Language Selection

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

 

இப்படி புலி அழிப்புக்கு முன்னும் பின்னும், அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தான் இயங்கின. இன்று பலரும் கருதுவது போல், புலிகள் மட்டும் இதைச் செய்யவில்லை. தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைக்கான போராட்டம், அனைவராலும் சிதைக்கப்பட்டது. இந்த நிலையில் இதை மொத்தமாக செய்து முடிக்கும் வகையில், புலிகளின் பாசிச சர்வாதிகாரம் அனைத்தையும் தன்வசப்படுத்தி அழித்தது.

 

அது தமிழ் மக்களின் பெருமூச்சுகளுக்குக் கூட, தனது படுகொலை அரசியல் மூலம் பதிலளித்தது. தமிழ் இனத்தில் எஞ்சி இருந்த சமூகக் கூறுகள் அனைத்தையும் நலமடித்தது. தமிழ் இனம் சொல்லி அழக் கூட நாதியற்ற நிலைக்கு, அவர்களை அரசியல் அனாதையாக்கி விட்டுள்ளளர்.

 

மாபியாத்தனமும், பாசிசமும் தேசியமாக, தமிழ் இனம் வரைமுறையின்றி எல்லா வடிவங்களிலும் சுரண்டப்பட்டது. சொத்து முதல் கருத்து வரை, தமிழ் மக்களிடம் விட்டுவிடாது சுரண்டப்பட்டது.

 

மறுபக்கத்தில் குறைந்தது 30000 பேர் போராட்டத்தின் பெயரில் கொல்லப்பட்டனர். 10000 பேர் துரோகிகள் பெயரில் கொல்லப்பட்டனர். 100000 மக்கள், போராட்டத்தின் பெயரில் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளிலும், சிறைகளிலும் ஒரு இனத்தின் ஆன்மா அழிக்கப்பட்டது. பலதரப்பட்ட உளவியல் நெருக்கடிகளின் ஊடே, தமிழ் இனம் ஊனமாக்கப்பட்டது. பெற்றோரை பிரிந்தவர்கள், குழந்தையைப் பிரிந்தவர்கள், கணவனை பிரிந்த பெண்கள், மனைவியைப் பிரிந்த கணவன், இப்படி பிரிவின் ஒலங்கள் வானை முட்டின. கணவனை இழந்த விதவைகள், மனைவியை இந்த கணவன்கள் சோகங்கள், மறுபக்கத்தில் பாலியல் உணர்வை நலமடித்து மறுத்த வக்கிரம், இனத்தின் இயல்பையே ஊனமாக்கியது. உழைப்பை, தமது பரம்பரை சொத்தை, பண்பாட்டை எல்லாம் இழந்து, ஒரு அனாதை இனமாகியுள்ளது. இப்படி எத்தனை எத்தனை மனித அவலங்கள் சோகங்கள்.

 

இதை இயக்கங்கள் தம் பங்குக்கு விதைத்தன. புலிகள் தாம் விதைத்ததையும் சேர்த்து, மொத்தமாக அறுவடை செய்தனர். தமிழ் மக்கள் இவர்கள் மூலம், எந்த ஆறுதலையும் அடையவில்லை. மாறாக நிம்மதியை இழந்தனர். தம் வாழ்வை இழந்தனர். தமிழ் இனம், தனது அடிக்கட்டுமானத்தின் சகல அடிப்படையையும் இழந்துவிட்டனர்.

 

இந்த இடத்தில் எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு என்ன நடக்கும்? என்ற கேள்வி, உள்ளடகக்த்தில், இன்று ஏதோ தமிழ் மக்களிடம் ஏதோ இருப்பதாக நம்புகின்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் இனம் வாயை கூட திறக்க முடியாது, அனைத்தையும் இழந்துவிட்ட ஊமைகள் நிலையில் ஏதோ எதுக்கோ வாழ்கின்றனர். இப்படித் தான் தமிழ் இனம், எதார்த்தத்தில் ஜடமாக உறைந்து கிடக்கின்றனர்.

 

இப்படி இந்த ஊமைச் சமூகத்தின் எதிர்காலம் என்பது, இன்றைய தனது சொந்த அடிமைத்தனத்துக்கு ஏற்ப, எச்சிலைப் பொறுக்கி வாழும் இழிநிலைக்குத் தான் தள்ளப்படுவர். இன்று முஸ்லிம் மக்கள், மலையக மக்களும், பொறுக்கி வாழும் தலைவர்களின் கீழ் எப்படி வாழ்கின்றனரோ, அப்படிப்பட்ட தமிழ் தலைவர்களின் கீழ் தான், தமிழ் மக்களின் அடிமை வாழ்வைத் தான் சுபிட்சமானதாக காட்டப்படும்.

 

இப்படிப்பட்டவர்கள் இன்றைய புலிக்குள் இருந்தும், பல பிள்ளையான்களின் வடிவிலும் உருவாகுவார்கள். பிள்ளையான் ஒரு ரவுடியாக, தாதாவாக கொலை கொள்ளை என்று அரச எடுபிடியாகத் திரிந்தவன், இன்று திடீர் அரசியல்வாதியாகவில்லையா!

 

புலிகள் அரசியல் செய்யும் போது, எதை அரசியலாக செய்கின்றனர். அயன் பண்ணிய சேட்டுப் போட்டு, பேனையை பொக்கற்றில் கொழுவியபடி மக்களுக்குள் வலம் வருவது தான் அவர்கள் அரசியல். வெளிநாடு போனால் ரையைக் கட்டி, போலிஸ் பண்ணி சப்பாத்து போட்டுக் கொண்டு, போவது தான் அரசியல். மக்களை ஊமையாக்கிவிட்டு, இப்படித்தான் அவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்து காட்டியவர்கள்.

 

அங்கிருந்து உருவான பிள்ளையான் தனது ரவுடிசத்தையும் தாதா தனத்தையும் மறைக்க, முதலில் ரையைக் கட்டினான். பின் வெள்ளைவேட்டி கட்டி பழுத்த அரசியல்வாதியாகவில்லையா! முன்னாள் புலம்பெயர் ஜனநாயகவாதிகள் ரவுடி பிள்ளையான் போடும் எலும்புத்துண்டை சுவைத்தபடி பிள்ளையானுக்கு வழிகாட்டுவது போல், பலர் எதிர்காலத்தில் எலும்புக்காக நக்குவார்கள். இப்படித் தான் புலிகளின் மாபியாத் தனத்துக்கு பாசிசத்துக்கு பதில் பிரதியிடப்படும்.

 

ரவுடிகளும், தாதாக்களும் எப்படி இந்தியாவில் அரசியலுக்கு வருகின்றனரோ, அதுபோல் தான் பல பிள்ளையான்கள் எதிர்காலத்தில் தமிழ் இனத்தை இழிவாடியபடி தலைமை தாங்குவார்கள். அரசு போடும் எலும்மை கவ்விக்கொண்டு, அரச எடுபிடிகளாக பவனிவருவார்கள். இந்த ரவுடிகளும், தாதாக்களும, நாலு தாதா இந்திய சினிமா பார்த்தால் போதும், எப்படி அரசியல் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்வார்கள். இதன் மூலம், பழுத்த அரசியல் தகுதியை பெற்றுவிடுவார்கள்.

 

இப்படி சமூகவிரோத தற்குறிகள் தம் வன்முறை மூலம், தமிழ் இனத்தின் இழிவை தமக்கு சாதகமாக கொண்டு அடக்கியாள்வர்.

 

இன்று புலிகளிடம் இருக்கும் ஆயுதம், இராணுவ பலம் என அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி உள்ளதோ (சிலர் இதை தமிழ் மக்களின் பலம் என்கின்றனர்), அப்படித் தான் புலிகள் இல்லாத போதும் நிகழும். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தான், அவர்கள் நடைப்பிணமாகத்தான் வாழ்வார்கள். வாக்கு போடும் உரிமை உண்டு என்று கூறிக்கொண்டு, அதை மட்டும் உரிமையாகக் காட்டிக்கொண்டு, அதையும் தமக்கு மட்டும் போட வைப்பார்கள்.

 

இன்று புலிகள் தாம் மட்டும் தேசியத்துக்காக போராடுவதாக காட்டிக்கொண்டு எதைச் செய்தனரோ, அதையே எதிர்காலத்தில் ரவுடிகளும், தாதாக்களும், பொறுக்கிகளும் தாம் மட்டும் தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு, தம் வாக்கு பெட்டியை நிரப்புவார்கள்.

 

தமிழ் தேசியத்தின் பெயரில் புலிகள் ஆடிய ஆட்டம் போல், கிழக்கு மக்கள், வன்னி மக்கள் என்ற பல பிரிவினைகள் மூலம், பிராந்தியங்களுக்கு ரவுடிகள் தலைமை தாங்குவார்கள்.

 

எதார்த்தம் இதைத் தான் காட்டுகின்றது. இதற்கு எதிரான போராட்டம் என்பது, கருத்தளவில் கூட ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் தான் உள்ளது. தமிழ் இனத்தின் எதிர்காலமோ, இருண்டதாக சூனியமாக உள்ளது. இவர்கள் மேல் ரவுடிகளும், பொறுக்கிகளும், தாதாக்களும் அரசியல் செய்கின்றனர்.

 

ரவுடிகளும், பொறுக்கிகளும், தாதாக்களும் தமது அரசியல் நிகழ்ச்சியை, இணையங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் மட்டுமின்றி, முதலமைச்சர் பதவி வரை அலங்கரித்து வேஷம் போடுகின்றனர்.

 

மக்களுக்காக ஒரு அரசியலை முன்வைக்காத, அவர்களை சார்ந்து செயல்பட மறுக்கின்ற அரசியலைத் தான், புலிக்கு மாற்றாக வைக்கப்படுகின்றது. இது எவ்வளவு மோசமான மக்கள் விரோத அரசியல் என்பதை, குறைந்த பட்சம் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் கூட இனம் காணாமல், அங்குமிங்கும் சமரசம் செய்கின்றனர். இப்படி மாற்று அரசியல் கருத்துக் கூட, புலிக்கு மாற்றாக இன்று கிடையாது. தமிழ் மக்கள் புலிக்கு பதில், ரவுடிகளும், பொறுக்கிகளும், தாதாக்களும் அடக்கியாளப்படுவதும், அதை ஜனநாயகம் என்ற கூறுகின்ற மக்கள் விரோத ஜனநாயகமும் தான் இன்று கோலோச்சி நிற்கின்றது.

 

புலிக்கு மாற்றாக உள்ள புலம்பெயர் கும்பல்தான், மக்களுக்காக எந்த அரசியலையும் மாற்றாக வைக்காது, தாதா அரசியலுக்காக இயங்குகின்றது. இதுதான் புலிக்கு பதில் பிரதியிடப்படும். இதை இனம் கண்டு, இதற்கு எதிராக போராடாத அனைவரும், இதற்கு துணை போவர்கள் தான். இதை நான், நாம் மட்டும் இன்று சுட்டிக்காட்டிப் போராடும் அவலம்.

 

பி.இரயாகரன்
24.08.2008

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ