Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா? புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது?

  • PDF

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா? சரி முரணானவை என்றால் எப்படி? எந்த வகையில்? எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில்? இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள்,

 இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களாக இருப்பதில்லை. எனவே அதை பற்றிய ஒரு விவாதமல்ல இது.

 

அண்மைக் காலமாக மேற்குக்கு எதிராக இந்தியா அல்லது தென்னாசிய நாடுகளின் பகை முரண்பாடுகள் பற்றி கற்பனையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. புலி, புலியல்லாத ஆய்வுகள் கூட இதற்குள் கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒரு அரசியல் தளம், உலகமயமாதல் எதார்த்தத்தை திரித்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் புலிகள் மட்டுமல்ல, புலிகளின் எதிர்தரப்பின் ஒரு பகுதியும் கூட இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். வாதங்கள் சகட்டு மேனியில் கண்மூடித்தனமாகவே நடத்தப்படுகின்றது. அரசியலற்ற வெற்றுத்தனங்கள், இப்படி வம்பளக்க வைக்கப்படுகின்றது.

 

இது போன்றே ஜே.வி.பி அரசியல் செயல்பாடுகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. தென்னாசிய சமூகத்தை சார்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சார்ந்து நின்று மேற்கை எதிர்ப்பது போன்ற ஒரு அரசியல் பிரமையை, நாடகத்தை, ஒரு மயக்கத்தை உருவாக்குகின்றனர். சிலர் புலி மேற்கைச் சார்ந்ததாக காட்டி, தென்னாசிய அரசியலை ஆதரிக்கும் வகையில் புலிகளை அழிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி முரண்நிலைத் தன்மையான வாதங்கள். புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவும், தாங்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் செயல்படத் தவறுகின்ற போதும் இது வீங்கி வெம்புகின்றது. கற்பனைப் புனைவுகளும், குதர்க்கமும், குழப்பமும் இதன் அரசியல் சாரமாகும்.

 

புலிகளின் அரசியல் நெருக்கடிகள் முதல் சமகால நிலமைகளை புரிந்து விளக்குதல் எப்படி என்ற கேள்வி விடையாகவே, இந்த மலிவான அரசியல் திரிபு புகுத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் புலியை மேற்கின் எடுபிடிகளாக செயல்படுவதாக சித்தரிப்பது முதல், இந்தியாவுக்கும் மேற்குக்கும் முரண்பாடுகள் உள்ளதாக காட்டி புலிகள் நீச்சல் அடிப்பது வரை, இந்த கற்பனை அரசியல் அரங்கம் கட்டமைக்கப்படுகின்றது.

 

உண்மையில் அரசியல் பொருளாதார அடிப்படையில் வாதிடத் தவறுகின்றனர். மேலோட்டமான நிகழ்ச்சிகள் மீது மேய்கின்ற ஒரு திசைவிலகலாகவே, இவை பொத்தாம் பொதுவில் அணுகப்படுகின்றது.

 

புலிகளின் விமானத் தாக்குதல் நடந்ததன் பின்பாக இந்த நடவடிக்கை தென்னாசியாவுக்கு ஆபத்து என்றும், இது மேற்கத்தைய சதி என்றும், இதுபோன்ற பல புலியல்லாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ரீதியாக புலிகள் பற்றிய நிலைப்பாட்டுக்கு மாறானது. உலகமயமாதல் புலிகளை ஒரே வகையில் தான், ஒரு நேர்கோட்டில் தான் புரிந்து கொள்கின்றது. புலிகளைப் பற்றி அபத்தமான வகையில் மதிப்பிடுவது மட்டுமின்றி, தென்னாசிய சூழலையே தலைகீழாக்கி விடுகின்றனர். புலிகளை அனைத்துக்குமான மையப்புள்ளியாக வைத்து, தென்னாசிய மற்றும் மேற்கத்தைய நலன்களைப் பற்றிய ஆய்வுகள், முடிவுகளை அறிவிப்பது அபத்தமாகும்.

 

மேற்கில் புலிகளை ஒடுக்கும் நடிவடிக்கைகள் நடக்காத நிலையில், அதையிட்டும் புலம்பும் புலியெதிர்ப்பு, மேற்கு புலிக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவது நிகழ்கின்றது. மேற்கு நடவடிக்கைகள் சட்டதிட்ட எல்லைக்குள் இருப்பதைக் காண்பதில்லை. புலிகளிடம் மட்டும் ஜனநாயகத்தைக் கோரும் ஜனநாயக விரோதிகளுக்கு, இது சூக்குமமாகி புரிய மறுக்கின்றது. மேற்கின் நிலைப்பாடுகள் இனப்பிரச்சனையை தீர்க்கின்ற எல்லைக்குள் தான், நடவடிக்கைளை மட்டுப்படுத்துகின்றது. இந்த வகையில் இலங்கை அரசின் தீர்வு நடவடிக்கையுடன் ஒருங்கிணைந்ததாகவே அமையும்.

 

முரண்பாடு பற்றிய கற்பனை ஆய்வுக்கு மையமாக இந்தியாவின் கொள்கை பற்றியும், அதன் மேற்கு விரோத நிலை பற்றியும் பற்பல எடுகோள்கள். உண்மையில் அரசியலை ஒரு இடை நீக்கல் வழியாக கற்பித்து, அதன் ஊடாக தேடுவது இதன் சாரமாகும்.

 

மேற்குடனான தென்னாசிய முரண்பாடு அதாவது இந்திய முரண்பாட்டின் சாரம் என்ன? அது எங்கிருந்து, எப்படி எந்த வழியில் உருவாகின்றது. இதற்கான அரசியல் அடிப்படை தான் என்ன? பொருளாதார அடிப்படைகள் தான் என்ன?

 

1. இந்தக் கேள்விகள் பற்றியும், இந்தியாவின் உள்ளார்ந்த புரட்சிகர பிரிவுகளின் மைய விவாதத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

 

2. முரண்பாடு, முரண்பாட்டின் தன்மை என்பது அனைத்தும் தழுவியது. முரண்பாடுகள் இல்லாத உலகம் என்பது கற்பனையானது. ஒரு மனிதனுக்குள்ளும், அவனின் சிந்தனைக்குள்ளும் கூட முரண்பாடுகள் உண்டு. ஒரு முரண்பாடு அனைத்தும் தழுவியதாக, காணப்படும் போது, முரண்பாடுகளின் எதிர் நேர் முரண் தன்மையில் ஒன்று மேலோங்கி காணப்படும். சடப்பொருள் முதல் உயிர் உள்ளவற்றின் இயக்கமே அது சார்ந்தது தான்.

 

இந்த வகையில் மனிதனைச் சூறையாடும் இன்றைய உலகமயமாதல் என்ற சமூக அமைப்பில், இந்தியாவுக்கும் மேற்குக்கும் இடையில் முரண்பாடு உண்டா? இங்கு இவர்களுக்கு இடையில் அரசியல் பொருளாதார முரண்பாடுகள், எதிர்நிலைத் தன்மையிலா காணப்படுகின்றது? இல்லை, மாறாக முரண்பாடுகள் நட்பு முரண்பாடாக காணப்படுவதுடன், மேற்கின் நலன்கள் தான் இந்தியாவின் நலன்களாக உள்ளது. அதாவது மேற்கின் நலன்கள் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் நலன்கள். ஏகாதிபத்திய நலன்கள் என்பதும் இது சார்ந்ததே. இந்த வகையில் தான் இந்திய ஆளும் சுரண்டும் வர்க்கம், உலகமயமாதலை ஒருங்கமைத்துள்ளது. அனைத்து சுரண்டல் வடிவங்களும், அதை பாதுகாக்கும் சட்ட அமைப்புகளும், மேற்கின் (ஏகாதிபத்திய) சுரண்டல் நலன்களுடன் பின்னிப்பிணைந்தாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முரண்பாடுகள் படிப்படியாக களையப்படுகின்றது. அதாவது இந்தியாவின் உழைக்கும் மக்களுடன் உள்ள ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகள், முத்தி ஒரு மோதலாக மாறாத வண்ணம் மிக அவதானமாக இருக்கும் போதுதான், மேற்குடனான முரண்பாடுகள் இருப்பது போல் காட்சியளிக்கின்றது. கானல் நீராக உள்ள இந்த முரண்பாடு, படிப்படியாகவே அகற்றப்படுகின்றது. உழைக்கும் மக்களுடான முரண்பாட்டை அவர்களுக்கு இடையிலானதாக்கி, மேற்கு முரண்பாடுகள் களையப்படுகின்றது.

 

இப்படி இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள் என்பது, மேற்கத்தைய சுரண்டல் நலனுக்கு முரணாக இருப்பதில்லை. இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, மேற்குக்கு எதிரானதல்ல. அதாவது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரானதல்ல.

 

இந்திய தரகுமுதலாளிகளின் நலன்கள் என்பது, இந்தியாவின் பரந்துபட்ட மக்களின் நலன்கள் அல்ல. இது ஆளும் வர்க்கத்தின் நலன்களாகும். இந்தியாவின் நலன்கள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு முன்பாகவே, ஏகாதிபத்திய சுரண்டலை அடிப்படையாக கொண்டே இருந்தது. இந்தியாவின் அன்றாடம் உருவாகும் தேசிய முதலாளிகளின் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் பிரதிபலிப்பதல்ல. இந்தியாவின் தேசிய முதலாளிகளின் நலன்கள், இந்தியாவின் போலிச் சுதந்திரத்தின் பின்பாக கூட பாதுகாக்கப்படவில்லை. அவையும் படிப்படியாக அன்றாடம் அழிக்கப்பட்டே வந்தன. இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் படி, அவை மேலும் வேகமாக திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இப்படி இந்திய மக்கள் நலன் சார்ந்த எந்த வர்க்கக் கூறினதும் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதில்லை. மாறாக அதற்கு எதிராக செயல்படுகின்றது. இதுவே தென்னாசிய நாடுகளின் நிலை கூட.

 

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்திய நலன்கள் தனித்துவமாக செயல்படுதில்லை. அதாவது மேற்குக்கு எதிரான ஒரு வர்க்கத்தின் நலனுக்காக, இலங்கை விடையத்தில் இந்தியா முரண்படுவது கிடையாது. அப்படி ஒரு வர்க்கத்தை இந்தியா பிரதிபலிப்பதில்லை. இந்நிலையில் முரண்படுவதாக கூறுவது, எந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டது?

 

வர்க்கங்களைக் கடந்தது இந்தியாவின் முரண்பாடு என்பது கற்பனையானது. ஒரு சார்பு நிலை என்பது, எங்கும் எதிலும் வர்க்கம் சார்ந்தது. இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள், ஏகாதிபத்திய வர்க்க நலனுக்கு முரணானதல்ல. முரணானது என்பது எப்படி?

 

புலிகளின் வர்க்க நலன் இந்திய நலனுடன், அதாவது மேற்கத்தைய நலனுடன் முரண்பட்டதல்ல. அதனால் அந்த எல்லையில், புலிகளுடன் அவர்கள் முரண்படுவதில்லை. புலிகளுடனான முரண்பாடு என்பது, புலிகளின் நலன்சார் நடவடிக்கை அந்த நாடுகளின் சுரண்டல் வர்க்கத்தின் நலனுக்கு இசைவானதாக அதே திசையில் இருப்பதில்லை. குறிப்பாக புலிகளின் தனிமனித நலன்சார் நடவடிக்கைகள், உலகமயமாதல் பொது நடைமுறைக்கு எதிரான வகையில் குத்தும் முள்ளாகி முரண்படுகின்றது. சுரண்டும் வாக்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, புலிகள் விடையத்தில் அதீதமான குழுவாதத்தால் பகைமுரண்பாடாக மாறிச் செல்லுகின்றது. இது உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்கு எதிராக அல்ல, மாறாக ஒரு மாபியாக் கும்பலுக்குரிய ஒரு பின்னணியில் இது ஏற்படுகின்றது.

 

மேற்கத்தைய மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு, புலிகள் பற்றிய அதன் வர்க்க உள்ளடக்கத்தில் முரண்பாடு கிடையாது. மாறாக அந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கம், சுதந்திரமாக சுரண்ட புலிகளின் மாபியா நடவடிக்கைகள் தடையாக இருக்கின்றது. இதனால் அதை அமைதியாக தீர்த்துக்கொள்ள, அந்த வர்க்கங்கள் தமக்குள் முனைப்புக் கொள்கின்றது.

 

சிலர் புலிகள் அதீதமாக மேற்கை சார்ந்ததாக நம்பவைக்க முனைகின்றனர். இந்தியாவுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் தரகுத்தன்மையின் குறிப்பான நிலையை, பொதுவானதுக்கு பொருத்த முனைவதாகும். எந்த சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுவது என்ற முரண்பாடாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகள், பிராந்திய முரண்பாடுகளின் அடிப்படையில் இது உள்ளது. இது பொதுவான இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் நட்பு முரண்பாடாகவே உள்ளது. இதில் ஒன்றை சார்ந்து நிற்க முனைதல், சுரண்டும் தரகு முதலாளிகளின் இருத்தலாகும். இது இந்தியாவின் தரகு முதலாளிகளுக்குள்ளும் காணப்படுகின்றது. இது எங்கும் தழுவிய ஒரு முரண்பாடு. புலிகள் பொதுவான மேற்கத்தைய சார்பும், உள்ளார்ந்த அதனுடன் இந்திய சார்பு நிலையும் கூட காணப்படுகின்றது.

 

சுரண்டும் வர்க்கத்தின் குறிப்பான நலன்கள் சார்ந்த போக்காகும். இதுவே பகை முரண்பாடாக, ஆளும் வர்க்க மோதலாக மாறுவது உண்டு. இன்று இலங்கை விவகாரத்தில் இது பகை முரண்பாடாக செயல்படவில்லை. இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்று கலத்தலிலுள்ள சொந்த வர்க்க முரண்பாட்டை களைவதற்கான அதனுள்ள முரண்பாடு, புலிகள் விடையமாக இருப்பதில்லை. இது மிகையான கற்பனை. ஆனால் அப்படி இருப்பதாக புலிகள், புலிகள் அல்லாத பலரும் நம்ப முனைகின்றனர். புலியை மையமாக வைத்து, சர்வதேச நிகழ்ச்சியை குருட்டுக் கண்ணால் புஞ்சிப் பார்ப்பதன் விளைவு இது.

 

குட்டிபூர்சுவா இயக்கமாக தொடங்கி தரகு முதலாளிய இயக்கமாக மாறிய புலிகள், மேற்கு சார்பு நிலையை மேற்கொள்கின்றது. இது எந்த விதத்திலும் இந்திய ஆளும் வர்க்க சுரண்டல் நலனுக்கு முரணானதல்ல. தரகு முதலாளியப் புலிகள் இந்த வர்க்க சார்புத் தன்மையை அரசியல் நடைமுறையாக்க முடியாது போன நிலையில், ஒரு மாபியாக் குழுவாக மாறிவிட்டது. அது தரகு முதலாளிய வர்க்க நலனையும் இன்று பிரதிபலிப்பதில்லை. தரகு முதலாளிய வர்க்க எல்லையைக் கடந்த அதன் மாபியாத்தனம், உலகமயமாதலுக்குள் எப்படி புகுந்து கொள்ளை அடிப்பது என்ற எல்லைக்குள் அது தானாக சீரழிந்துவிட்டது. அது மாபியாத்தனத்தை பாதுகாக்க, மக்களுக்கு எதிரான ஒரு தேசியத்தை அரசியல் கோரிக்கையாக வைத்து, பாசிசமாக தன்னை அலங்கரிக்கின்றது.

 

உலகமயமாதலின் சுரண்டும் வர்க்கங்கள் இந்த மாபியா குழுவைப் பயன்படுத்தி நீச்சலடிப்பதில்லை. அதேபோல் உலகமயமாதல் என்ற சுரண்டும் வர்க்கத்தை, புலிகள் தமக்கு தமது மாபியாத் தனத்துக்கும் பயன்படுத்த முடியாது. சுரண்டும் வர்க்கத்தின் உள்ளான முரண்பாடுகள் எங்கும் தழுவியது. இது சிறப்பாக இந்தியா மேற்கு என்று மட்டும் பிரிந்து காணப்படுவதில்லை.

 

இந்தியா பிராந்திய ஆதிக்க சக்தியாக இருத்தல் என்பது, உலகமயமாதல் நலனுக்கு முரணானதல்ல. உலகமயமாதலில் உள்ளார்ந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டே, பிராந்திய ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றது. மற்றைய ஆதிக்க சக்திகளுடனான முரண்பாடு என்பது, இன்றைய உலகமயமாதலில் போக்கில் பகை முரண்பாடானதல்ல. மாறாக சுரண்டும் வர்க்கங்களிடையேயான நட்பு முரண்பாடுதான். இதில் புலிகள் விடையத்தில், புலிகளை கையாள்வதில் முரண்பாடுகள் உள்ளதாக காண்பதும் காட்டுவதும் சுத்த அபத்தம்.

 

இலங்கையில் எந்தளவில்? எப்படி? மேற்கத்தைய மற்றும் இந்திய ஆதிக்கம் நீடிப்பது என்பது, உலகமயமாதல் பொருளாதார நலனுக்கு முரணாக செயல்படுவதில்லை. அப்படி ஒரு முரண்பாடு ஏற்படும் போது, அதுவே இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு யுத்தமாக மாறுகின்றது.

 

சிலர் இலங்கையை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்குரிய நாடல்ல என்கின்றனர். மாறாக இராணுவ தளம் சார்ந்தது என்கின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்திய இந்திய முரண்பாட்டை காட்ட முனைகின்றனர். இலங்கை இராணுவ ரீதியானதாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சுரண்டலுக்குரிய ஒரு நாடாகவே உள்ளது. இராணுவ ரீதியானதும், சர்வதேச கடல் போக்குவரத்து சார்ந்தும் இலங்கைக்கு உள்ள முக்கியத்துவம், என அனைத்தும் உலகமயமாதலின் பிரதான சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுடன் பின்னிப்பிணைந்தது. இதை பகை முரண்பாடாக, உலகமயமாதலில் செயல்படும் சுரண்டும் வர்க்கங்கள் கையாள்வது கிடையாது.

 

அனைத்தும் தழுவிய முரண்பாடு எங்கும் எதிலும் உண்டு என்பதும், அதை பகை முரண்பாடாக மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு தேடிக் காட்டுவது அரசியல் அபத்தமாகும். பிராந்திய ரீதியான முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, பகையாக மட்டும் திரித்துக்காட்டுவது அதை விட அபத்தமாகும். முரண்பாடுகள் என்பது, தனித்து ஒன்றாக மட்டும், அது மட்டும், அதுவே முழித்துக் கொண்டிருப்பதில்லை அது பலவாக இருப்பதுடன், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் முன்னிலைக்குரிய இடத்துக்கு மாறிச் செல்லுகின்றது.

 

புலிகளின் பாத்திரம் என்பது, அதன் எஞ்சிய அரசியல் அடிப்படையை தகர்த்து வருகின்றது. வெறும் லும்பன் மாபியா அராஜக குழுவாக, அரசியல் ரீதியாக பாசிட்டுகளாக மாறிவிட்டனர். இதன் வர்க்க அடிப்படை என்பது குறுகி குட்டி இராணுவத் தளபதிகளின் நலன்களாகி சீரழிந்துவிட்டது. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ளும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. சினிமா பாணியிலான கதாநாயக நடவடிக்கையின் மூலம், தனது இருப்பை தக்கவைக்க முனைகின்றது. ஒரு வர்க்கத்தின் சுரண்டல் நலன் என்ற, அரசியல் அடிப்படையில் செயல்படுவது கிடையாது. அராஜகவாத லும்பன்தன சாகசத்தில், தனது இருப்பு சார்ந்த போராட்டத்தை நடத்துகின்றது. இந்தக் குழுவின் அராஜகவாத லும்பன் செயலை, மேற்குடன் அல்லது இந்தியாவுடன் இணைத்துக் காட்டுவது, புலிகளைப் போல் அரசியலற்ற வெற்றுத் தனமாகும்.

பி.இரயாகரன்
14.4.2007

Last Updated on Saturday, 19 April 2008 06:25

சமூகவியலாளர்கள்

< April 2007 >
Mo Tu We Th Fr Sa Su
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30            

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை