Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இயற்கையும் உயிர்வாழ்தலும்

இயற்கையும் உயிர்வாழ்தலும்

  • PDF

இயற்கையை நாம் புரிந்து கொள்ளாமல் நாம் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ்தலுக்கு இயற்கை அவசியமாகின்றது. இன்றைய நவீன அறிவியல் மனித வாழ்வையே இயற்கை வாழ்வாக விளக்குகின்றது. இதை அடிப்படையாக கொண்டு உயிர் வாழ்வதற்கான இயற்கையை அழிப்பதன் மூலம்,

 மாபெரும் சமூக குற்றத்தை இழைக்கின்றனர். இதை நாம் புரிந்த கொள்ள இயற்கையையும், உயிர்வாழ்தலையும் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். நாம் எதைத் தெரிந்த வைத்திருக்கின்றோமோ அதை தலை கீழாக புரிந்து மாற்றியாக வேண்டும்;. சிந்தனை தளத்தை விரிவாக்கும் வகையில் சுருக்கமாக இக் கட்டுரையூடாக உங்களை அனுகுகின்றேன்.



அமெரிக்க செவ்விந்திய தலைவர்களின் ஒருவர்; கூறினார் "எங்களுக்கு இதுவரை தெரியும்@ பூமி மனிதனுக்கு சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன். ஒரு குடும்பத்தின் ரத்தத்தை போல அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பூமியிலுள்ள உயிரினச் சங்கிலி வலையை மனிதன் நெய்யவில்லை. அவன் அதில் ஒரு நூல் அவ்வளவே." நவீன அறிவியல் இதை மறுக்கின்றது. பூமி மனிதனுக்கு சொந்தமானது என்று மார்பு தட்டுகின்றான்;. மனிதன் அனைத்தையும் சூறையாடுகின்றான்;. அனைத்தையும் வரைமுறையின்றி கற்பழிக்கின்றான்;. வரைமுறையின்றி நுகர்கின்ற அதே தளத்தில், அந்த கழிவுகளை பூமியில் குவிக்கின்றான்;. மீள் பயன்பாடு என்பதும், சுழற்சி என்பதும் மறுக்கப்படுகின்றது. மறாக இயற்கையை கற்பழித்து பணம் பண்ணுவதும், நுகர்வதும் வக்கிரமடைகின்றது. அனைத்தும் பணத்தை அடிப்படையாக கொண்டு, அதை பெருக்குவதை பண்பாடாக கொண்டு, மனித வரலாறுகள் திரிக்கப்படுகின்றது. நுகர்வும் அது சாhந்த சந்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மாற்றியமைக்கின்றது. இது தேசிய எல்லை கடந்து, அனைத்து தடையையும் கடந்து ஆதிக்கம் பெறுகின்றது.

 

இன்று குடிக்கும் தண்ணிருக்கே அலையும் வாழ்கை உலகில் தோன்றிவிட்டது. அதை பணம் கொடுத்த வாங்கும் மனித அவலம் தொடங்கிவிட்டது. நடக்கும் பாதைகளுக்கே பணம் கட்டி வாழ வேண்டிய அவலம் உலகில் தொடங்கிவிட்டது. எரிக்கும் விறக்கும், மலம் கழிப்பதற்கும், இருக்கும் இடத்துக்கும், இயற்கையை இரசிப்பதற்கும் என அனைத்துக்கும் பணம் கட்ட வேண்டிய மனித அவலம் எப்படி நிகழ்ந்தது. சுவாசிக்கும் காற்றுக்கே பணம் செலுத்தும் நாளுக்கு மிக அருகில் நாம் வாழ்கின்றோம். நிலம், மலை, கடல், நீர், இயற்கை என இந்த பூமியில் உருவான அனைத்தும், இயற்கையில் மனிதனுக்கு வெளியில் சுயோட்சையாக இருந்தன. இயற்கையில் உருவான உயிரினங்கள் இயற்கையில் இதை நுகர்ந்தன. இந்த இயற்கைக்கு யாரும் பணம் கொடுத்து வாங்கவில்லை. ஆனால் இன்று இயற்கை அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் சொத்தாகிவிட்டது. இது எப்படி நிகழமுடியும்;. ஆனால் நிகழ்ந்துள்ளது. எப்படி? இதை எப்படி நாம் இயக்கையின் உயிரியாக இருக்கும் வரை, சிந்திக்கும் ஆற்றல் உள்ள வரை, அங்கிகரித்து ஆதரிக்க முடியும். ஆனால் சிந்தனையற்ற மந்தைகளாக நீடிக்கும் வரை இது தொடரும். அனைத்தையும் கேள்வியின்றி மந்தைகளாக நுகரவும், அதற்கு மண்டியிட்டு சேவகம் செய்வதும் தொடரும்;. எமது சுதந்திரமான தெரிவு என்பதும் பணம் உள்ளவன் தருவதற்குள் தான் என்பதை, புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. உனது உழைப்பை நீ சுதந்திரமாக, இந்த அமைப்பில் விற்க முடியாது. மறாக அவனின் நிபந்தனைக்கும், அவனின் சட்ட எல்லைக்குள்ளும் ஒரு சுதந்திர அடிமையாக நீ வாங்கப்படுகின்றாய் என்பதை புரிந்தாக வேண்டும்;. அங்கும் உனது உழைப்பை ஒரு இயந்திரத்தின் உறுப்பாக, இயந்திரத்தின் அடிமையாகவே செயற்படுகின்றாய் என்பதை நீ புரிந்தாக வேண்டும்;. இந்த எல்லைக்குள் அனைத்தும் சந்தைப்படுத்தி நுகரப்படுகின்றது. இதை உலகமயமாக்குவதில் உலகம் வேக நடைபோடுகின்றது. இது மனிதனை மட்டுமல்ல, உயிரியல் தொகுதிகளையும், இயற்கையும் அழித்து உலகமயமாதல் நிறுவப்படுகின்றது. இதை நாம் புரிந்து கொள்ளாத வரை, நாம் வெறுமானே ஒரு மந்தைக் கூட்டம் தான்;. இதில் இருந்து வெளிவருவது அவசியம். இயற்கையை புரிந்து கொள்வது அவசியம்;. இயற்கையைப் பாதுகாக்கப் போராடுவது அவசியம்.

 

இயற்கையில் பால்வெளி

 

சிறிய தூசியில் இருந்தே இந்த ப+மி முதல் பால்வெளி நட்;சத்திரன்கள் வரை உருவாகின.   சிறிய தூசியில் இருந்து மிகப் பெரிய கிரகம் வரை ஆராய்ந்தால், அவை அனைத்தும் உருவத்தில் மட்டுமே வேறுபடுகின்றது. இந்த பால்வெளி ஆரம்பத்தில் நெருப்பு கோளமாக இருந்தது. இது 800 கோடி முதல் 20000 கோடி வருடத்துக்கு முந்தியதாக விஞ்ஞனிகள் கணிப்பிடுகின்றனர். இதில் எற்பட்ட வெடிப்பே நச்சத்திரங்களாக உருவாகின. இது தொடர்சியாக விரிந்து பரந்து செல்லுகின்றது. இது எல்லையற்ற வகையில் விரிந்து பரந்து செல்லுகின்றது. அதாவது 10000 கோடி (சூரியன்) நட்சத்திரங்கள் கொண்ட 10000 கோடி பால் வெளிகள் இருப்பதாக அறிவியல் அறிந்துள்ளது. இதன் வயது ஒரு கோடியாகும்;. ஒவ்வொரு வருடமும் 10 புதிய நட்சத்திரங்கள் உருவாகி வருகின்றது. இன்று அண்ணளவாக 1022 நட்சத்திரங்கள் இருப்பதாக அறிவியல் மதிப்பிடுகின்றது. இதன் எல்லையே அதன் மையப்பகுதியில் இருந்து ஒரு லட்சம் ஒளிவருடங்கள் நீளமுடைய தட்டை வடிவில் உள்ளது. இந்த தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நச்சதிரங்களின் ஒளி பூமியை வந்தடைய, பல நூறயிரம் வருடங்கள் ஆகும். சூரியனின் ஒளி எம்மை வந்தடைய 8.5நிமிடங்கள் போதுமானது. என்பதில் இருந்து, இந்த பிரமாண்டமான பால் வெளியை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.  இங்கு ஒளியின் வேகம் என்பது செக்கனுக்கு 300 000கி.மீ துரத்தை கடக்கும் வேகமுடையது. ஒளிவருடம் என்பது 1013 கி.மீ துரத்தை கடக்கும் நேரமாகும். எமது கண்ணுக்கு தெரியும் நட்சத்திரத்தின் தூரம் 15000 -100000 ஒளி வருடமாகும். மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் 4.5 ஒளிவருடமாகும். 1.25 லட்சம் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்று அறிவியல் மதிப்பிடுகின்றது. இதை கண்டறிய மற்றைய உயிரினத்தின் சமிக்யைப் பெற 30 வருடமாக அனுப்பிய ரேடியோ சமிக்கைக்கு, பதில் முழுமையாக வந்தடைய 25000 வருடங்களாகும். அந்தளவுக்கு இந்த பால்வெளி மனிதனின் முன் மிகப்பரந்தாகும்.

 

நட்சத்திரத்தின் வெடிப்பை சூப்பர்நோவா என்று அழைக்கப்படும். இந்த வெடிப்பின் போது நட்சத்திரத்தின் பிரகாசம் 1000 முதல் பத்து லட்சம் மடங்குக்கு அதிகாரிக்கின்றது. பல பத்து லட்சம் வருடத்துக்கு முன் நடந்த வெடிப்பில் எற்பட்ட துசியில் இருந்தே, எமது சூரியன் உருவானது. எமது சூரியன் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தாகும். சூரியனை ஏனைய கிராகங்கள் சுற்றிவரும் அதேநேரம், சூரிய குடும்பம் பால் வெளியில் மிகப் பெரிய சுற்றில் சுற்றுகின்றது. சூரியனைப் போன்ற 1022  கோடி சூரியன்களும் (நட்சத்திரங்களும்) அதன் துணைக் கோள்களும் வான் வெளியில் மிகப்பெரிய சுற்றில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த சுற்றும் கூட பல நச்சத்திரங்கள் பல சுற்று வழியில் சுற்றுகின்றது. சூரியன் சுற்றும் சுற்றுவெளியை பூர்த்தி செய்ய, 25 கோடி வருடங்கள் செல்லுகின்றன. சூரியன் இது போன்று 20 முறை சுற்றியுள்ளது. வெற்றிடம் என்று நாம் கண்ணல் புரிந்து கருதும் பால் வெளி கூட, தூசு மண்டலங்களால் ஆனது. இந்த வெளியில் 80க்கு மேற்பட்ட மூலக் கூறுகள் பூமியில் உள்ளது போன்று இருப்பதை விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர். எமது சூரியன் இந்த பால் வெளியில் வெறுமனே தூசுதான். இந்த சூரியனை நாம் தெரிந்து கொள்வோம். 

 

இயற்கையில் சூரியன்

 

500 கோடி வருடத்துக்கு முன் 480 திரில்லியன் கிலோ மீற்றர் குறுக்களவு கொண்ட தூசு மோகம் ஒடுங்கி அடர்த்தி அதிகரித்தது. இதன் தொடர்ச்சியில் அணுக் கருவாகி அதில் இருந்தே சூரியன் உருவாகியது. அணுசக்தி ஒரு செக்கனுக்கு 59.2 கோடி தொன் ஐதாரசனை உருக்கி 410 லட்சம் தொன் சக்தியை அல்லது 38.3 கோடி மேகாவாட்சை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

 

சூரியனில் ஹைட்ரஜன் என்ற வாயு இல்லாது போனால் சூரியன் மிகப் பெரிய சிவப்பு உருண்டையாகிவிடும்;. இதனால் பூமி கருகி சம்பலாகிவிடும். இது நிகழுமாயின் சூரியன் இன்று இருப்பதைப் போல் 100 மடங்கு பெரிதாகி, வான் வெளியில் புகை சுருளாகிவிடும். சூரியன் பூமியை விட 10 லட்சம் மடங்கு பெரியது. எரிந்து வரும் சூரியனில் எற்பட்ட வெடிப்பின் ஒரு பகுதியே பூமியாகும். இப்படித்தான் அனைத்து சூரிய குடும்ப கோள்களும் உருவாகின. சூரியனின் விட்டம் 1 380 864 கிலோ மீற்றராகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 14.3 கோடி கி.மீற்றராகும். சூரிய ஒளி ப+மியை வந்தடைய 8.5 நிமிடங்களே போதுமானது.

 

சூரியனில் அணுச் சேர்க்கை நிகழ்வதால் புதிய அணு உருவாக்கம் நிகழ்கின்ற போது அது ஆற்றலாக வெளிப்படுகின்றது. இரண்டு ஐதரசன் அணு இனைந்த ஒரு ஈலியம் அணு உருவகின்றது. சூரியன் 1.40 கோடி செல்சியஸ் வெப்ப நிலையில் ஐதாரசன் அணுகள் மோதி  உருகி ஈலியத்தை உருவாக்கின்றன. 1000டன் ஹைட்ரஜனில் இருந்து 993 டன் ஹீலியமாக மாறுகின்றது. 7 தொன் சக்தியாக வெளியேறுகின்றது. இப்படி உருவாகும் அணுகளின் சொந்த ஈர்ப்புவிசை காரணமாக உள்ளிளுக்கின்றது. இது 28 நிமிடத்தில் ஒரு புள்ளியாகின்றது. இப்படி அளவுக்கதிகமாக சுருங்கும் போது ஒளி உமிழாத சூரியானகிவிடும்;. வான் வெளியில் காணப்படும் பல சூரியன் ஒளி உமிழாதவையாகிவிடுகின்றது. அதாவது ஈர்ப்பு விசையின் அதிகாரித்த தன்மை ஒளியை வெளியில் விடுவதை தடுக்கின்றது. இப்படிச் சுருங்குவதற்கு நேர் எதிராக விரிவடையும் போது வெடிப்பு நிகழ்கின்றது. இது பல கோள்களை உருவாக்கின்றது.

 

சூரியனின் நடுப்குதியின் வெப்பநிலை 1.4 கோடி சென்டிகிராட்டாகும். மேற்பரப்பின் வெப்பநிலை 6000 சென்றிரிகிராட்டாகும். 500 கோடி வருடத்துக்கு முன் தோன்றிய சூரியன் இன்னமும் 50 கோடி ஆண்டுகள் வாழும் என்று மதிப்பிடப்படுகின்றது. இறுதியாக அணையும் போது சூரியன் பெரிதாகி எரியும். இதனால் வெப்ப அதிகாரிப்பால் புதன், சுக்கிரன் கரைந்து ஆவியாகிவிடும்;. அப்போது எமது பூமி எரிந்து சம்பலாகிவிடும்;. சூரியன் விரிவடைந்து வருவதால் 50 கோடி வருடத்துக்கு பின் பூமி முற்றாக பலைவனமாகிவிடும். அது சுருங்கி 12 900 கிலோ மீற்றா கொண்ட வடிவத்தக்கு மாறி இருண்டுவிடும்;. 50 லட்சம் ஆண்டின் பின் கடல் நீர் முழுக்க ஆவியாகிவிடும். ஆண்டுகள் பல செல்ல கார்பன்டை ஒக்சைட்டின் அளவு குறையும்;  என்றும், உணவு தயாரிப்பில் இது இன்றியமைடயாத நிலையில் 95 சதவீதமான தாவரங்கள் அழியும் என்றும் ஆய்வுகள் நிறுவியுள்ளன. பூமியின் வெப்பநிலை 150 பாகைக்கு உயரும் என்றும் 16 கிலோ மீற்றர் உயரத்துக்கு கடல் நீர் ஆவியாகி நிரம்பும் என்று அறிவியல் தெரிவிக்கின்றது. இதற்கு மறுபட்ட ரீதியில் சூரியன் முழுவதும் சிதைவுறும் வரை, பூமி நெருப்பு பந்தமாக மாறும் வரை, நீரும் உயிரிணமும் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

 

சூரிய குடும்பத்தில் 9 கிரகங்களும், 53 உப கிரகங்களும் இந்த சூரிய குடும்பத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கில் பாரிய கல்லுகளும் சூரிய மண்டலத்தில் தனியான ஈர்ப்பு விசையுடன் சுற்றி வருகின்றது. இதைவிட சிறிய கிரகங்களும், இலட்சக்கணக்கான வால் நச்சத்திரங்களும் காணப்படுகின்றது. எமது சூரியனுடனும் அதைச் சுற்றி உள்ள கோள்களுடனும் பூமியை ஒப்பீடும் போது அற்பமானதே.

 

இயற்கையில் பூமி

 

பூமியின் விட்டம் 12 673 கிலோ மீற்றராகும். பூமி தன்னைத் தான் சுற்றிவரை 23 மணி 56 நிமிடங்கள் எடுக்கின்றன. பூமி சூரியனைச் சுற்றி வர 365.25 நாட்கள் எடுக்கின்றன. பூமியைச் சுற்றி 970 கி.மீற்றர் உயரத்துக்கு வாயு மண்டலம் காணப்படுகின்றது. பூமியின் ஆழம் 6377 கி;.மீற்றராகும். பூமியின் சுற்றளவு 25000 மைலாகும். பூமியின் ஒரு பாகம் நிலமாகவும் மிகுதி உப்பு நீராலான கடலாகவும் உள்ளது. பூமியில் காற்று வேகம் வினாடிக்கு 18.5 மைலாகும்.  மணித்தியலத்துக்கு 66000 மைல் வேகத்தில்; பூமி சுற்றுகிறது, ஒரு முறை சூரியனைச் சற்றிவர 60 கோடி மைல்கள் கடக்கின்றன. பூமியின் நிறை 6.6 லட்சம் கோடி தொன்களாகும். பூமியின் மேற்புறத்தில் இருந்து 1800 கி.மீற்றர் ஆழத்தில் கற்பாறைகள் உருகி குழம்பாக காணப்படுகின்றது. 265 கோடி வருடத்துக்கு முன் பூமி ஒரே நிலத் தொடராகவே இருந்தது. 20 கோடி வருடத்துக்கு முன் வடக்கு தெற்கு என இரண்டாக பிரிந்தது. சுமார் 17.5 கோடி வருடத்துக்கு முன் இந்தியா பிரிந்தது. காலப்போக்கில் ஆசியாவுடன் மோதியதால் திபெத் பீடபூமி உருவானது. அன்று இமையமலை இருக்கவில்லை. இந்தியா ஆசியாவுடன் தொடர்ச்சியாக மோதியதால் இமையமலை உருவானது. அதாவது 3.8 கோடி வருடத்துக்கு முன் வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய கண்டம், தெற்கு நோக்கி நகர்ந்த வெளறேசியாக் கண்டத்துடன் மோதியதால், இமையமலை தோன்றியது. 2.6 கோடி முதல் 70 லட்சத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த இரண்டவது மோதலில், உயரம் குறைந்த மலைத் தொடர்கள் உண்டாகியது. 70 லட்சம் ஆண்டில் நடந்த ஒரு உராய்வின் போது சிவலிக் மலைகள் உருவானது. கடந்த 15 லட்சம் ஆண்டுகளில் 1370 மீற்றர் கூடுதலாக உயர்ந்துள்ளது. 12 கோடி வருடத்துக்கு முன் ஆபிரிக்காவும் தென் அமெரிக்கவும் ஒன்றாக இருந்தன. இன்று இவை எதிர்த் திசையில் விலகிச் செல்லுகின்றன. அராபிய விலகலால் இந்தியா பெருங்கடல் உருவானது. இந்தியா ஆபிரிக்காவில் இருந்து பிரிந்தது. அவுஸ்ரேலியா தனியாகியது. இது போல் கடலில் எற்பட்ட அதிர்வு ஒன்றின் போதே 11 கிலோ மீற்றர் ஆழம் கொண்ட அகழி ஏற்பட்டது. பூமியில் தொடர்ச்சியாக நிகளும் எரிமலை, நிலை நடுக்கம் மேல் பரப்பு மண்ணை உள் இழுக்கின்றது. இதனால் பெரும் காடுகள் நிலத்தில் புதைகின்றது. இந்த மரங்களே நிலக்கரியாகவும், வைரமாகவும் மாறியது. இதில் இருந்தே எரிபொருட்களும் உருவாகின்றன.

 

பூமியில் மேற்பரப்பில் இருந்து 1800கி.மீற்றர் ஆழத்தில் திடப் பொருள் எதுவுமில்லை. இந்த திடப்பொருள் அல்லாத குழம்பின் மேல், பல நீண்ட பறைகள் பல துண்டகளாக மிதக்கின்றன. இதை புவியொட்டு பறை என்பர். இதன் நீளம் 50 முதல் 1000 கி;.மீராகும்; இது இடைவிடாது நகாந்த வண்ணம் உள்ளது. இது வருடத்துக்கு 3 செ.மீற்றா வேகத்தில் நகார்கின்றது. இவை ஒன்றுடன் ஒன்று மோதம் போதே நில நடுக்கம் எற்படுகின்றது. இந்த மோதல் தன்மையைப் பொறுத்தே நில நடுக்கத்தின் விளைவு அமைகின்றது. மோதும் பறை ஒன்றின் மேல் ஒன்று எறும் போது விளைவு மிக மோசமாக மாறுகின்றது. மோதல் நில நடுக்கமாகவும், ஒன்றின் மேல் ஒன்று எறுவது பூகம்பமாகவும் இருக்கின்றது. நிலநடுக்கம் நிமிடத்துக்கு 8 கி.மீற்றர் வேகத்தில் பரவுகின்றது. பூகம்பம் செங்குத்தாக 5கி.மீற்றர் வேகத்தில் நகர்கின்றது. எரிமலை என்பது பூமியின் உட்பகுதியில் அமுக்கம் எற்படும் போதே சீறிப் பாய்கின்றது. குளிந்து இறுகாத பூமியின் நடுப்பகுதி உள்ள நெருப்பு குழம்பே எரிமலையில் வெளிவருகின்றது. 60 கிலோ மீற்றர் ஆழத்தில் யுரேனீயம், தோhரியம், போன்ற கதீர்வீச்சு  மூலகங்களும்;, பொட்டாசியம் போன்றனவும் சிதைவுறுவதால் பூமியின் உற்பகுதியில் வெப்பம் தொடர்ச்சியாக எற்படுகின்றது. இந்த எரிமலைகளின் தொடர்சியான குமுறல் பாரிய மலையாகிவிடுகின்றது. மலைகள் என்பது எரிமலையின் குமுறலில் இருந்தும், நிலத்துண்டுகள் பிரிந்து மற்றொன்றுடன் மோதுவதாலும் ஏற்படுகின்றது.  மலைகள் அனைத்தும், பறைகளின் மோதலால் எரிமையாலும் ஏற்பட்டவையே. இதுபோன்றே கண்டங்களின் நகர்சியும் நிகழ்கின்றது. கடல் நீரை தாங்கி நிற்கும் பிளவுகளும் இதனால் ஏற்பட்டதே. அதிகமான நில நடுக்கங்கள் மற்றும் பூகம்பங்கள் கடலிலேயே நிகழ்கின்றது. கடலில் நடக்கும் சில அதிர்வுகள் அல்லது பூகம்பத்தின் போது அல்லது இரண்டின் போதும், எற்படும் மிகப்பெரிய அலையின் மிகப்பெரிய முகடுங்கள் இடையிலான நீளம் சரசாரி 16 கி.மீற்றர் நீளமாக இருக்கின்றது. சில வேளைகளில் கடல் அலை 16 மீற்றர் உயரத்தில் 660 கீ.மீற்றா வேகத்திலும் நகர்கின்றது. பூகம்பம் 4 ரிக்டரியில் இருந்து 7 ரிக்டரிக் வரை ஏற்படுகின்றது. 4 இல் இருந்து 7 ரிக்டரில் எற்படும் போது 27000 மடங்கு அதிகமான பதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் சுமார் 5 லட்சம் நிலநடுக்கம் ஏற்படுகின்றது.  இதில் ஒரு லட்சமே பதிப்பை எற்படுத்துகின்றது. இதிலும் 500 மிகப் பெரிய நில நடுக்கமாக உள்ளது.

 

பூமியின் ஆழம் 6377 கி.மீற்றராகும். மையக் கரு 1300 கி.மீற்றர் தடிப்புடையது. இதன் சரசாரி வெப்பநிலை 4800 சென்சியஸ்யாகும். இதைச் சுற்றி உள்ள புற மையக் கரு 2080 கி.;மீற்றராகும். இதன் வெப்பநிலை 3600 சென்சியஸ்யாகும். இதற்கு மேல் 2900 கி.மீற்றர் நடு அடுக்குள்ளது. இதை இரண்டாக அறிவியல் பிரிக்கின்றது. இதை நடு அடுக்கு என்றும் கீழ் நடு அடுக்காகும் என்று பிரிக்கின்றனர். இதில் மேல் அடுக்கு 50 கி.மீற்றர் பூமிக்கு கீழாக தொடங்கி 1000 கி.மீற்றர் ஆழத்துக்கு உள்ளது. இதன் வெப்பநிலை 1300 முதல் 1500 சென்சியஸ்யாகும்; கீழ் நடு அடக்கு 1000 கி.மீற்றர் தொடங்கி 2500 கி.மீற்றர் ஆழமுடையது. இதன் வெப்ப நிலை 1500 முதல் 3000 சென்சியஸ் வெப்ப நிலை உடையது. நாம் வாழும் ப+மியோடு 50 கி.மீற்றர் தடிப்புடையது.

 

பூமியின் காற்று மண்டலம் 970 கி.மீ உயரத்துக்கு காணப்படுகின்றது. இந்த காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் தடுப்புத்தான் சூரியன் வெளியிடும் காஸ்மிக் கதிர் வந்தடைவதை தடுக்கின்றது. அதைத் தாண்டி ஊடுருவும் போது, உயிர் வாழும் சூழலை பூமி இழந்துவிடும். இன்று சூரியனில் இருந்து பெறும் ஒளியின் அளவை 13 சதவிகிதம் குறைவாக பெறின், பூமி எங்கும் 1.6கீ.மீ உயரத்துக்கு பனிக்கட்டியாகிவிடும். இப்போது பெறும் ஒளியைவிட 30 சதவீதம் அதிக சூரிய ஒளி வருமாயின், பூமியில் உயிரினம் வாழ முடியாதாகிவிடும். இதைப் போல் பூமியின் ஈப்புச்சக்தி சற்று அதிகமானலும் ஒட்சிசன் நிலத்தில் படிந்தவிடும். ஈர்ப்புச் சக்தி குறைந்தால் காற்று பூமியை விட்டு வெளியேறிவிடும். கடலின் உப்புத் தன்மை 3.4 சதவீதமாக உள்ளது. இது 4 சதவிதமாக இருப்பின் இன்று உள்ள உயிர்களுக்கு பதில் முற்றிலும் வேறுபட்ட உயிரணங்களே தோன்றியிருக்கும். உப்பின் அளவு 6 சதவீதமாக இருப்பின், உயிரிணங்களில் செல்கள் பிரிந்து உயிரிணங்கள் இறந்துவிடும்;. வளி மண்ணடலத்தில் உள்ள ஒட்சிசன் அளவு 21 சதவீதமாகும்;. இதில் குறைவு எற்படின் உயிர் வாழ்வது கடினமாகிவிடும். இதை விட கூடினால் சதுப்பு நிலத்தாவரங்கள் எரிந்துவிடும்.



சந்திரனுக்கும் பூமிக்குமிடையில் காணப்படும் ஈர்ப்பவிசை பரஸ்பரம் ஒன்றை ஒன்று இழுக்கின்றது. மறுபுறம் ஒன்றை ஒன்று தள்ளுகின்றது. அமாவசை என்று குறிப்பிடும் நாளில் கடல் பொங்கியௌவும், பௌர்னமியில் இயற்கையில் எற்படும் மாற்றங்களுக்கும் காரணம் சந்திரனின் அதிக ஈர்ப்பு சக்தியே காரணமாகும்.

 

பூமியில் ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டு வருடம் 500 வீண் கற்கள் வந்து பூமியில் மோதுகின்றது. மிக மெல்லிய துகள் வடிவில் நாள் ஒன்றுக்கு 3000 தொன் தூசி பூமியில் வந்தடைகின்றது. தூசியாக 100 000 தொன் எமது பூமிக்கு வருடவருடம் ஈர்ப்பவிசை சார்ந்து வந்து வீழ்கின்றது. உலகில் பூக்கும் தவரங்களாக 2.3 லட்சம் இனம் காணப்பட்டுள்ளது. 12.7 கோடி வருடத்துக்கு முன் தோன்றிய பூக்கும் தவரங்கள், 8 முதல் 9 கோடி ஆண்டுகளில் உலக முழுக்க பரவிவிட்டது. 350 கோடி வருடத்துக்கு முன் தோன்றிய முதல் உயிரில் இருந்தே அனைத்து உயிர்களும் தோற்றம் பெற்றன. 42 கோடி வருடத்துக்கு பின்பே தவரங்கள் தரையை நோக்கி நகாந்தன.

 

உலகில் சராசரியாக ஆண்டுக்கு 900 மி.மீ மழை பொழிகின்றது. உலகின் மொத்த நீர்வளம் 136 கோடி கன கி.மீராகும்;. இதில் 98 சதவீதம் கடல் நீராகவும் பனி மலையாகவும், பனிப்பறையாகவும் உள்ளது. மிகுதியுள்ளதில் 1.2 சதவீத்தில் பெருமளவு பூமிக்கு அடியில் உள்ளது. மொத்த நீரைக் கொண்டு பூமி மேல் பரப்பினால் அதன் உயரம் 2.7 கி;.மீற்றர் உயரத்துக்கு நிரப்ப முடியும்;. ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் கன கி.மீ நீர் ஆவியாகி மழையாக, பனியாக மீள்கின்றது. இதில் 86 சதவீதம் கடலிலும், 14 சதவீதம் நிலத்திலும் வந்தடைகின்றது. நிலங்கள் 70000 கன கி.மீ நீரை அழிக்கும் அதே நேரத்தில், 1.10 லட்சம் கன கி.;மீற்றர் நீரை மீளப் பெறுகின்றது. கடலில் இருந்து 40 ஆயிரம் கன கி.மீற்றர் நீரை அதிகமாக நிலத் தொடர் பெறுகின்றது. ஆனால் கிடைக்கும் நீரில் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளமாக கடலுக்குள் சென்றுவிடுகின்றது. ஆக 14.000 கன கி.மீற்றர் நீர் தான் பல வழிகளில் சேமிக்கப்படுகின்றது.  இன்று தனி மனிதனுக்கு 7400 கன மீற்றர் வீதம் நீரை தனி நபருக்கு பங்கிடமுடியும். 1970யை விட இன்று மூன்றில் ஒரு பகுதி நீர் மனிதனுக்கு கிடைப்பது குறைந்துள்ளது.

 

உயிரினங்களில் மனிதன்

 

உயிருள்ளதற்கும் உயிரற்றதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, உயிருள்ளது உண்ணும் பொருளை தன்மயமாக்கி அதில் ஒரு பகுதியை தனது உடலில் சேர்க்கின்றது. மற்றையது தன்னைப் போன்று மற்றொரு உயிரை உண்டாக்கின்றது.

 

இயற்கை மாறுகின்ற போது சுற்றுச் சூழல் சார்ந்து உயிரினம் தன்னை மாற்றியமைக்கின்றது. பூமியில் 400 கோடி வகை உயிரினங்கள் இருந்தன. இன்று இருப்பவை 20 லட்சம் முதல் ஒரு கோடி மட்டுமே.  உயிரியல் தொகுதியில் அனைத்து உயிரிணங்களும் வடிவத்தில் வேறுபடுகின்றனவே ஒழிய, உள்ளடகத்தில் அல்ல. உயிரினங்களின் பகுதிகளை ஆராய்ந்தால், அவை அனைத்துக்கும் பொதுவானதாக இனகாணமுடியதாகவே காணப்படுகின்றது. ஒரு உயிரின் கரு இதைவிட மிக துல்லியமாக பொது பார்வையில் வேறுபடுத்த முடியாது. ஒரு செல் அமீபா சதாகமான சூழலில் 6840 கோடி அமீபவாக பெருகின்றது. ஒரு குழந்தை 5 வயதாகும் போது மூளை 90 சதவீதம் வளர்ச்சியடைந்த விடுகின்றது. மூளையில் மேலுள்ள கரும் படலம் அண்ணளவாக 800 கோடி செல்களை கொண்டவை. அதன் கீழ் உள்ள வெண்படலம் 1 சதுர அங்குலத்துக்கு 16000 கிலோ மீற்றர் தூரமுள்ள நரம்புச் சரடுகள் உள்ளன. மனிதனின் சராசரி உடலில் என்னென்ன இருக்கின்றது. 10 கலன் தண்ணீர், ஏழு நீளமாக சவக்கரா அளவுக்கு கொழுப்பு, ஒரு ஆணியளவு இரும்பு, நாயின் மேலுள்ள உண்ணியைப் போக்குவிக்கும் சல்பர், 9000 பென்சிலுக்கு ஊக்கி செய்யக் கூடிய காபன், ஒரு கோழிக்கு வெள்ளையடிக்கக் கூடிய சுண்ணம்பு, 2200 தீக்குச்சி செய்யக் கூடி பொஸ்பரஸ்சும்  வேறு சிறு பொருட்களுமானது. இப்படி உயிரினங்களும் உயிரியல் தொகுதியும் மிக நுட்பமாக ஒரே பொது மூலக்கூறாலானது.

 

இயற்கையில் மனிதன்

 

இன்றைய மனிதனின் தோற்றம் ப+மியின் ஆயுளில் ஒரெயொரு நிமிடம் மட்டுமேயாகும்;. ஆனால் நிலையாக ஒரே இடத்தில் தங்கி வாழத் தொடங்கிய காலம் 7 செக்கன்கள் மட்டுமேயாகும். ஆனால் இந்த மனிதன் இயற்கையை அழிப்பதில் என்றுமில்லாத வெறியுடன் இயங்குகின்றான். இந்த அழிப்பு ஒரு பண்பாடாகவும், குறித்த பிரிவின் நலன்களாகவும் உள்ளது. இந்த இயற்கை அழிப்பையொட்டி 19ம் நூற்றாண்டில் அமெரிக்கா செவ்விந்தியத் தலைவர் ஒருவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்று மிக தெளிவாகவே இதை அம்பலம் செய்கின்றது. நவீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளை கூட மிஞ்சிவிடுகின்றது. (19ம் நூற்றண்டில் அமெரிக்கா ஜனாதிபதி செவ்விந்தியர் வாழும் பகுதி ஒன்றை விலைக்கு வாங்க கேட்டபோது, எழுதிய கடிதம் இது. இதை சோ.பத்மநாதன் மொழி பெயர்த்த இக்கட்டுரையை 28.7.1996 வீரகேசரி பிரசுரித்தது. இதை மறுபடியும் கணணியில் பதித்தவர் தேவன்)

"எங்கள் நிலத்தை தான் வாங்குவதாக வாஷிங்டனில் உள்ள

பெருந்தலைவர் சொல்லி அனுப்பி உள்ளார். அத்தோடு நட்புறவும்; நல்லெண்ணனமும் பொதிந்த சொற்களையும் பெருந்தலைவர் பேசியுள்ளார். எங்கள் நட்புறவோ நல்லெண்ணமோ தேவைப்படாத நிலையில் இவ்வாறு செய்வது அவர் அன்புள்ளத்தைக் காட்டுகிறது. உங்கள் கோரிக்கையை நாம் பரிசீலனை செய்வோம் ஏனெனில் நாம் விற்க மறுத்தால். வெள்ளையன் துப்பாக்கிகளோடு வந்து நம் நிலத்தைப் பறிப்பான் என்பது எமக்குத் தெரியும்.

 

வானத்தை மண்ணின் கதகதப்பை, எவ்வாறு வாங்க, விற்க முடியும்? அந்த எண்ணமே எமக்கு அந்நியமானது. காற்றின் தூய்மையும், தண்ணீரின் பளபளப்பும் எமக்குச் சொந்தமில்லாதபோது, நீங்கள் எப்படி அவற்றை வாங்கப் போகிறீர்கள்?

 

தேவதாருவின் ஒளிவீசும் ஊசியிலை ஒவ்வொன்றும், மணற்பாங்கான ஆற்றங் கரை ஒவ்வொன்றும் அடர்ந்த காட்டின் புகார் ஒவ்வொன்ரும், ஒவ்வொரு மீனும், ஒவ்வொரு கிணுகிணுப்பும் பூச்சிகளும் இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்குப் புனிதமானது. அவர்கள் அனுபவத்தில் நினைவில் இனிப்பது மரங்களூடு பாயும் சாறு செவ்விந்தியனின் நினைவுகளைக் காவிச் செல்கிறது.

 

வெள்ளைக்காரன், விண்ணுலகில் நட்சத்திரங்களிடை உலாவப் போகையில் (சாகும் போது) தன் பிறந்த மண்ணை மறந்து விடுகிறான். செவ்விந்தியனுக்கோ இவ்வழகிய பூமி தாய். இறந்த செவ்விந்தியன் அதை மறப்பதில்லை.

 

நாம் பூமியின் ஒருபகுதி. பூமி எங்களின் ஒரு பகுதி. மணங்கமழும் மலர்கள் எங்கள் சகோதரர்கள்;;;@ மானும் குதிரையும் கழுகும் எங்கள் சகோதரர்கள். மலை முகடுகளும், புல்வெளிகளின் மணமும். குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும் எல்லாம் ஒரே குடும்பத்துக் குரியவை.

 

எனவே எங்கள் பூமியை நீங்கள் வாங்க முன்வந்தமையை நாம் பரிசீலனை செய்வோம். ஆனால் அது எளிதாயிருக்காது ஏனெனில் இந்தப் பூமி எமக்குப் புனிதமானது.

 

ஒடைகளிலும் ஆறுகளிலும் ஜொலித்துக் கொண்டு ஓடுவது வெறும் நீரல்ல அது எங்கள் முதாதையரின் குருதி எங்கள் நிலத்தை நாம் விற்றால் அது புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது புனிதமானது என்று ஏரிகளில் தெளிந்த நீரில் தெரியும் ஒவ்வொரு பிரதிவிம்பமும் எனது மக்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை நினைவுகளை சொல்கிறது என்று உங்கள் பிள்ளைகளுக்கு கற்பியுங்கள்.

 

ஆறுகள் எம் சகேதரங்கள்@ எம் தாக்ததை தீர்ப்பவை. ஆறுகள் எம் தோணிகளைச் சுமந்து செல்பவை எம் பிள்ளைகளுக்கு அமுதூட்டுபவை நாம் நிலத்தை விற்போமாயின் ஆறுகள் எமது சகோதரங்கள் மட்டும் அல்ல உமது சகோதரங்கள் கூட என்பதை நினைவில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு கற்பியுங்கள். இனியாவது ஓரு சகோதரனுக்கு காட்டும் அன்பை ஆறுகளுக்கு காட்டுங்கள்.

 

காலைக் கதிரவனைக் கண்டு பனிப்புகார் ஓடுவது போல, மு;னனேறிவரும் வெள்ளையனைக் கண்டு செவ்விந்தியன் எப்போதும் பின்வாங்கி வந்துள்ளான். ஆனால் எங்கள் தந்தையாருடைய சாம்பல் புனிதமானது. அவர் புதைகுழிகள் புனிதமானவை. எனவே இந்த குன்றுகளும் மரங்களும் பூமியின் இப்பகுதியும் அர்ப்பணிக்கப்பட்டவை.

 

எங்கள் நடைமுறைகளை வெள்ளையன் புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவோம். மண்ணின் ஒரு பகுதியும் மறு பகுதியும் அவனுக்கு ஒன்றுதான். இரவில் வந்து தனக்குத் தேவையானதை அபகரிக்கும் அந்நியன் அவன். பூமிக்கு அவன் உடன் பிறந்தான் அல்லன்@ பகைவன.; அதை வெற்றி கொண்ட பிறகு அவன் அதை கடந்து போகிறான். தன் தந்தையார் புதைகுழிகளைக் கைவிட்டுச் செல்வது பற்றி அவனுக்கு கவலையில்லை. மண்ணின் மைந்தர்களிடமிருந்து மண்ணைப் பறிக்கின்றான். தன் தந்தையார் புதைகுழிகளை அவன் விட்டுப்போனததால், அவனுடைய பிள்ளைகளின் பிறப்புரிமை மறுக்கப்படுகிறது.


தாயகிய மண்ணும்;;. சகோதரனாகிய வானும் செம்மறி ஆடுபோல, மணிமாலை போல, விலைக்கு வாங்கும் - கொள்ளையிடும் - பொருள்கள் என்று அவன் கருதுகிறான். அடங்காப்பசியால் வெள்ளையன் பூமியை விழுங்கப் போகிறான்;;@ பாலை வனமே மிஞ்சப் போகிறது!

 

எனக்குப்புரியவில்லை. எங்கள் நடைமுறைகள் உங்கள் நடைமுறைகளிநின்றும் வேறுபட்டவை. உங்கள் நகரங்களைப் பார்த்து செவ்விந்தியன் கண்ககள் வலிக்கின்றன. காட்டுமிராண்டியான எனக்கு அவை புரியாதிருக்கலாம். அந்தச் சந்தடி - இரைச்சல் - என் காதுகளை அவமதிக்கிறது.

 

தனித்த வில்ப் புர் வில் (றுiடி pழழச றடைட) பறவையின் குரலை, இராப் பொழுதில் பொய்கையைச் சுற்றி. தவளைகள் அடிக்கும் தம்பட்டத்தைக் கேட்க முடியாத மனிதனுக்கு, வாழ்வில் என்ன தான் இருக்கப்போகிறது? நான் செவ்விந்தியன் எனக்குப் புரியவில்லை.

 

பொய்கையின் முகத்தை தடவிக்கொண்டு வரும் இளங் காற்றின் ஒலியும். நண்பகல் பெய்த மழையால் சுத்தமான காற்றின் மனமும் தேவதாருவின் நறுமணமும் செவ்விந்தியனுக்குப் பிடித்தவை.

செவ்விந்தியனைப் பொருத்தவரை. காற்று விலைமதிப்பற்றது. விலங்கு, மரம், மனிதன் -யாவுக்கும் மூச்சு ஒன்றே. தான் சுவாசிக்கும் காற்று எத்தகையது என்று வெள்ளையன் உணரவில்லை. நாள்கணக்காக நலிவுற்று, மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒருவனை போல, அவனுடைய நாசி மரத்துப்போய்விட்டது.

 

எஙகள் நிலத்தை நாம் விற்க்கும் பட்சத்தில் காற்று எங்களுக்கு விலைமதிபில்லாதது என்பதை, உயிர்களைத் தகங்கும் நிலத்தின் உயிர்ப்பை காற்றும் பங்கிடுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். எங்கள் பாட்டன் சுவாசிக்க முதல் முச்சை வழங்கிய காற்றே அவனுடைய கடைசிப் பெரு மூச்சையும் ஏற்றுக்கொள்கிறது. காற்றுத்தான் எங்கள் பிள்ளைகளுக்கு வாழ்வின் உயிர்ப்பைத் தரவேண்டும்.

 

உங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்போம். ஆனால் ஒரு நிபந்தனை இந்த மன்ணின் விலங்குகளை வெள்ளையன் தன் சகோதரர்களாக நடத்த வேண்டும்.

 

நான் காட்டுமிராண்டி எனக்கு வேறு வழி ஏதும் தெரியவில்லை. புற்றரையைக் கடந்து செல்லும் புகைவண்டியில் இருந்து வெள்ளையன் சுட்டதால். செத்து அழுகும் ஆயிரம் எருமைகளைக் கண்டேன். எருமயை விட புகைகக்கும் இரும்புக் குதிரை எந்த விதத்தில் முக்கியமானது என்று காட்டு மிராண்டியான எனக்கு விளங்கவில்லை. உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாம் கொல்வதுண்டு.

 

உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். அவர்கள் பாதங்களின் கீழ் இருப்பவை எங்கள் மூதாதையரின் சாம்பர் என்று. எம் உறவிரின் உயிர்களால் இந்த மண் வளம் பெற்றது என்று! அப்பொழுதுதான் அவர்கள்; மண்ணை மதிப்பார்கள்.

 

பூமிக்கு எது நேருகிறதோ, பூமியின் மைந்தர்களுக்கும் அதுவே நேருகிறது. வாழ்க்கை என்னும் வலையை நெய்தவன் மனிதன் அல்லன். அவன் அதில் ஓர் இழை மட்டுமே. இழைக்கு அவன் ஏற்படுத்தும் சேதம் தனக்குத் தானே செய்வதாகிறது.

 

எங்கள் எஞ்சிய நாள்களை நாம் எங்கே கழிக்கப் போகிறோம் என்பதல்ல முக்கியம். எமக்கு அதிக காலம் இல்லை. ஒரு சில மணிகளோ, ஒரு சில மாரிகளோ! பிறகு... உங்கள் மக்கள் போலவே வல்லவர்களாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் விளங்கிய எம் மக்களுடைய புதைகுழிகளில் அஞ்சலி செலுத்த, இந்த மண்ணில் வாழ்ந்த பெரும் இனக்குழுக்களின் பிள்ளைகளோ, இன்று சிறு குழுக்களாக காடுகளில் அலைந்து திரிபவர்களின் பிள்ளைகளோ எஞ்சி இருக்க மாட்டார்கள்.

 

வெள்ளையன் ஒரு நாள் இதை உணர்ந்துகொள்ளுவான்@ எங்களுக்கும் அவனுக்கும் கடவுள் ஒருவரே. எங்கள் மண்ணை உடைமையாக்க விரும்புவது போல, அவரை உங்கள் உடைமை என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால் அது தவறு. அவர் மனிதனுடைய கடவுள். செவ்விந்தியனுக்கும் வெள்ளையனுக்கும் அவர் தண்ணளி சமமானது.

 

பூமி அவருக்கு உயர்வானது. பூமிக்குப் பொல்லாங்கு விளைவிப்பது அதைப் படைத்தவனை இகழ்வதாகும். வெள்ளையர்களும் போவார்கள். சிலவேளை மற்றறைய இனங்களைவிட விரைவாகப் போவார்கள். உங்கள் படுக்கையைத் தொடர்ந்தும் மாசுபடுத்துவீர்களானால், உங்கள் கழிவுகளால் ஓர் இரவு மூச்சுத்திணறுவீர்கள்!

 

ஆனால்.... ஏதோ ஒரு தேவைக்காக உங்களை இங்கு கொணர்ந்து இந்த மண் மீதும் செவ்விந்தியன் மீதும் உங்கள் மேலாதிக்கத்தை நிறுவிய ஆண்டவனின் ஆற்றலால் அழிவிலும் நீங்கள் ஒளிவீசுவீர்கள். அந்த தெய்வசித்தம் எங்களுக்குப் புரியாத புதிர். எருமைகள் கொன்று குவிக்கப்படுவதும், காட்டுக் குதிரைகள் வசப்படுத்தப்படுவதும், மனிதவாடை வியாபித்திருக்கும் காடுகளின் மூலை முடுக்குகளும் முது குன்றுகளும் பேசும் கம்பிகளால் மறைக்கப்படுவதும் எங்களுக்குப் புரியாத புதிர்கள்.

 

பற்றை போனதெங்கே? கழுகு போனதெங்கே? குதிரைச் சவாரிக்கும் வேட்டைக்கும் பிரியாவிடை சொல்வது எத்தகைய அனுபவம்? வாழ்வின் முடிவும் உயிர்ப் போரட்டத்தின் தொடக்கமும்.

 

ஆக நாங்கள் எங்கள் நிலத்தை விற்றால், அதை நேசியுங்கள் - நாம் செய்தது போல. அதை எந்த ரூபத்தில் ஏற்றுகொள்கிறீர்களோ, அந்த ரூபத்தின் நினைவைப் போற்றுங்கள!

முழு மனதோடு, உங்கள் முழு வலுவையும் பிரயோகித்து இந்த மண்ணை உங்கள் பிள்ளைகளுக்காகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கடவுள் எங்கள் எல்லோரையும் நேசிப்பது போல் பூமியை நேசியுங்கள்."

 

ஒரு சாட்டையாக முன்வைத்துள்ள தெளிவான பார்வை, அன்றைய சதாரண பொது அறிவின் எல்லையைத் தாண்டியது. மக்களின் வாழ்வை சாரமாக கொண்டு எழுந்த உண்மையான ஆக்ரோசம். ஆனால் மக்களை வேட்டையாடி அதில் நவீனமானவர்கள் இயற்;கை அழித்தனர். அதை தொடர்ச்சியாக இன்று வரை தொடருகின்றனர். இன்று உலக எல்லை கடந்து உலகையையே சூறையாடுகின்றனர்.

 

மனிதனின் அடிப்டை தேவையை பூர்த்தி செய்த கலப்பு பயிர் செய்கைக்கு பதில், ஏற்றுமதிக்காக ஒரினப் பயிர்ச் செய்கைக்குள் இன்று நிலைதடுமறிச் செல்லுகின்றது. 1990 இல் உலகில் 6.4 லட்சம் கீ.மீ சதுரப்பரப்பில் ஊட்டச் சத்து குறைவன பணப்பயிhகள் உற்பத்தியாகின்றன. இதுவும் மேற்கு நாட்டவர்களின் தேவையை ப+ர்த்தி செய்யும் உற்பத்தியாகிவிட்டது. ஆனால் உலகில் உரிய வயதை அடைய முன்பு நிகழும் மரணத்தில், ஊட்டச் சத்து இல்லாமல் 75 சதவீதமான மரணங்கள் நிகழ்கின்றது.

 

இரண்டாம் உலக யுத்தத்தில் வெடிமருந்து செய்த தொழிசாலைகளின் லாப வேட்டைக்கு இசைவாக பயிர் செய்கை மாற்றப்பட்டுவிட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய வெடி மருந்துகளை உற்பத்தி செய்த தொழிச்சாலைகள், அதே வெடி மருந்துகளையே பயிர்களுக்கு உரமாக மாற்றினர். அது நிலத்தையும், மண் வளத்தையும் அழிக்கின்றது. உதாரணமாக அமெரிக்காவில் 1947 இல் உற்பத்தியான பொருளுக்கு, 1990 இல் 5 மடங்கு அதிகமான செயற்கை உரங்கள் தேவைப்படுகின்றன. இது உலகளவில் பொதுவான நிலைமை. ஒரினப் பயிர் இதனுடன் இனைந்த போது மரபு ரீதியான எதிர்ப்பற்றலை உயிரினங்கள் இழந்துவிட்டது. அதற்கு இரசாயண நஞ்சை பூச்சி கொல்லியாக அறிமுகம் செய்தனர். இது பயிரிக்கு சாதகமான உயிரினங்களையும் கொன்று விடுகின்றது. அத்துடன் இயற்கையின் ஆற்றலையும் அழிக்கின்றது. நிலமும், சூழலும்; நஞ்சாகின்றது.

 

1990 இல் உலகின் புதைபடிவ எரிபொருளில் 3 இல் இரண்டையும், தாது பொருளில் நான்கில் முன்றையும், உலோகங்களில் ஐந்தில் நான்கையும் மேற்கு நாட்டவர் அபகாரித்து நுகர்கின்றனர். மேற்கில் உள்ளவன் தென் அமெரிக்கனை விட 13 மடங்கும், ஆசியனைக் காட்டிலும் 20 மடங்கு, ஆபிரிக்கனைக் காட்டிலும் 40 மடங்கு அதிகமாக எரிபொருளை பயன்படுத்துகின்றனர். இயற்கை அழித்து பெறப்படும் நுகர்வு மேற்கு நோக்கி உள்ளது. மேற்கில் பிறக்கும் ஒவ்வொருவருக்குமாக  இயற்கை மேலும் ஆழமாக அழிக்கப்படுகின்றது. அவனின் நுகர்வு பாரிய கழிவை விழைவாக்கின்றது. உலகில் வறுமை பெருக்கெடுக்கின்றது. அடிப்படை உற்பத்திகளையே நாசமாக்கி அழிக்க வலு சேர்க்கின்றது.

 

எண்ணைக் கம்பனிகள் விவசாயம் மீது தொடங்கிய ஆதிக்கம் விவசாயத்தையே அழிக்கின்றது. நிலத்தை நஞ்சாக்கி, சுற்றுச் சூழலை அழிக்கின்றது. செய்ற்கையான நிலம் பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது. உர நஞ்சுகளையும், இரசாயன பூச்சிக் கொல்லி மருந்தையும் உள்வாங்கி செயற்கையாக உற்பத்தியாகும் பயிர், அதன் உள்ளடகத்துடன் உயிரினங்கள் உட்செரிக்கின்றனர். இதனால் மனித உடல் பலவிதமான நோய்க் கூறுகளை சந்திக்கின்றது. உதரணமாக இன்று தாய்பாலில் டி.டி.ரி கலந்திருப்பதை அண்மைய ஆய்வுகள் நிறுவுகின்றன.

 

இன்று விதைகளின் பன்மை தன்மையை அழித்து அதில் ஒன்றை திணிக்கும் போக்கு பன்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது. உதாரணமாக பத்தாயிரக்கணக்கான நெல் இனங்கள் அழிக்கப்பட்டு ஒரு இனத்தை நோக்கி மாற்றப்பட்டு வருகின்றது. இதனால் பராம்பரிய மக்களின் அறிவு மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் அழிக்கப்பட்டு வருகின்றது, அழிக்கப்பட்டுவிட்டன. விதைகளை இனிமேல் சேகரிக்க முடியாத நிலைக்கு, விவசாயம் மாறிவருகின்றது, மாறிவிட்டது. அதாவது விதைகள் மலடாகப்படுகின்றது. சில பன்நாட்டு நிறுவனங்களே இன்று விதைகளை சப்பளை பண்ணும் நிலைக்கு விவசாயம் மாறிவிட்டது. இப்படி மக்களின் விவசாயம் அழிக்கபட்டு வரும் நிலையை நாம் பெரிய பட்டியயிடலாம்.

 

5 கோடி வருடமாக இருந்த மழைக்காடு 1990 இல் நாள் ஒன்றுக்கு 10000 ஏக்கர் வீதம் அழிக்கப்படுகின்றது. வெப்ப மண்டலங்களில் உள்ள மழைக்காட்டில் இருந்துதான் இன்று உள்ள ஒரு கோடிக்கு மேற்பட்ட உயிரினங்கள் தோன்றின. அமெசன் மழைக்காடு உலகின் நுரையீரலாகும்;. இங்கு எமது ஒட்சினில் நாலில் ஒரு பகுதியை இக் காடு; உற்பத்தி செய்கின்றது. ஆனால் இவை இன்று சம வெளியாகின்றது. மந்தை வளர்ப்பு வெளியாகின்றது. மேற்கத்தையவர்களின் இறைச்சி தேவைக்கு இந்த காடுகள் மேச்சல் நிலமாகவும், அங்கிருந்து மரங்களை மேற்கின் அலங்கரத்துக்காக கடத்தப்படுகின்றது. இக் காடுகளில் தான் இயற்கையின் உயிராற்றால், உணவின் எதிர்கால பயிரினங்கள் செறிந்து காணப்படுகின்றது. இன்று பல உயிரினங்கள் நாளொன்றுக்கு எத்தனை என்ற விகித்தில், மண்ணில் இருந்தே அழிந்து விடுகின்றது. இன்று உள்ள உயிரினத்தில் ஒரு சதவீதத்தைக் கூட முழுமையாக ஆராயந்த முடிக்காத அறிவியல், அதை அழிப்பதில் அறிவியல் என்றமில்லா வேகம் பெற்றுள்ளது. மனிதனுக்கு சாதகமான உணவு, மருந்து, உயிரிண ஆதாரங்கள் இயற்கையில் காணமல் போய்விடுகின்றது. ஆம் மனிதனில் சிலர் அதாவது பன்நாட்டு நிறுவனங்கள் தேச எல்லை கடந்து தமது அற்ப தேவைக்காக இயற்கையையே சுடுகாடக்கி வருகின்றனர்.

 

உலகில் இன்று 6000 மொழிகள் இருக்கின்றன. 250 மொழிகள் 10 லட்சம் மக்களால் மட்டும் பேசப்படுகின்றது. 21ம் நூற்றாண்டில் 3000 மொழிகள் அழிந்து போய்விடும். உலகம் உற்பத்திகளை சில பன்நாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தி பொதுமையாகி நடத்தும் அழித்தொழிப்பின் போது, இயற்கையாக மக்கள் உருவாக்கிய மொழிகள் அழிந்து போகின்றன.  பல பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் இருந்த இடம் தெரியாது போகின்றது. மனிதன் இயற்கை சார்ந்து வாழ்ந்த வாழ்வும், அறிவும் சில பன்நாட்டு நிறுவனங்களின் நலன் சார்ந்து சூறையாடப்படுகின்றது. 25000 ஆண்டுக்கு முன்பாக மொழியும், 20000 ஆண்டுகளுக்கு முன்பாக கலாச்சாரமும் தோன்றியது. அவை காலத்துக்கு காலம் வளர்ச்சி பெற்றன. சில அழிந்து முன்னேறிய போது அது ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருந்தது. இன்று அவை அனைத்தும் இருந்து இடம் தெரியாமல் முற்றாக கற்பழிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

 

மனித பண்பாடு கலாச்சாரம் நகரிகத்தால் இழிவாகப்படுகின்றது. கலைகள், இலக்கியங்கள் என்று அனைத்தும்  என்று இல்லாத வகையில் விபச்சாரமாகின்றது. ~அவளுக்காக| என்ற சு.சமுத்திரம் எழுதிய நாவலில் இதை அழகவே எடுத்துக் காட்டகின்றார். "சினிமாவுல சம்பாதிக்கிற மாதிரி வேற எதுல சம்பாதிக்க முடியும்? ஒரு ரேப் சீன். சின்னஞ் சிறிசுகளை திருப்திபடத்திடலாம். அதக்காக ஒரு அழுகை. பெண்களுக்கு திருப்;தி. ஒரு மழை சீன்.கிழங்களுக்கு கொண்டாட்டம். ஒரு கும்மாங்குத்து. சண்டியர்களை வரவழைக்கலாம். வாலிபர்களை திருப்திப் படுத்தலாம். ஒரு சில்க சுமிதா, இல்லன்னா ஒரு அனராதா. எல்லோருக்கும் திருப்தி.இதுக்குள்ளே கதைபண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிற தொழில் வேற எது இருக்கு? மேலும் என் வசனத்துலே படம் கண்டிப்பாய் ஓடும்,ஏன்னா இரு பொருள்ல அவ்வளவு ஆபாசமாய் வசனம் எழுதியிருக்கேன்." கலைஞனின் பெயரில் ஆபசமான ஒரு சமூக பண்பாடு கலாச்சாரம் சமூக மயமாகிவிடுவதை, இந்த கதையில் சினிமா பற்றிய மதிப்பீடு தெளிவாக்கின்றது. இதையே ஒரு மேற்கு நாட்டு கலைஞன் ஒருவன் தனது வக்கிரத்தை கலையாக சொல்ல வெட்கப்படவில்லை. நாவல் எழுத்தளரும், பல படங்களின் கதையசியருமான கெரார்டு டி வில்லியர்ஸ் "வாசகனை மகிழ்விப்பதும், அவன் சிறிது நேரம் ஒரு கனவு உலகில் சஞ்சரிக்க உதவுவதுமே எனது நோக்கம். இதைத்  தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. இதில் நான் பெரு வெற்றி பெறறுறள்ளேன் என்றதான் சொல்ல வேண்டும்;. நான் ஏராளமாக சம்பாதிக்கிறேன். இது என் வெற்றியின் முதல் அறிகுறி. ரசிகன் எதை விரும்புகிறானோ அதையே நான் அவனுக்கு வழங்குகிறேன். மக்கள் ஒரு கனவின் பின்னால் ஒடுகின்றார்கள். போதை மருந்து பழக்கம் என்றால் என்ன என்று நீங்கள் என்றேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? போதை பொருளுக்கு அடிமையானவனும் ஒரு கனவை நாடியே செல்கிறான். சலிப்பு விரோதமும் குரோதமும் நிறைந்த சுற்றுச் சூழலிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிறான் என்று கருதுகிறேன். தொழில் முறையில் சேர்மானக் குறிப்பை வைத்துள்ளேன். சமையலில் பயன்படுத்துகிறோமே அத்தகைய குறிப்பு அது. வெற்றிக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. இந்தக் குறிப்பில் முதல் கலவைப் பொருள் வன்முறை. இரண்டாவது கலவைப் பொருள் காமவெறியிலிருந்து ஒரு சிட்டிகை. மூன்றாவது கலவைப் பொருள் சிற்றின்ப உலகிலிருந்து சில நறுமணச் சாமான்கள். இந்தச் சேர்மானங்களிலிருந்து உருவாகும் தயாரிப்பைத்தான் ஜனங்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்." மக்களை மந்தைத் தனத்தில் மேய்கும் உலகத்துக்கு கொடுக்கும் விளக்கம். ஒரு மனிதனின் வெற்றி பணம் சம்பதிப்பதில் பிறப்தாக கூறும் வக்கிரம். இது சமூக மயமாகிவிட்டது. 

 

இப்படி மனித வாழ்வின் நடைமுறை சார்ந்து ஆயிரம் விடையங்களை எடுத்துக் காட்டமுடியும். இவை அனைத்தும் ஏன் நடக்கின்றன. எப்போதவது நீ சிந்தித்தயா? இதற்காக நீ என்ன செய்தாய்?

 

இன்று நாம் வாழும் பூமியில்; நாள் ஒன்றுக்கு 10000 ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றது. ஏன்?

 

ஒரு கார் ஆயிரம் கிலோ மீற்றர் ஒட தேவைப்படும் ஒக்சிசன் ஒரு மனிதன் ஒரு ஆண்டு; பூரவும் சவாசிக்க போதமானது. ஆனால் அதை கார் சுவாசித்து கழிவை தள்ளுகின்றது. இது அவசியமானதா? உலகில் உள்ள மக்கள் அனைவரும் கார் வைத்திருப்பின் நிலமை என்ன? இருக்கவே இடமில்லாத போது எப்படி உன்னால் இதை அனுமதிக்க முடியும்?

 

இன்றைய உலகின் மொத்த தானிய உற்பத்தியில் 38 சதவீதம் கால்நடைகளின் உணவுக்காவே பயன்படுத்தப்படுகின்றது. அதிலும் இந்த உணவு ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து மலிவு விலையில் கொள்ளையிடப்படுகின்றது. ஆனால் அந்த நாட்டில் மக்கள் பட்டினியில் சாகின்றனர். இங்கு மேற்கு நாட்டவன் உண்ணும் இறைச்சி முக்கியமானதாக உள்ளது. பின்னால் உணவு பற்றக்குறை பற்றி வாந்தியையும், மக்கள் தொகை பற்றி வயிற்றைலையடியைப் பற்றி கொள்ளையிட்டவன் விளக்குவது நிகழ்கின்றது.  அமெரிக்காவில் மாட்டு இறைச்சியைக் கொண்டு ஒரு கிலோ  ஹாம்பாக்கரை தயாரிக்க 20500 லீற்றர் நீர் பயன்படுத்தப்படுகின்றது. இது தேவைதான? உலகில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. ஆனால் அமெரிக்காவில்  ஹாம்பாக்கரை தின்னபோர் சுதந்திரம் முக்கியமானதாக உலக ஜனநாயகம் கருதுகின்றது. அன்றாட அடிப்படை தேவையை பூhத்தி செய்யும் ஒருவனுக்கு தண்ணீருக்கு காசும், ஹாம்பாக்கரை தயாரிப்பவனுக்கு தண்ணீர் மானியமாக உலகம் கட்டியழுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

ஒரு கிலோ பேப்பர் உற்பத்தி செய்ய 700 கிலோ தண்ணீர் தேவைப்படுகின்றது. ஆனால் இந்த பேப்பர் வெற்று விளம்பரங்களுக்கே 99 சதவீதம் பயன்படுகின்றது. இதற்காக காடுகளை அரித்து தின்கின்றனர். இந்த விளம்பரம் தேவைதானா? 

 

ஒரு டன் எஃகு உற்பத்தி செய்ய 280 டன் தண்ணீர் தேவை. பெரும்ளவில் ஆயுத தளவடங்களுக்கு இந்த எஃகு பயன்படுத்தப்படுகின்றது. உலகில் தொழிச்சாலைகள் 25 சதவீத தண்ணீரை எடுக்கின்றது. பெருமளவு உற்பத்திகள் மக்களின் தேவைக்கு வெளியில் உற்பத்தி செய்து, அதை விளம்பரம் செய்து பணம் சம்பதிப்பதில் சிலர் கொழுக்கின்றர். இது தேவைதானா?

 

இந்த தொழிச்சாலைகள் எதை விளைவாக்கியுள்ளது. கடந்த 100 வருடத்தில் 1.5 லட்சம் டன் சிலிக்கன், 15 லட்சம் டன் ஆர்சனிக், 9 லட்சம் டன் கோபாலட், 9 லட்சம் டன் துத்தநாகம், ஆறு லட்சம் ஆன்ட்டிமொனி போன்ற நஞ்சுகளை தொழிச்சாலை புகை போக்கியுhடக காற்று மண்டலத்தில் அனுப்பட்டுள்ளது. இதைவிட கந்த-டை-ஆக்சைடு வாயு ஆண்டுக்கு 2000 கோடி டன் காற்று மண்டலத்தில் கலக்கப்படுகின்ற ஒரு இயற்கை அழிப்பு கதையே உண்டு. இதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? லண்டன் நகர வீதியில் 8 மணி நேரம் நிற்பின், 100சிகரெட்டுக்கு சமமான நஞ்சை சுவசிக்கும் அளவுக்க காற்ற நஞ்சாகிவிட்டது. தொழிச்சாலைகள் வெளியிடும் புகையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இரசாயணப் பொருட்களை கலந்தே வெளியிடுகின்றன. இதுதான் நவீனத்துவம் மனிதனுக்கு வழங்கிய இயற்கை அழிப்பு. இப்படி பல.



நாம் ஒரு உயிருள்ள, உணர்வுள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ள, உழைப்பின் மூலம் தேவை பூர்த்தி செய்யக் கூடிய மனிதனாக உள்ள வரை, நாம் நிச்சயமாக இயற்கையை புரிந்தாக வேண்டும். இயற்கை புரிகின்ற அதே தளத்தில் நாம் பயன்படுத்தும் அனைத்தையும் புரிந்தாக வேண்டும்;. இல்லாதவரை நாம் வளர்ப்பு மந்தைக்கு நிகராக வாழ்வதைத் தாண்டி எதையும் சிந்திப்பதில்லை. மந்தை வளர்ப்பில் எவை எல்லாம் இணைந்து ஒரு பண்ணையாகின்றதோ, அதே நிலையில் நாமும் இந்த உலகில் மந்தை போல் நுகர்வதற்கு அப்பால் எதையும் புரிந்து வாழ்வதில்லை என்ற உண்மை புரிந்தாக வேண்டும்.

 

எமது அறிவு என்ன? இந்த அறிவை எங்கிருந்து எப்படி பெற்றுள்ளோம். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கருவில் இருந்து குழந்தையாக பிறந்த அந்த கணத்தில் எந்த அறிவையும் பெற்றுவிடுவதிவல்லை. மறாக குழந்தையாக பிறந்த பின்பு ஒவ்வொன்றையும் முந்திய தலைமுறை என்ன என்பதை விளக்குகின்றனர். ஒரு குழந்தையின் பார்வையில் தெரிவது அனைத்தையும் என்ன என்பதை புரிந்து கொள்வதில்லை. கேட்டல், பார்த்தல், நுகாத்தல், உணர்தல், பேசுதல் என்று இதற்குள்ளான என்னற்ற நிகழ்ச்சிகளை, பிறந்த குழந்தை புரிந்து கொள்வதில்லை. மாறாக மெதுவாக சமூகத் தொடாச்சியடன் புரிந்து கொள்கின்றனர். இந்த புரிந்து கொள்ளும் நிகழ்ச்சி கூட ஒரேவிதமாக இருப்பதில்லை. சமூகத் தொடர்ச்சி பிளவுபட்டுள்ள சமூக நிலையில், குழந்தையும் பிளவுபட்டே புரிந்து கொள்ளத் தொடங்ககின்றது. இது நிறம், இனம், சாதி, வர்க்கம் மொழி என்று என்னற்ற பிளவுக்கு ஊடாக குழந்தைகள் பிரித்;தே புரிகின்றனர். இந்த பிளவு பெரும் சமுதாய பிளவுகளில் இருந்து தனிமனித பிளவுகள் ஈறாக பிரிந்து கிடப்பதால், அறிவு என்பது முழுமையற்றதாக மாறிவிடுகின்றது. தெரிந்த கொள்வதை ஏன், எப்படி என்று பல நூறு கேள்விக்கு ஊடாக நாம் எமது அறிவை மறு பரிசிலனை செய்ததில்லை. ஒரு குழந்தை எப்போதுமே கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்புகின்ற போது, அந்த அறிவின் தெரிகின்ற ஆர்வம் ஒரு எல்லையை கடக்க முடியாத, சமூக மலட்டுத்தனத்தில் சிக்கி அழிந்து போகின்றது. இதை ஒவ்வொருவரும் புரிந்துதான் ஆக வேண்டும்.

 

இயக்கையை நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இயற்கையில் மனிதன் என்பதை இன்றைய மனித அறிவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித வரலாற்றை இயற்கை வரலாறக காட்டுவதன் மூலம் இயற்கை வரைமுறையின்றி சூறையாடப்படுகின்றது. இயற்கை வரலாற்றில் மனிதன் ஒரு புள்ளி என்பதை, இன்றைய அறிவியல் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இந்த உண்மையை மறுக்க "சுற்றுச் சூழல்" என்ற அடையளப்படுத்தல் ஊடாக, இயற்கை மறுக்கப்படுகின்றது. "சுற்றுச் சூழல்" என்பது தனி மனிதன் தன்னைச் சுற்றி உள்ள சூழலை பாதுகாத்தல் என்ற கோட்பாடு எழுகின்றது. இது உள்ளடகத்தில் இயற்கையில் மனிதன் இருப்பதை மறுக்கின்றது. மறு தளத்தில் தனிமனிதன் சமுகத்தில் ஒரு அங்கம் என்பதை மறுக்கின்றது. மனிதன் அனைத்தையும் தன்னைச் சுற்றி விளக்குவதன் மூலம், அனைத்தையும் அழிப்பதை நியாப்படுத்துகின்றான். இந்த அடிப்படை கோட்பாட்டு விவாதத்தை பிறிதொரு இடத்தில் பார்ப்போம்.                       

Last Updated on Friday, 18 April 2008 19:07