Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் ஏற்றப் பாட்டு

ஏற்றப் பாட்டு

  • PDF

முற்பகல்
ஓங்கு கதிர் வாவா - நீ
[ஒன் றுடனே] வாழி!
மாங் கனியும் நீதான் - அந்த
வானம் என்னும் தோப்பில்!
நீங்கும் பனி என்றே - இங்கு
நீ சிரித்து வந்தாய்!
நாங்கள் மறப் போமோ - நீ
[நாலு டனே] வாழி!
ஐந் துடனே வாழி - நீ
அள்ளி வைத்த தங்கம்! 5
முந்தி யயுக ருக்கல்ரு - எந்த
மூலை யிலும் இல்லை!
சந்து பொந்தில் எங்கும் - உன்
தங்க வெய்யில் கண்டோம்.
இந்த நன்மை செய்தாய் - நீ
[எட்டு டனே] வாழி!
திராவிட நாட்டு வாழ்த்து
இன்பம் உள்ள நாடு - தம்பி
இத்தி ராவிடந் தான்
உன்னி வாழ்த்து வோமே - தம்பி
[ஒருப துடன்] வாழி! 10
திராவிட நாட்டின் சிறப்பு
நன்மை யுள்ள நாடு - தம்பி
நாவலந் தீ வுக்குள்,
தென்னை வளம் சேரும் - நல்ல
தெற்கு வள நாடு.
கன்னி முதல் வங்கம் - இரு
கடல் கிழக்கு மேற்கு,
சின்ன நல்ல தம்பி - நம்
திராவி டநன் னாடு!
முன்ன ரசர் நாடு - நல்ல
மூன்ற ரசர் நாடு! 15
மன்னர் வில்எ டுத்தால் - பனி
வட மலைந டுங்கும்.
பாண்டி யன்பேர் சொன்னால் - இந்தப்
75
பார் நடுங்கும் தம்பி.
ஆண்டி ருந்த சேரன் - அவன்
ஆரி யரை வென்றான்.
மாண்ட துண்டு சோழன் - அவன்
மாநி லத்தைக் காத்தான்.
மாண்டு விட்டால் என்ன? - அவன்
வழி வந்தவர் நாமே! 20
[இருப துடன் ஒன்றே] - வளம்
எக்க ளிக்கும் நாட்டில்
எரு தடிப்ப தாலே - தம்பி
என்ன பயன் என்று
பொருந்த யானை கட்டி - நெல்
போர் அடித்தல் உண்டு.
கரும்பு தரும் சாறோ - தம்பி
காவி ரியின் ஆறு!
முப்ப ழமும் தேனும் - நல்ல
முந்தி ரிப்ப ருப்பும் 25
எப்பொ ழுதும் காணும் - தம்பி
[இருப துடன் ஆறு]
கப்பல் கொண்டு போகும் - இங்கு
காணும் சரக் கெல்லாம்.
சிப்ப மாகச் சாயும் - பல
சீமைச் சரக் கெல்லாம்.
கெட்டி முத்துச் சாயும் - நம்
கீழ்க் கடலில் தம்பி.
முட்டி லாத நாடு - தம்பி
[முப்ப துடன்] வாழி! 30
வெட்டும் இட மெல்லாம் - நாம்
வேண்டிய பொன் கிட்டும்.
எட்டுத் திசை பாடும் - நம்
இன்பத் திரு நாட்டை!
நாக ரிக நாடு - நம்
நல்ல பெரு நாடு!
தோகை மயில் ஆடும் - பூந்
தோட்டங் களில் எல்லாம்.
வேக வைக்கும் கோடை - அதை
விழுந்த விக்கும் தென்றல். 35
வாழ் கறவை மாடு - தம்பி
76
மாம லையின் ஈடு!
சந்த னத்துச் சோலை - அதைச்
சார்ந்து நிற்கும் குன்றம்.
அந்தப் யுபொதி கைருபோல் - தம்பி
ஆருங் கண்ட தில்லை.
சிந் தருவி உண்டு - தம்பி
தெங்கி ளநீர் போலே!
நந்து புனல் ஆறு - தம்பி
[நாற்ப துடன்] வாழி! 40
காவிரி நல் வைகை - பல
கண் கவரும் பொய்கை,
பூ விரியும் சோலை - நல்ல
பொன் கொழிக்கும் நன்செய்,
யாவும் உண்டு கண்டாய் - தம்பி
இத்தி ராவி டத்தில்.
தேவை எல்லாம் சாயும் - நம்
தெற்கு வள நாட்டில்.
திராவிடர் கலை ஒழுக்கம்
குற்ற மற்ற கொள்கை - தம்பி
கொண்ட திந்த நாடு! 45
கற்ற வருக் கெல்லாம் - தம்பி
கல்வி தந்த நாடு.
வெற்றி மற வர்கள் - தம்பி
வேல் மறவர் நாடு.
மற்ற வரும் வாழத் - தம்பி
வழி வகுத்த நாடு.
ஈர டியும் தந்தான் - தம்பி
இங்கு வள்ளு வன்தான்
ஆரும் அறம் கண்டோம் - தம்பி
ஐம்ப துடன் வாழி! 50
சீரு டைய நாடு - தம்பி
திராவி டநன் னாடு.
பேரு டைய நாடு - தம்பி
பெருந் திராவி டந்தான்.
ஓர் கடவுள் உண்டு - தம்பி
உண்மை கண்ட நாட்டில்.
பேரும் அதற் கில்லை - தம்பி
பெண்டும் அதற் கில்லை.
தேரும் அதற் கில்லை - தம்பி
77
சேயும் அதற் கில்லை. 55
ஆரும் அதன் மக்கள் - அது
அத்த னைக்கும் வித்து!
உள்ள தொரு தெய்வம் - அதற்
குருவ மில்லை தம்பி.
அள்ளி வைத்த ஆப்பி* - தம்பி
அதிற் கடவுள் இல்லை.
* ஆப்பி - பசுவின் சாணம்
குள்ள மில்லை தெய்வம் - அது
கோயில் களில் இல்லை.
தெள்ளு பொடி* பூசும் - தம்பி
சிவன் கடவு ளல்ல. 60
*தெள்ளுபொடி - திருநீறு
[அறுப துடன் ஒன்று] - தம்பி
அரி கடவுள் அல்ல.
அறுமு கனும் அல்ல - தம்பி
ஐங்கை யனும் அல்ல.
அறு சமயம் சொல்லும் - தம்பி
அது கடவுள் அல்ல.
பிற மதத்தில் இல்லை - அந்தப்
பெரிய பொருள் தம்பி.
திராவி டர்கள் முன்பே - தம்பி
தெரிந் துணர்ந்த உண்மை. 65
ஒரு மதமும் வேண்டாம் - தம்பி
உண்மை யுடை யார்க்கே.
பெரு மதங்கள் என்னும் - அந்தப்
பேய் பிடிக்க வேண்டாம்.
திருட்டுக் குரு மாரின் - கெட்ட
செயலை ஒப்ப வேண்டாம்.
காணிக் கைகள் கொட்டி - நீ
கண் கலங்க வேண்டாம்!
ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி
[எழுபதுடன்] வாழி! 70
தோணி யினில் ஏற்றி - நல்ல
சொர்க்கம் சேர்க்க மாட்டார்.
நாண மற்ற பேச்சை - நீ
நம்ப வேண்டாம் தம்பி.
சாதி யில்லை தம்பி - மக்கள்
தாழ் வுயர்வும் இல்லை.
78
தீத கற்ற வந்த - நம்
திருக்கு றளைப் பாராய்.
நீதி பொது தம்பி - இந்த
நீணி லத்தில் யார்க்கும். 75
மாத ருக்கும் நீதி - ஆண்
மக்க ளுக்கும் ஒன்றே.
பச்சை விளக் காகும் - உன்
பகுத் தறிவு தம்பி.
பச்சை விளக் காலே - நல்ல
பாதை பிடி தம்பி!
அச்ச மில்லை தம்பி - நல்ல
அறம் இருக்கும் போது!
எச்ச ரிக்கை கண்டாய் - தம்பி
[எண்ப துடன்] வாழி! 80
வள்ளு வரின் நூலே - நல்ல
வழி யளிக்கும் தம்பி.
குள்ளர் வழிச் சென்று - நீ
குழியில் விழ வேண்டாம்.
உள்ள இனத் தார்கள் - உளம்
ஒன்று பட வேண்டும்.
தள்ளுக யுபொ றாமைரு - ஒரு
தாய் வயிற்று மக்கள்.
நீக்குக பே ராசை - தம்பி
நிகர் எவரும் ஆவார். 85
போக்கு சினம் தீச்சொல் - நீ
பொன் அறத்தை வாழ்த்து.
சேர்க்கும் அறம் உன்னை - ஒரு
தீங்கும் அற்ற வாழ்வில்!
ஊர்க் குழைக்க வேண்டும் - நீ
உண்மை யுடன் தம்பி.
நாட்டுக் குழை தம்பி - இந்த
நானி லத்தை எண்ணி.
வீட்டுக் குழை தம்பி - இங்கு
மீதிப் பெயர் எண்ணி! 90
தோட்டம் பொது தம்பி - இந்தச்
சீமை பொது தம்பி,
தேட்டம் பொது தம்பி - உணர்
[தொண்ணூ றோடி ரண்டே.]
கண் அடித் தழைக்கும் - ஒரு
79
கட் டழகி தன்னை,
எண்ணம் ஒத் திருந்தால் - நீ
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பண்ணி வைப்ப தாக - வரும்
பார்ப்பு* மணம் வேண்டாம். 95
* பார்ப்பு - பார்ப்பனன்
கண்ம ணியும் நீயும் - நல்ல
காதல் மணம் கொள்வீர்.
திராவி டத்தை மீட்பீர் - நம்
செந் தமிழை மீட்பீர்.
திராவி டர்கள் ஒன்றாய்த் - தம்பி
சேர்ந் துழைக்க வேண்டும்.
திராவி டத்தில் மாற்றார் - தமைச்
சேர விட வேண்டாம்.
ஒரே உறுதி கொள்வாய் - தம்பி
[ஒருநூ றுடன்] வாழி! 100
பிற்பகல்
மாலை
உச்சிக் குடை சாய்ந்தான் - கதிர்
[ஒன்று டனே] வாழி!
மச்சு வேய்ந்தி ருந்தான் - அந்த
மாற் றுயர்ந்த பொன்னன்,
மெச்சு தடி பெண்ணே - அந்த
வெய்யி லையும் வையம்.
வைச்ச புள்ளி மாறான் - அவன்
மாலை மாற்றப் போவான்.
ஒழுக்கம்
நல்லொ ழுக்கம் ஒன்றே - பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும். 5
புல் ஒழுக்கம் தீமை - பெண்ணே
பொய் உரைத்தல் தீமை!
இல்ல றமே பெண்ணே - இங்கு
நல்ல றமென் பார்கள்.
கல்வி யுடை யோரே - பெண்ணே
கண்ணு டைய ராவார்.
நன்றி மற வாதே - பெண்ணே
நற் பொறுமை வேண்டும்.
இன்சொல் இனி தாகும் - பெண்ணே
80
இன்னல் செய்ய வேண்டாம். 10
உன்ன ருமை நாட்டின் - பெண்ணே
உண்மை நிலை காண்பாய்.
இந்நி லத்தின் தொண்டில் - நீ
ஈடு பட வேண்டும்.
[பத்து டனே மூன்று] - நீ
பகுத் தறிவைப் போற்று!
நத்தி யிரு பெண்ணே - நீ
நல்ல வரை என்றும்!
சொத்து வரும் என்று - நீ
தோது தவ ராதே. 15
முத்து வரும் என்று - நீ
முறை தவற வேண்டாம்.
கனியத் தமிழ் பாடு - பெண்ணே
கச்சே ரிசெய் யாதே.
சினிமா வினிற் சேர்ந்து - நீ
தீமை யடை யாதே!
தனித்து வரும் போது - கெட்ட
தறுதலை கண் வைத்தால்,
இனிக்க நலம் கூறு - பெண்ணே
இல்லா விடில் தாக்கு. 20
[இருப துடன் ஒன்றே] - பெண்ணே
இத்தி ராவி டத்தில்
அரிசி மட்டும் இல்லை - பெண்ணே
ஆட்சி மட்டும் உண்டு.
இரிசன் மகன் முத்தை - பெண்ணே
யுஇந்தி படிரு யென்றான்.
வரிசை கெட்ட மூளி - அவன்
வைத்த துதான் சட்டம்!
[இருப துடன் ஐந்தே] - நம்
இனிய தமிழ்த் தாயைக் 25
கருவ றுத்துப் போடும் - ஒரு
கத்தி யடி இந்தி.
அரிய செயல் ஒன்று - பெண்ணே
ஆளு பவர் செய்தார்.
ஒருவ ருக்கும் கள்ளைப் - பெண்ணே
ஒழிக்கச் சட்டம் செய்தார்.
கள்ளை விட்ட பேர்க்குப் - பெண்ணே
கைப் பணமும் மீதி.
81
முள் விலக்கி னார்கள் - பெண்ணே
[முப்ப துடன்] வாழி! 30
கள்ளை விட்டுக் கையில் - பெண்ணே
காசு மீத்தச் செய்தார்.
கள்ளக் கடை போட்டார் - அதைக்
கழற்ற வழி செய்தார்.
ஆள வந்தார் உண்டு - பெண்ணே
ஐயோ பெரும் மண்டு.
நாளும் கையில் மட்டும் - பெண்ணே
நல்ல வரு மானம்!
ஆளுக் கென்ன பஞ்சம் - பெண்ணே
அடி மடியில் லஞ்சம்! 35
தோளி லேமி டுக்காம் - அவர்
தொழுவ தோவ டக்காம்!
கெண்டை விழி யாளே - அடி
கிள்ளை மொழி யாளே,
கொண்டை யிலே பூவும் - உன்
கோணை நெடு வாக்கும்,
தண்டை யிலே பாட்டும் - உன்
தாழ் அடியில் கூத்தும்,
கண்ட வுடன் காதல் - நான்
கொண்டே னேஉன் மீதில். 40
[நாற்ப துடன் ஒன்று] - பெண்ணே
நான் உனக்கு மாமன்.
நேற்று வந்து போனாய் - அடி
நீல மயில் போலே.
மாற்று யர்ந்த பொன்னே - அடி
மாணிக் கமே கேளாய்,
சோற்றை மறந் தேனே - அடி
தூக்க மில்லை மானே.
உன் நினைப்புத் தானே - அடி
ஊற்றெ டுத்த தேனே! 45
என்னைக் கொல்லு தேடி - அடி
ஏதுக் கிந்த மோடி?
சின்ன வய தாளே - அடி
சிரித்த முகத் தாளே
அன்ன நடை யாளே நல்ல
அச்ச இடை யாளே
துள்ளு வதென் ஆசை - அடி
82
துடித்த தடி மீசை.
அள்ளு வதென் காதல் - அடி
[ஐம்ப துடன்] வாழி! 50
தள்ளத் தகு மோடி - நான்
தாய்க்குத் தலைப் பிள்ளை.
நொள்ளை யல்ல பெண்ணே - நான்
நொண்டி யல்ல பெண்ணே.
வருத்தம் இல்லை பெண்ணே - என்
மாமிக் கும்என் மேலே
கருத்தும் உண்டு மாமன் - என்னைக்
கட்டிக் கொள்ளச் சொல்வான்.
சிரிப்பு மலர் வாயால் - அடி
தெரிவி ஒரு பேச்சே, 55
கருத்தை உரை கொஞ்சம் - பெண்ணே
கல்லடி உன் நெஞ்சம்.
பார் இரண்டு சிட்டு - பெண்ணே
பழகும் ஒன்று பட்டு
யார் தடுக்கக் கூடும்? - பெண்ணே
[ஐம்ப துடன் எட்டு]
பீர்க்க மலர் பூக்கும் - அடி
பின் பொழுதும் கண்டாய்
ஆர்க்கு தடி வண்டும் - பெண்ணே
[அறுபதுடன்] வாழி! 60
விரிந்த தடி முல்லை - அடி
வீசி யது தென்றல்.
சரிந்த தடி பெண்ணே - மலர்
தங்கப் பொடி எங்கும்.
எரிந்த தடி மேனி - பெண்ணே
இனிப் பொறுக்க மாட்டேன்.
புரிந்த னைஇந் நேரம் - அடி
பொல்லா தஒட் டாரம்.
பூட்டி வைத்த வீட்டின் - அடி
புது விளக்கும் நீயே. 65
மாட்டி வைத்த கூட்டில் - அடி
மணிக் கிளியும் நீயே.
போட்டு வைத்த சம்பா - இனிப்
பொங்கி டும்உன் னாலே.
கூட்டி வைத்த வீட்டின் - நல்ல
குடும்ப விளக் காவாய்.
83
கூண்டு வண்டி கட்டி - நாம்
கூட லூர்அ டைந்தால்
பாண்டி யன்கு டும்பம் - என்று
பார்த்து மகிழ் வார்கள். 70
தாண்டு நடை போட்டு - நாம்
தகத கென்று போனால்
மாண்ட நெடுஞ் சோழன் - அவன்
வளர் குடும்பம் என்பார்.
தையல், என்றன் வீட்டில் - நீ
சமையல் செய்யும் போதுன்
கையழகு பார்த்து - நான்
களித்தி டுவேன் பெண்ணே.
கையில் விளக் கேந்தி - நீ
கடைசி அறை போவாய் 75
பொய்யல் லவே பெண்ணே - மிகப்
பூரிக்கும் என் மேனி.
[எழுப துடன் ஏழு] - பெண்ணே
இளமை மாறிப் போகும்
அழகு மாறிப் போகும் - நீ
அறிந்து நட பெண்ணே.
குழந்தை குட்டி பெற்று - நாம்
குறை தவிர்க்க வேண்டும்.
பிழிந்த பழச் சாறே - அடி
பேச்சும் உண்டோ வேறே. 80
தங்கக் கதிர் மேற்கில் - மெல்லத்
தவழ்ந்த தடி பெண்ணே.
மங்கிற் றடி வெய்யில் - அதோ
மகிழ்ந்த தடி அல்லி.
தங்கும் தாம ரைப்பூ - மானே
தளர்ந்த தடி மேனி.
பொங்கிற் றடி காதல் - அடி
பூவை யேஉன் மீதில்!
[எண்ப துடன் ஐந்தே] - பெண்ணே
எருது களின் கூட்டம் 85
கண் மகிழ்ந்து பெண்ணே - அவை
கழனி விட்டுப் போகும்.
பெண் மயிலே என்னை - நீ
பெருமை படச் செய்வாய்.
உண்மை யிலே நானே - உன்
84
ஊழி யம்செய் வேனே.
பட்ட தடி உன்கை - பெண்ணே
பலித்த தடி வாழ்வு.
தொட்ட துது லங்கும் - இனித்
[தொண்ணூ றுடன்] வாழ்க! 90
இட்டது நீ சட்டம் - என்
இன்பப் பெரு மாட்டி.
விட்டுப் பிரி யாதே - எந்த
வேளை யிலும் மாதே.
ஆறு தலைச் செய்வாய் - என்
அண்டை யிலி ருந்தே.
மாறி டுமோ கண்ணே - நம்
வாழ்க் கையிலே எண்ணம்?
மாறும் படிச் செய்வார் - இவ்
வைய கத்தில் இல்லை. 95
ஊறு தடி அன்பும் - பெண்ணே
ஓங் கிடுதே இன்பம்.
தேக்கி யது நீலம் - அந்தச்
செங்க திரின் மேலே.
பூக்கும் மண முல்லை - இனிப்
போகு மடி மாலை.
வாய்க்க விளக் கேற்றி - நகர்
மாத ரும்ம கிழ்ந்தார்.
நோக்கி யது வையம் - பெண்ணே
[நூறு டனே] வாழி! 100

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#5._ஏற்றப்_பாட்டு