Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நம் மாதர் நிலை

  • PDF

பழங்கால அறைக்குளே பதினைந்து திருடர்கள்
பதுங்கிடவும் வசதியுண்டு.
பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்
பதிந்திடவும் வசதியுண்டு.
முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும்
முன்றானை மாற்றமுண்டு.
முடிகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியே
முடிவடைய மார்க்கமுண்டு.

தொழுங்கணவன் ஆடையிற் சிறுபொத்தல் தைக்கவும்
தொகைகேட்கும் ஆட்கள்வேண்டும்.
தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
சுவருண்டு வீட்டில்.இந்த
ஒழுங்கெலாம் நம்மாதர் வாரத்தின் ஏழுநாள்
உயர்விரதம் அநுஷ்டிப்பதால்
உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண்
டுணர்ந்த பாரததேசமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt169