Language Selection

24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நமது நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இருப்பதற்காக, காவல் துறையிடம் பொய் புகார் கூறியும், அரங்க உரிமையாளர்களை மிரட்டியும் இருக்கிறார்கள். அதையும் மீறி 600 க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்போடு விழா சிறப்பாக நடந்ததில் மதவெறி கும்பலுக்கு கடுப்பு.

 

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி

`ராம. கோபலான் பெரிய வீரன்` என்று இல. கணேசன் சொல்வது போல, `கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கோட்டை` என்ற ஒரு பச்சைப் பொய்யை பரப்பி வைத்திருந்தார்கள், பா.ஜ.க. காரர்களே.

 

(’பெருமாள், திருமால், விஷ்ணு, கண்ணன், ராமன்’ என்று ஒரே ஆளே பல பெயரில் இருப்பது போல், ஒரே கும்பல்தான் ‘பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்’ என்கிற பெயரில், பெரிய கூட்டம் தன் பின்னால் இருப்பது போன்ற ஒரு `பில்டப்பை` தந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.)

 

‘உங்கள் கோட்டையிலேயே வந்து எங்கள் கொடியை ஏற்றுகிறோம்’ என்று அண்ணன் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ‘கோட்டையிலேயே’ பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

சீமானின் எழுச்சி உரை மக்களை மகிழ்ச்சியிலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களை ஆத்திரத்திலும் ஆழ்த்தியது.

 

துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் சீறுவதுபோன்ற சீமானின் பேச்சால், ஆர்.எஸ்.எஸ். காரர்களின் ‘மண் கோட்டை’ சிதறி தெரித்தது.

 

‘நமது பகுதியில் வந்து மக்களை தன் வயப்படுத்தி, நமது கோட்டையை தரைமட்டும் ஆக்குகிறானே சீமான்’ என்கிற இயலாமை ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெற்று கோபமாக வெளிப்பட்டது.

 

15 பேர் கொண்ட மதவெறி கும்பல் கூட்டத்தில் வந்து குழப்பம் விளைவிக்க, பார்த்து கொண்டிருந்த பொதுமக்களும், சில பெரியார் தொண்டர்களும், அவர்களை நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

 

இந்த எதிர்ப்புக்குப் பிறகும் இன்னும் எழுச்சியோடு பேசிய சீமானின் உரை, மதவெறி கும்பலை ஆத்திரமூட்டியது. அருகில் போய் எதிர்ப்பு தெரிவித்தால் பொதுமக்களிடம் அடிவாங்க வேண்டி இருக்கும் என்பதால், தூரத்தில் இருந்து ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்.

 

தமிழகம் முழுக்க சீமான் எங்கு போய் பேசினாலும், அவர் பேச்சை கேட்டு திகில் அடைகிறது இந்து மதவெறி கும்பல்.

 

காரணம், மக்களிடம் மிக பிரபலமான ஒருவர், பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் சவால் விட்டு பேசுவதும், சீமானின் பேச்சு மிகுந்த வீச்சோடு பல இளைஞர்களை ஒரு பௌதிக சக்தியாக பற்றி கொள்வதையும் அதனால் தங்கள் இருப்பு கால் நழுவி போவதையும் உணர்கிறார்கள் மதவெறி கும்பல்.

 

அதன் பொருட்டேதான் சீமான் எங்கு போய் பேசினாலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.

 

சீமானின் தமிழ் தேசிய கருத்துகளோடும் ‘எவனோ ஒருவன்’ என்கிற படத்தில் அவருடைய பங்களிப்பு குறித்தும் நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் - பிரபலமானவராக இருந்து கொண்டு, அதுவும் சந்தர்ப்பவாதிகளும், சூதாடிகளும், சுயமோகிகளும், சமூகவிரோதிகளும், பதவி வெறியர்களும் நிறைந்த சினிமாவில் இருந்து கொண்டு - பெரியாரின் கருத்துகளுகாகவும், பார்ப்பனிய இந்து மதவெறி கும்பலை எதிர்த்தும் வீதியில் இறங்கி சமரசம் இல்லாமல், தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியது.

 

இந்து பாசிச கும்பலை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்.

 

http://mathimaran.wordpress.com/2008/08/27/article-112/


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது