட்டற்ற ஒழுக்க மீறல் அவர்களின் தனித்த பண்புடன் பிறப்பதில்லை. மாறாக இந்த ஆணாதிக்கச் சமூகம் உற்பத்தி செய்கின்றது. இந்தக் குற்றத்தின் பொறுப்பாளிகள் நாம் எல்லோரும் என்பதை உணர்ந்து கொள்வதும், அதை மாற்ற நாம் போராடுவதும் அவசியம். குற்றவாளியைக் கைது செய்தல், தண்டனையைக் கொடுத்தல், கண்டன அறிக்கைகள், கறுப்புக் கொடிகள் ஆகியவை எல்லாம் சிலர் பிழைக்கவும், நாளை மறந்து போகவும் மட்டுமே நடக்கும். இதன் சமூக ஊற்று மூலத்தைக் கண்டறிவதும், அந்த நோயைத் தீர்க்க போராடுவதுமே இக்கொலைக்கு முன் உள்ள பிரச்சினை. நாளை இன்னுமொரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகாத சமூகத்தைப் படைக்க போராடாத வரை இது போல் நடப்பதற்குத் துணைபோகின்றோம் என்பதை மறந்தாலும், மறுத்தாலும் அவர்களும் குற்றவாளிதான்.


இந்தக் பாலியல் வன்முறைக் கொலைகள் சமூக ரீதியில் பாரிய மாற்றத்தை எதிர் நிலையில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் மீதான கட்டுப்பாடு, அடக்குமுறை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளின் நியாயமான கேள்விகள், இதைக் காட்டி மறுக்க, நியாயவாதியாக மாற்றிவிட்டது. இங்கு ஒரு பெண் குழந்தையை மட்டும் அந்த ஆணாதிக்கக் காமுகர்களும், இதற்குத் துணைபோன கவர்ச்சி வியாபாரிகளும் கொத்திக் கிளறி குழந்தையை அலங்கோலம் செய்து படுகொலை செய்யவில்லை. மாறாக பாரிசிலுள்ள, புலம் பெயர் சமூகத்தின் எல்லாப் பெண் குழந்தைகளையும் ஆணாதிக்கக் கொடூரத்துக்குள் சிறைவைக்க அறைகூவல் இட்டு நடைமுறைக்குள் நகர்த்தியுள்ளனர். இந்தப் பாலியல் வன்முறைக் கொலைகள் அந்தப் பெண்ணையும் இச்சமூகத்தில் இருந்து மீட்கவில்லை, எல்லாப் பெண்களையும் கவனம் என்ற ஆணாதிக்கக் கொடூர புதிய சிறைக்குள்ளும் இட்டுச் சென்றுள்ளது.


பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பழகும் நல்ல நண்பர்களை, தொழில் ரீதியாகத் தொழில் புரியும் விசா அற்ற, தொழில் அற்ற, கட்டடத் தொழிலாளர்கள் மீது சந்தேகங்களை, சங்கடங்களை விதைத்துச் சென்றுள்ளது. இருக்க கூடிய குடும்பப் பந்த உறவுகள் சிதைய, கூட்டுக் குடும்பங்கள் சிதைய, குடும்பம் சிதைய முன்னோடியாகியுள்ளது. மனிதர்களின் நல்ல நேச மனப்பான்மை என்பது மேலும் மேலும் சிதைந்து சிதற, பெண் குழந்தைகள் இறுக்கமான கட்டுபாட்டுக்குள் நசுங்க, குற்றவாளியின் மூலக் காரணத்தை ஆராய மறுத்து, இச்சமூகம் புதிய குற்றவாளியை உருவாக்க, ஈடுபட்ட குற்றவாளிகள் வழிகாட்டிச் சென்றுள்ளனர்.


குறிப்பு: இக்கட்டுரையின் கீழ் வெளியிட்ட பல அஞ்சலிகள் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கின்ற, அதைப் புகட்டுகின்ற, அதை இறுக்குகின்ற சில மாதிரிகளை மட்டும் இங்கு எடுத்து விமர்சித்துள்ளேன். இது போல் பத்திரிக்கைகள், வானொலிகள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் பற்பல ஆணாதிக்க வக்கிரங்களைத் தமது அஞ்சலி ஊடாகக் கொட்டியிருந்தனர். அதே நேரம் கடந்தகால ஜனநாயக விரோத அடக்குமுறைகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் நியாயப்படுத்தியிருந்தனர்.

 
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியில் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளில் "தமிழன் போயும் போய் தமிழச்சிக்குச் செய்யலாமோ"என்பதன் ஊடாகத் தமிழ் இனவாதிகள் தமிழச்சி அல்லாத வேறு பெண் (சிங்களப் பெண்) என்றால் எல்லாம் சரி என்ற மாதிரி துடித்து பதைத்து கதைத்தோரை என்ன என்பது?


அஞ்சலிக் கவிதை ஒன்றில் "ஐயோ! அன்னை மடி சுகமறியா அக்கிரமக்காரர்களே! பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு புரியாதோ?"என்று கண்ணீர் வடிக்கின்றார்கள். அதாவது இந்த அஞ்சலிக் கவிதையில் பால் என்பது குழந்தை, கள் என்பது பெண் என்பதாகும். கள்ளை நீ ருசித்திருக்கலாம் என்பது அஞ்சலியின் தமிழ் விளக்கம். அத்துடன் அன்னை மடி சுகம் தெரியாததுகள் மட்டுமே இப்படி என்று குற்றத்தைத் தூக்கிப் பெண் மீது போடுகின்றது. எந்தத் தாயும் ஆணாதிக்கம் போல் அல்லாது தன் குழந்தையைப் பால் ஊட்டித்தான் வளர்க்கின்றாள். குற்றத்தின் ஊற்று மூலம் ஆணாதிக்கச் சமூகத்தைப் பாதுகாக்கும் இச்சமூகம் தானே ஒழிய, அதைப் பெண் மீது வழக்கம் போல் தள்ளிச் சேறு வீசுவது ஆணாதிக்கக் குற்றத்தின் அபத்தமாகும்.


தமிழ் மக்கள் சேவை செய்ய நடத்தும் வானொலியில் நேயர் உள்ளிட்ட கருத்துப் பரிமாற்றத்தில், ஏன் அங்கு இவைக்கு (குற்றவாளிகளுக்கு) அந்தப் பெண்கள் நிற்கின்ற இடம் தெரியாதோ? எனக் கேட்டு தம்மையும் தம் அறிவையும் மெச்சிக் கொண்டதன் மூலம் விபச்சாரிகளைக் கற்பழித்திருக்கலாம் என்று கூறுகின்றனர். தமிழ் பேசும் மக்களின் பண்பாட்டைத் தீர்மானிக்கும் இந்த ஆணாதிக்கத் திமிர்களை என்ன என்பது?


நடந்ததை ஆராயும் காற்சட்டை போட்டு படித்த சடங்கு சம்பிரதாயத்தில் தமிழ்ப் பண்பாடு காப்போர் "அவன் ஊரில் எவடம்? அவன் சாதி என்ன? சாதி புத்தியைக் காட்டுதுகள்?..."என விளக்கம் கொடுத்து தம்மைத் தாம் மெச்சியதுக்குள், தமக்குள் இது இல்லை என்ற மாதிரி கதையை முடிச்சினம். ஆணாதிக்கம் எல்லாச் சாதிக்குள்ளும் இருக்கிறது. பாலியல் வன்முறை எல்லாச் சாதிக்குள்ளும் புளுத்துப் போயுள்ளது என்பதை மூடி மறைத்தபடி, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்து சாதி ஆணாதிக்கத்தை நிறுவிய மூத்தக்குடிகள் அல்லவா இவர்கள்.


எங்கடை மண்ணிலே சிங்களவன் செய்தது, இப்படி தமிழுக்குள் முடியுமோ என்ற மாதிரி கதைகளும் உலாவின. உயர்சாதித் தமிழரின் சமுதாயம் என்ற விஷேட கண்டுபிடிப்புகளுடன், தமிழர் பண்பாடு ஆணாதிக்கமற்ற, பாலியல் வன்முறையற்ற உன்னதமானது என்று வேறு கண்டுபிடிப்பாகியது. இது "உலகின் எட்டாவது அதிசயமானாலும் ஆகலாம்"எச்சரிக்கை!


ஈழநாடு பத்திரிக்கை ஆசிரியரில் ஒருவரும், பாலுறவு (sex) வக்கிர நூல் ஈறாகக் கடைவிரித்து நடத்துபவரும் எழுதிய அஞ்சலிக் கவிதையில் "அக்கிரமக் காரர்களை -இன்னும் மரணக் கயிற்றினால் கட்டாமல் விடுவதா?"70என எழுதுவதன் மூலம் கொன்று விட்டால் எல்லாம் சரி என்கின்றார். இனி இப்படி நடக்காது என எமக்குக் கதையளக்கின்றார். இதன் மூலம் எப்படி அவன் உருவானான் என்பதும், அதைப் பாலுறவு (sex) வக்கிர நூல்கள் மூலம் பத்திரிக்கை மூலம், வானொலியில் கேவலமான பாடல்கள் மூலம் உருவேற்றி நிறைவேற்ற தூண்டிய உங்களுக்கு என்ன தண்டனை என்று, அஞ்சலிக் கவிதையில் பாடியிருப்பின் நியாயமாக இருந்து இருக்கும்.


இதுவல்லாது குற்றத்துக்கு எப்படி எல்லாம் நீங்கள் மறைமுகமாகத் துணை நிற்க, பணத்தாசை பிடித்து பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி செக்ஸ் வியாபாரம் பண்ணியதைச் சுயவிமர்சனம் செய்து, இனி இப்படி செய்ய மாட்டோம் என உறுதியளித்து இருந்தால், வருங்காலத்தில் இதுபோன்ற சிலவற்றைத் தடுக்க முதல் காலடி எடுத்து வைத்த வெற்றியாவது கிடைத்திருக்கும். ஆனால் இந்த அஞ்சலிக்குப் பின்னால் அடுத்த கற்பழிப்புக்கு நபரைத் தயார் செய்யும் நோக்கில், பெண் பாலுறவு சின்னமாகத் (ளுநஒ ளுiஅpடந) தொடர்ந்தும் உங்கள் பணம் வாங்கும் விற்பனையால் அடுத்த குற்றவாளி உருவேற்றப்படுகின்றான். ஆகவே நேரடி குற்றவாளி உருவாக மறைமுகக் குற்றவாளி காரணமாகின்றான். எனவே மறைமுகக் காரணம் ஒழிக்கப்படாமல் நேரடி குற்றத்தைத் தடுக்கமுடியாது.


ஜெர்மனி ஸ்ரீபதி சிவனடியான் எழுதுகின்றார் "சமூக விரோதிகளை நாம் எந்தவித காரணத்திற்காகவும் அடையாளம் காட்டாமல் விட்டுவிடவும் கூடாது. (என்பவர் இனம் காட்டவில்லை)......... தஞ்சம் புகுந்த நாட்டிலும் எம்மவர் உயிருக்குச் சில சமூக விரோதிகளால் அச்சுறுத்தல்.."70 என்று அந்த சிவ நாமத்தார் என்று கூறுகின்றார். சமூக விரோதி எப்படி சமூகத்தில் உதித்தான் என்றால் அது சிவனிடமே இருந்த ஆணாதிக்கமேயாகும்.


ஏன் மூன்று வயதில் ஞானம் பெற்றதாகக் கூறப்படும், இந்து சமயத்தின் வணக்கத்துக்குரிய திருஞானசம்பந்தனின் வக்கிரமான பாலியல் பார்வையைக் கண்டுதான் உமாதேவியார் மார்பில் பால் கொடுக்காமல் கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ? அந்தச் சம்பந்தன் இறைவியாகக் கருதும் உமாதேவியின் உடல் உறுப்புக்களை, வகைவகையாக வருணித்ததைப் பெரிய பட்டியலில் போட்டு டிப்ளமோ பட்டம் வாங்கமுடியும். அந்தளவுக்குக் கடவுளாகக் கருதி குருவாகக் கொண்ட எம் ஆணாதிக்கச் சமூகமே, சமூக விரோதியின் தோற்றுவாயே ஒழிய தனிநபர்கள் அல்ல.


ஏன் சம்பந்தப் பெருமான் இந்து - சமணப் போராட்டத்தின் போது "பெண்ணகத்தே எழில்சாக்கியப் பேய் அமன் தென்ன கற்பழிக்கத் திருவுள்ளமே"71 எனக் கோரி சமணப் பெண்களைக் கற்பழிக்க அருள் கோருகின்றார்.


பிள்ளையார் கதையைப் பார்ப்போம். சிவபெருமானின் மனைவி உமாதேவியார் குளக்கட்டில் (குளியலறையில்) குளிக்கும் போது தன்னை ஆணாதிக்க வக்கிரத்தில் இரகசியமாகப் பார்த்து விடுவர் எனப் பயந்து, தன் உடல் மேல் இருந்த ஊத்தையை (அழுக்கை) விறாண்டி (சுரண்டி) பிள்ளையாரை உருவாக்கி காவலுக்கு (இங்கு மனிதனை உருவாக்கவில்லை. மிருகம் கலந்த குழந்தையையே உருவாக்கினார். மனிதக் குழந்தை கூட ஆணாதிக்கத்தைக் கொண்டது என்பதாலோ! ) வைத்ததே பிள்ளையார் உருவான கதை. எப்படி இறைவியாலேயே ஆணாதிக்கத் தொல்லையில் இருந்து தன்னையே பாதுகாக்க முடியவில்லை.


ஏன் பெண்களை எல்லாம் குறும்பு செய்து, பெண்களை எல்லாம் வைப்பாட்டியாக வைத்திருந்த கண்ணன் கதை வேறு. வேலுடன் திரிந்த இரண்டு பெண்டாட்டிக்காரன் முருகன் இப்படி. இந்து கடவுள்களே ஆணாதிக்கத்தின் வடிவங்கள் அல்லது அதைச் செய்பவர்களாக இருந்தனர். கும்பிடும் தெய்வங்களே கற்பழிக்கும் போது தனி மனிதன் மட்டும் குற்றவாளியா? எப்படி?


வண்த் தெய்வம் தனது அஞ்சலியில் "...பாதகம் ஒன்றினை நடத்திய இவ்வன்செயலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மக்கள் தொடர்பு சாதனங்கள் பாராட்டுக்குரியவை"70 என்கிறார். யாரை எந்த ஜனநாயக விரோதிகளைப் பாதுகாக்க விரும்புகின்றீர்கள். மண்ணில், புலம் பெயர் சூழலில் நடத்திய படுகொலைகள், தாக்குதல்கள், இக்குற்றவாளிகள் முன்பு இயக்கத்தில் இருந்த போது நடத்திய தாக்குதல்கள் எல்லாம் எப்படி உறங்கிப் போனது? பத்திரிக்கைகள் ஏன் அனைத்தையும் மறைத்து விளையாடுகின்றன. அதன் அரசியல் என்ன? இப்படி இருக்க ஏதோ ஜனநாயகம் வாழ்வதாகத் தமிழ் மக்களுக்குக் கதையளக்கின்றார்.


"தமிழன்" என்ற பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.கே.காசிலிங்கம் என்பவர் "நமது மண்ணில், சிங்கள ஏகாதிபத்தியவாதிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சீருடை அணிந்த சிங்களக் காடையர்கள் தமிழ் யுவதிகளை - ஏன் வயது முதிர்ந்த பாட்டிமார்கள் மீது கூட பலாத்காரம் புரிந்து அடையாளம் தெரியாமலேயே அழித்து புதைத்துக் கொண்டுவரும் கொடுமைகளைத் தினமும் கேள்விப்படுகின்றோம். இதுபோல் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆட்சியில் உள்ளவர்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனம் புரிகிறார்கள்."70 என்கின்ற போது புல்லரிக்கின்றது. விட்டால் சிங்களவன் இல்லை என்றால் அந்த கறுப்பு ஆப்பிரிக்கன் மட்டுமே இவர்களின் இனவெறி விளக்கம். அதற்குள் இவர் பத்திரிக்கை ஆசிரியர் வேறு என்றால், இப்படி கற்பழிப்புகளின் ஊற்று மூலம் இங்குதான் ஊற்று எடுக்கின்றது.


புலம்பெயர் நாட்டை நோக்கி வருகின்ற போது, பெண்களைப் பயண முகவர்கள் மிரட்டி உருட்டி கற்பழித்துக் கொன்றும், கொல்லாமலும் (இதில் ஈடுபட்ட பலருள் பத்திரிக்கை ஆசிரியர்கள் உள்ளிட்ட) நடந்த சம்பவங்கள் நிறையவே உண்டு. ஏன் வசதி கருதி மறந்து போனீர்கள்? இன்று பயணமுகவர் மூலம் பெண் வந்து இருந்தால், ஆணாதிக்கச் சமூகம் விபச்சாரியாகப் பார்க்கும் அளவுக்குப் பாலியல் வன்முறை காணப்படுகின்றது. இப்படி வரும் பெண்ணைத் திருமணம் செய்ய மறுக்கும் புதிய புலம் பெயர் சமூக ஒழுக்க நியதி கூட உருவாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண், பாதிக்கப்படாத பெண் என இருவரின் பின்னாலும் புதிய ஒடுக்குமுறையை, அவமானத்தை இந்தப் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாது "இப்படியும் நடக்கிறது"என்ற குசும்புக்கு (குறும்புக்கு) ஊடாக ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்றவே உதவுகின்றது.


தற்போது தமிழ் ஆணாதிக்கம் பயண முகவர் வழிவந்த பெண் வேண்டாம், நேரடி இறக்குமதி பெண் வேண்டும் என கன்னிப் பரிசோதனை செய்யாத குறையாக நாக்கைத் தொங்க விட்டு ஆணாதிக்கம் அலைகின்றது. இந்தியாவின் சட்டத்தைப் பாதுகாக்கும் உள்துறை அமைச்சு செயலாளரின் ஆறு வயது மகளைப் பலர் முன் கற்பழித்ததை அறிந்த தாய், நீதி கேட்டு சென்ற போது நீதி மறுக்கப்பட்டது. அதற்காக அந்த வசதி படைத்த தாய் (வசதியிருந்ததால்தான் சட்டத்தின் முன் நீதிகேட்டுப் போராட முடிகின்றது.) நீண்ட போராட்டத்தை நடத்தியும், சட்டத்துக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சு இழுத்து அடிக்கின்றது.


ஏன் இந்தியாவைச் சேர்ந்த ஒரிசாவில் அஞ்சான் என்ற பெண் தனது கணவனின் கொடூரத்தால் பாதுகாப்பு தேடி நீதி கோரி, அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் இடம் முறையிடச் சென்ற போது, அவன் அப்பெண்ணைக் கற்பழிக்க முயன்றான். அதை எதிர்த்து அப்பெண் போராடிய போதும், முதல் அமைச்சரிடம் முறையிட்ட போதும் (இருவரும் கூட்டாகப் பல கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள்.) அப்பெண்ணைக் கும்பலாக அடியாட்படை கொண்டு கற்பழித்தனர். இதன் பின் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடிய பின் விசாரணை நாடகம் தொடங்கியுள்ளது.


ஏன் ஐரோப்பாவில் சிறுமிகளைக் கடத்திச் செல்வதையும், அது பொலிஸ்-அரசு கூட்டுச் சதியுடன் நடந்த செயலால் தொடர்ந்த நிலையில், அண்மையில் ஸ்பெயின் நாட்டில் இலட்சக்கணக்கில் மக்கள் வீதி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


ஏன் அமெரிக்கா இராணுவத்தில் உள்ள 50 சதவீதமான பெண்கள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். ஏன் கிளிண்டன் அதிகாரப் பாலியல் வன்முறை உலகை நாறடிக்கவில்லையா?


கம்பூச்சியாவில் கம்போடியா பயங்கரக் கொலைகாரனை ஒடுக்கி சமாதானம் காணச் சென்ற ஏகாதிபத்தியம், போல்பாட்டையும், உழைக்கும் மக்களின் ஆட்சிகளைச் சேறடித்த ஆணாதிக்க அமெரிக்கத் தியாக வீரர்கள், கன்னிகழியாத இளம் பெண்ணை 50,000 ரூபாய்க்குப் பணம் கொடுத்து வாங்கி ஜனநாயகச் சந்தையில் நுகரமுடிந்தது. சத்திய சாயிபாபா என்ற ஆணாதிக்க வெறியன, பெண் போட்டியில் அரசியல் செல்வாக்குடன் பொலிசைக் கொண்டு தனது சீடர்களை அழித்ததை மூடி மறைக்க முடியாது நாறியது.


எம் மூத்த தமிழ் மறவர்கள் தமது சாதி ஆதிக்கத்தில் இன்றுவரை எத்தனை தாழ்த்தப்பட்ட பெண்களைக் கற்பழித்து சாதி ஆணாதிக்கத் திமிரில் சுகம் பெற்றதை, பெறுவதை மறைத்துப் புலம்புவது மோசடியாகும்.


ஏன் இரண்டாம் உலக யுத்ததில் எத்தனை ஆயிரம் பெண்களை ஜப்பானும், ஜெர்மனியும் சூறையாடியது. இப்படி எத்தனை வரலாறுகள். இதற்குப் பிறகு சுத்திச் சுத்தி சிங்களவன் ஆப்பிரிக்கன் மட்டும்தான் என்ற மூத்த தமிழ்க் குடிகளின் இன பாசிச ஒப்பாரிகள் சகிக்க முடியவில்லை.


"எம்மினத்தின் முகங்களிலே கரும்புள்ளி. இரத்த வெறி பிடித்த கரடிகளின் செயலால் தமிழ்மொழி பேசா மற்ற இனத்தவர்கள் கொலைகாரர்கள் இலங்கைத் தமிழர்களிடமும் இருக்கிறார்கள் என்று பேசும் படி செய்து விட்டார்கள். இந்த நய வஞ்சகச் சொறிநாய்கள்"69 என நந்தினி கலைத் தென்றல் அஞ்சலி ஒப்பாரி வைக்கின்றது.


சபாலிங்கம், நாதன், கஜன்..... என நடந்த ஈவிரக்கமற்ற அரசியல் கொலைகள் மற்றும் பல பெண் படுகொலைகள் எல்லாம் இதைச் செய்யவில்லையா? மண்ணில் ஆயிரக்கணக்கில் இயக்க உட்படுகொலைகள், மற்ற இயக்கப் படுகொலைகள், எல்லையோர அப்பாவிச் சிங்கள முஸ்லிம் படுகொலைகள் எல்லாம் எம் இனத்தின் கொலைகள் இல்லையா?


ஏன் கி.பி. 1993-இல் ஜெர்மனியில் சுஜிதா என்ற சிறுமி கொல்லப்பட்ட போது, நாசிகள் மீது வாய் கூசாது குற்றம் சாட்டி விட்ட கதைக்குப் பின்னால் சாதித்திமிரும், ஆணாதிக்க வெறியாட்டமும் கொலையின் பின்னணி என்ற கதைகளும் பரவிய போது, அஞ்சலிகள் மௌனத்தின் உறைவிடமானது ஏனோ? இவர்கள் சொறிநாய்கள் அற்ற புனிதர்களோ? என்ன நித்திரையா கொள்கின்றீர்கள்? இது சொறிநாய் என்றால் இதன் ஊற்று மூலம் தொடங்கி வைத்த இடமும் சொறிநாய்கள்தான்.


தி. உமாகாந்தன் என்பவர் தனது உன்னதமான அரசியல் வழி அஞ்சலியில் "..எங்கள் சொந்த இடம் தெரியாமல் குழம்பி நிற்கும் வேளையிலே தேகம் திமிரெடுத்ததால் இந்த மிருகத்தனம் நிகழ்ந்தது. நிலவுக்கு அஞ்சி பரதேசம் வந்த கதையாகி விட்டதா நம் கதை"72 என்கின்றார். தேகம் திமிர் இல்லாமல் (இயல்பான பாலியல் தேவை இல்லாமல்) மனிதன் இருக்கமுடியுமோ? பாலியல் மனித வாழ்வில் இயல்பானது என்பதையே மறுக்கும் ஆணாதிக்கம், இந்த இயல்பான பாலியல் மீது எண்ணெய் ஊற்றி எரியவைக்கும் போது ஏற்படும் விளைவைத் "தேகம் திமிரெடுத்தது"என்று கூறி பிரச்சினையின் மூலவேரை அடியோடு கவனமாகப் பாதுகாக்க உதவுகின்றது இப்பழமொழி. இவர்கள் அரசியலில் சமூகத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை மீட்டு எடுக்கவும் வம்பளக்கின்றனர் என்பதையே இந்த அஞ்சலிகள் தெளிவாக்குகின்றன. ஏன் இவர் ஆதரிக்கும் இ.பி.ஆர்.எல்.எப். இந்தியா ஆக்கிரமிப்பாளனுடன் சேர்ந்தும், தனித்தும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது.


"உன் பிள்ளையை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்!"72 என்று ஞானி ஆலோசனை வழங்குகின்றார். பெண்பிள்ளை என்றால் பூட்டி ஆணாதிக்கச் சிந்தனைக்குள் அமுக்கு. ஆண் குழந்தை என்றால் "கறுப்பு"(ஆப்பிரிக்க மக்கள்) மற்றும் "அடைகள்"(அரபு மக்கள்) உடன் சேர அனுமதியாதே. அதாவது தாய் தந்தையைக் கொண்ட இந்த ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தை மீறாத வகையில் உன் பிள்ளையைக் கட்டுப்பாட்டில் வைத்திரு அது போதும் என்கின்றார். அதன் வெளிப்படையாக "...உன் மனதிலே பதித்துக் கொள், என் இனமே! வட்டிக்குப் பணம் வாங்கி வடக்கே வாசல் வைத்து - வளவோடு வீடு கண்டோம்! சீட்டுக் கட்டி சிங்கார வாகனத்தில் ஒய்யாரமாய் பவனிவந்தோம்!"72 என்பதன் ஊடாக உயர் சாதியினரில் சிலர் வாழ்க்கையில் வசதியற்ற வக்கற்றவர்களின் பணத்தைச் சீட்டில் ஏமாற்றி வடக்கு வாசல் வைத்து, தமக்குச் சேவகம் செய்ய காலாட்டி, காணி வழங்கி கொட்டில் (கட்டில்) போட்டு, உயர்சாதியின் சீறும் செருக்கை வெளிப்படுத்தியதைப் பிள்ளைக்குப் புகட்டு. அப்போதுதான் உனது கட்டுப்பாட்டில் சாதி கடவாத, காதல் செய்யாத, சீதனத்தை மறுக்காத, வேறு இனத்தைத் திருமணம் செய்யாத அடக்கம் ஒடுக்கமான ஊமைப் பிள்ளைகளை வளர்த்த பெருமையை, கல்தோன்றா மண் தோன்றா தமிழ் மரபைப் பேணுவதை உலகம் புகழும் என்பதே அவரின் கவிதை விளக்கம்.


திருமதி நளாயினி தாமரைச்செல்வன் என்பவர் தனது அஞ்சலியில் "காமுகரை அடக்கி ஆளுங்கள். யூடோ கராத்தே உண்டு. யுத்திகள் நிறைய உண்டு"70 என்கின்றார். துப்பாக்கிகள் உண்டு பெண்களே இடுப்பில் செருகி நடமாடுங்கள் என கூறாதது மட்டுமே இங்கு விடுபட்டுவிட்டது. சமூகத்தின் ஆணாதிக்க நோய்க்குக் கராத்தேவோ, யூடோவோ, துப்பாக்கியோ, மரணத் தண்டனைகளோ தீர்வாகுமா? இல்லையே. ஆணாதிக்க வெறி என்பது எல்லா நவீன ஆயுதங்களையும் மீறி பின்நவீனத்துவ (ஏகாதிபத்தியமாக) நடைமுறையாக உள்ளது. அதாவது நவீன ஆயுத உற்பத்தியில் உலகை ஆளும் போட்டி போல் இதுவும் நீடிக்கும்.


புலம்பெயர் சீரழிவு இலக்கிய மையவாதியான சி. புஸ்பராஐh தனது அஞ்சலியில் "சமூகச் சீர்திருத்தத்தில் அக்கறை கொண்டவர்களுடனும், சட்டத்துடனும் ஒத்துழைத்து நம்மிடையே இருக்கும் சமூக விரோதிகளை இனம் கண்டு, நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற செய்யவேண்டும்."72


இது எப்படி? சட்டமும் ஒழுங்கும் ஆணாதிக்கமாக உள்ள போது, அத்துமீறிய ஆணாதிக்க மீறல்களைச் சட்டம் சிலவேளை கண்டு கொள்ளலாம். அமெரிக்க இராணுவத்தில் இணைந்த பெண்கள் மீதான கற்பழிப்புகளை எந்தச் சட்டமும் கண்டுகொள்ளவில்லை. ஏன் கிளிண்டன், ஸ்பெயின்.. என பட்டியல் நீண்டு உள்ளது. ஆணாதிக்கத்தை இச்சட்டம் பாதுகாக்கின்றது. இதைச் சீர்திருத்தவாதிகள் தங்கள் வர்க்க விசுவாசத்துடன் முண்டு கொடுக்கின்றனர்.


ஏன் அண்மையில் உங்கள் உடன் கூடித் திரிவோர் எழுதிய படைப்புகளில் பெண்கள் மார்பை இந்தாபிடி இந்தாபிடி எனத் திரிவதாக எழுதியும், விமானப் பெண் என்ன குடிக்கிறாய் எனக் கேட்க, உன் மார்புப் பால் எனக் கூறியதையும் (ஏன் நிதர்ஷினியைக் குதறியவர்கள் அப்பெண்ணை இலக்கியவாதி கோருவதையே செய்தனர் என்பதை அஞ்சலிகள் ஊடாக மறைக்காதீர்கள்.) எந்தச் சட்டத்திடம் முறையிடுவது. அதையும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதுபோல் சமூக அக்கறை கொண்டோர் என நீங்கள் அடையாளம் காட்டும் இவர்கள்தான் அதாவது நீங்கள் கூடித் திரியும் அந்தக் கழிசடை இலக்கியவாதிகள் தான், பெண்களைக் கேவலமாக எழுதியே கற்பழித்தவர்கள் ஆவர்.


"ஆண்களைச் சரியாக வளர்க்காத தாய்களா காரணம்?72 என்று பூர்சுவா பெண்களின் பிரச்சினை சார்ந்த நாவல்களை எழுதிய இராஜேஸ்வரி லண்டனில் இருந்து அஞ்சலி செய்கின்றார். ஆணாதிக்கம் எப்படி தாய் வளர்ப்பால் ஏற்படும்? ஆணாதிக்கம், பெண்கள் மீது ஆணாதிக்க உற்பத்தி முறையால், முதலாளித்துவ ஜனநாயகத்தால் பாதுகாக்கப்படுகின்றது. பின்னால் ஆணாதிக்கச் சுதந்திரம் கொண்ட ஜனநாயகமான ஆண், ஆணாதிக்க ஒழுங்கை அத்துமீறினால் தாய் வளர்ப்பில் குற்றமோ! ஐயகோ! என்னவென்று சொல்வது.


திருமதி ரூபி nஐயசீலன் என்பவர் தனது அஞ்சலியில் "தலைகுனிந்த தமிழரினம் தலைமீண்டும் நிமிர்கையிலே - தலைகுனிய வைக்கிறதே தரம் கெட்ட தமிழன் செயல்"72 என்கின்றார். எம்மண்ணிலும் புலம் பெயர் நாட்டிலும் சொந்தச் சகோதரர்களை வீதிவீதியாகப் படுகொலை செய்தும், உயிருடன் எரித்த போதும் தமிழன் தலை எங்கிருந்தது? அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட போது வீரத்தின் உச்சத்தில் உச்சி குளிர்ந்ததோ! சொந்த இடத்தில் இருந்து தமிழன் முஸ்லிம் மக்களை விரட்டியது வீரமோ! இப்போதுதான் தமிழனுக்குத் தலைக் குனிவு ஏற்பட்டதாகக் காதுக்குப் பூ வைக்கின்றார். எப்போது தமிழன் ஜனநாயகத்தை மறுத்தானோ அப்போதே தமிழனால் தலைகுனிவு ஏற்பட்ட நிலையில், எந்த மாற்றத்தையும் வரலாறு மீட்கவில்லை.


சுவிஸ் வல்வை - சுஜேன் என்பவர் தமது அஞ்சலியில் "பிஞ்சுமுகம் அறியா வஞ்சகர்"72 என்பதன் ஊடாகப் பிஞ்சு அற்ற முகம் என்றால் எப்படிச் சரியாகிவிடுமா? சரியாகிவிடும் என்பது பொதுவான ஆணாதிக்கச் சிந்தனை மரபாகும்.


"முகத்தான்" யேசு என்பவர் தனது அஞ்சலியில் "மதத்தின் பெயராலே மர்மக்கொலைகள், மறைமுகக் கொலைகள், தற்கொலைகள், வஞ்சம் தீர்க்கும் வர்க்கக் கொலைகள், பணப்பித்தர்களின் பாதகக் கொலைகள், காம வெறியர்களின் வெறியாட்டக் கொலைகள் எத்தனை?"என்றவர், வசதியாக வசதி கருதி இனக் கொலைகளை மறந்து போனார். சகோதரப் படுகொலைகளை மறந்து போனார். இப்படி மறந்து மறைக்கப்பட்ட தொடர்ச்சியில் "மொட்டாகி, விரிந்து மணம் பரப்பும் மலராகும் முன், முளையிலே கிள்ளி.."என்கிறார். அதாவது மலரானால் கிள்ளி எறியலாமோ? ஆணாதிக்கப் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யாமல் பிள்ளை பெறாமல் போய்விட்டாய்? என்றே புலம்புகின்றார்.


இங்கு வெளியாகிய அஞ்சலி ஒன்றில் "குற்றவாளியை அங்கம் வகுத்து அணுஅணுவாய் கூறாக்கி - அவர் உயிரை எடுத்தாலும் ஆறாது எம் நெஞ்சு- அன்பான பிரெஞ்சு நாட்டுப் பண்புடையீர் - விண்ணப்பம் - அனுப்புங்கள் அந்த அநியாயப்படுவோரை வன்னிக்கு"72 என இலங்கையில் இருந்து எழுதும் விண்ணப்ப அஞ்சலி. ஏதோ வன்னியில் இதுபோல் இல்லை என்ற மாதிரி. வன்னி என்ன ஆணாதிக்கம் கடந்த பூமியோ? வன்னிக்கு அனுப்பினால் திருத்தி விடுவானா என்ன? அப்படிப்பட்ட புண்ணிய ப+மியா வன்னி? ஏன் பல சமர் கண்டு புலம் பெயர்ந்த இந்த முன்னைய வீரப் புதல்வன் எப்படி உருவானான்? இவ்வளவு மோசமான கொலை வெறியுடன் என்பதற்கு அல்லவா வன்னி பதில் கூறவேண்டும.


இல்லாத அஞ்சலியை விடுவதும், வீரம் பேசுவதும், தண்டனை பற்றி விதந்துரைப்பதும் தங்கள் சொந்த ஆணாதிக்கத்தை மூடி மறைக்கத்தான். இதன் மூலம் ஆணாதிக்கச் சமூகத்தைச் சேதமின்றி பாதுகாக்கத்தான். இக்குற்றத்தின் ஊற்று மூலம் இச்சமூகமே என்பதை இனம் காட்டாத அனைத்துக் கூப்பாடுகளும் உண்மையில், இது போன்றவற்றை மீளவும் தொடர பச்சைக் கொடி காட்டுபவைதான். இந்த வேரையறுப்பது வரலாற்றுக் கடமையாகும்.