Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது.

ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது.

  • PDF

ஒரு பேப்பருக்காக எழுதியதாக குறிப்பிட்டு ஒரு செய்தியை, புலி வைரஸ் புலம்பியுள்ளது. http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html பிளக்கரிலும் இது வெளிவந்ததுள்ளது.

 

அதில் எனக்கு 'புலிக்காச்ச"லாம் அத்துடன் வேறு

சிலருக்கும் உண்டு என்று கூறி சிலரின் பெயரையும் அந்த ஆட்கொல்லி வைரஸ் இணைத்துள்ளது. ஆட்கொல்லி புலி வைரஸ்சால் கடந்த காலத்தில் கொல்ல முடியாமல் போனவர்கள் மீது, நிகழ்காலத்தில் கொல்ல முயன்று கொண்டிருப்பவர்களின் வைரஸ் புலம்பல் தான் இது.

 

புலிக்காச்சல் என்ற அரசியல் பதத்தை, புலியெதிர்ப்பு அணிக்கு எதிராக நான் தான் முதலில் பயன்படுத்தியவன். மாற்று அரசியலற்று புலி அரசியலையே முன்வைப்பவர்களின் நிலையை குறித்து, இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அதை அதன் அரசியல் சாரத்தில் இருந்து பிரித்து, எனக்கு எதிராக ஒரு பேப்பருக்காக புலி வைரஸ் புலம்பலாகவே புலம்பியுள்ளது. பெயர் ஊர் தெரியாது வைரஸ்சுடன் அலையும் ஒருவர், புலிப் பினாமிய ஊதுகுழலாக வெளிவரும் விளம்பரப் பத்திரிகை ஒன்றுக்காகத் தான் இதை அலட்டியுள்ளது.

 

ஒரு பேப்பர் என்பது சமூகக்கேட்டினை சமூகளவில் நடத்துபவர்களால் நடத்தப்படுவது. சமூகக்கேட்டினை வம்பளக்கவைக்கும் சமூக விரோதிகளாக உள்ள ஊடகத்துறையினராக உள்ள பிழைப்புவாதிகளின், தங்குமிடங்களில் ஒன்று தான் ஒரு பேப்பர்.

 

இதில் 'அண்மையில் பிரான்சின் பொதுத்தேர்தல் நடந்து அதில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபொழுது சோசலிச கட்சியின் தோல்வியை தாங்க முடியாத பலர் பிரான்சின் முக்கிய நகரங்களிலும் பாரீசிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர் அது கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கொழுத்தப்பட்டது. அப்பொழுது பாரிஸ் பகுதியில் வாழும் புலிக்காச்சலில் திரியும் இரயாகரனின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு வாகனம் கொழுத்தப்பட்டு அந்த நெருப்பு அவர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியையும் பாதித்திருந்தது. ஆனால் உடனடியாக தீயணைப்பு படையினரால் அந்த தீ அணைக்கப்பட்டாலும். பிறகென்ன வழமை போல காவல் நிலையத்திற்கு ஓடிய அவர் அய்யோ புலிகள் என்னை கொல்ல சதி வீட்டை கொழுத்தி விட்டனர் என்று போட்டார் ஒரு போடு. அது மட்டுமல்ல இந்த காச்சல்காரர்களினால் நடாத்தப்படும் இணையதளங்களிலும் செய்தியாக வந்தது."

 

இப்படி இந்த சமூக விரோத வைரஸ் புலம்பியுள்ளது.

 

ஆட்கொல்லி வைரஸ் அண்ணே நீங்கள் கூறும் 'புலிக்காய்சல்" பிடித்த எமக்கு, உங்கள் தண்டனை முறைகள் என்ன? அண்ணே. உயர்ந்தபட்ச மரண தண்டனை அல்லவா எமக்கான உங்களின் தண்டனை. வைரஸ் அண்ணே இல்லையென்று உங்களால் மறுக்கமுடியுமா? உங்கள் மரண தண்டனைக்காக இரகசியமாக கடத்தி வதை முகாமில் வைத்து சித்திரவதை செய்த போது, சிறையுடைத்து தப்பியவன் அல்லவா! சரி வைரஸ் அண்ணே, நீங்கள் சொன்ன விடையத்துக்கு வருவோம்.

 

இதில் பொலிஸ்சுக்கு நாம் ஓடோடிச் செல்லவில்லை. 25க்கு மேற்பட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தான் எம்மை நித்திரையில் இருந்து எழுப்பியவர்கள். சம்பவம் பற்றிய முறையீட்டை நாம் சட்டப்படி செய்தாக வேண்டும். அந்த வகையில் பொலிஸ் சென்றதும், எமது சந்தேகத்தை தெரிவித்துள்ளோம். இதைக் கூட புலியிஸ்ட் பாணியில் திரிக்கின்றனர்.

 

அடுத்து ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே சரியாக சொல்லத் தெரியாத புலி வலதுசாரியம் அதையும் கண்மூடித்தனமாக திரித்து புலம்புகின்றது. மறுபக்கம் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை, எனது வீட்டிக்கு அருகிலானதாக முடிச்சு போட்டு திரிப்பதும், அதுவாக காட்டுவதும் புலிக்கேயுரிய புலியிஸ்டு பாசிசக் குணம் தான்.

 

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது அதை தங்கள் வேலையில்லை என மறுத்த புலிகள், அதை புதியஜனநாயக (ம.க.இ.க) அமைப்பே செய்ததாக, கிட்டு லண்டனில் இருந்து விட்ட அறிக்கை போன்றது தான் இவைகள் யாவும். ஆட்கொல்லி வைரஸ் கிட்டுவின் படத்துடன் கூடிய அந்த இணையம், இந்தச் செய்தியை திரிப்பது பொருத்தமானதே.

 

ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கும், நாம் வாழும் பகுதிக்கும் இடையில் உள்ள தூரம் 25 கிலோ மீற்றராகும். அங்கு வைத்த தீ இங்கு பரவிவிட்டதோ. ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் அரசியல் நோக்கம் வேறுபட்டது. இது போன்ற உதிரி வன்முறையில் ஈடுபடாதவர்கள். அவர்கள் பொலிஸ்சுடனான தற்காப்பு நேரடி மோதலில் தான் வன்முறையில் ஈடுபடுபவர்கள். ஆட்கொல்லி வைரஸ் புலிகள் எப்போதும் தம்மைப் போல் மற்றவனையும் குறுக்கி பார்ப்பதால், பொருத்தமற்ற வகையில் தங்களுக்கேற்ற வகையில் திரித்து பொய்களைப் பொருத்திவிடுகின்றனர்.

 

அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் குறித்த இடத்தில் மட்டும், அதுவும் பொலிசுடனான நேரடி மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எல்லா இடத்திலும் உங்களைப் போல் உதிரியாக கொழுத்துவதுமில்லை, கொல்வதுமில்லை. தனிமனித பயங்கரவாதத்தில் நம்பிக்கையற்றவர்கள்.

 

நாம் வாழும் பாரிசுக்கு வெளியிலான எமது புறநகரப்பகுதியில், இது போன்ற உதிரிச் சம்வங்கள் கூட நடப்பதில்லை. ஆகவே நடக்காத ஒரு பிரதேசத்தில் இது நடந்தது. மற்றொன்று அங்கே ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், அதேநேரத்தில் இங்கும் எப்படி எரிக்கமுடியும். ஆடகொல்லி வைரசுகளின் புலனாய்வு எப்படிப்பட்டது என்றால், இப்படிப்பட்டது தான். இந்த வைரஸ் ஆட்கொல்லிகளினால் கொல்லப்பட்ட பலரின் கதைகளும் இப்படித்தான் அடங்கும்.

 

இந்திய மீனவர்களை கடத்தி பின், அவர்களை வைத்து அரசியல் வித்தை காட்ட முடிந்த புலி வைரஸ்சுகளினதும் அதன் எடுபிடிகளினதும் வித்தைகளை, மாலைதீவு சம்பவம் அம்பலமாக்கியது. அதன் பின் இதுவரை புலிகள் உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவிக்காது கள்ள மௌனம் சாதிக்கின்றனர். அந்த துன்பவியல் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த நிலையிலும் பினாமிகள் இந்த நாடகத்தை, அப்படியும் இப்படியும் புனைந்து காட்டுகின்ற வித்தையோ வித்தை தான். இதில் றோவின் நாடகம் என்ற செய்தி போட்டு வித்தை காட்ட முனைந்தனர். றோ செய்ததாக கூறியவர்கள், அப்படி கருத்திட்டவர்கள், அந்தக் கருத்தை அவசரமாக இரகசியமாக நீக்கியதை பலரும் கவனிக்காது விட்ட விசித்திரமும் நிகழ்ந்தது.

 

வருடத்துக்கு ஒருமுறை காட்சி தந்து வாய்திறக்கும் புலிகளின் தலைவரின் பங்கரில் இருந்துவரும் குசுவை மணந்து, குறுக்குவாட்டில் எழுதும் பினாமிகளின் ஊடகவியல் சார்ந்த பாசிச அறிவு அடிக்கடி சறுக்கிவிடுகின்றது. யார் விட்ட குசு என்று தெரியாது அலம்பிவிடுகின்றனர்.

 

தமிழக மீனவர் கடத்தலில் இன்னமும் ஒருவர் விடுவிக்கப்படவில்லை என்பதும், அவர் மாலைதீவில் புலிகளுடன் பிடிபட்டு சிறையில் இருக்கும் கதைபோல் தான் , 'புலிக்காச்சல்" என்று கூறும் ஆடகொல்லி வைரஸ்சுகளின் புலம்பல்கள்.

 

அனைத்தையும் விட இது போன்றவற்றை புலிகளாகிய நாங்கள் செய்வதில்லை என்று மறுக்கும் தார்மீக நேர்மை இந்த வாதங்களில் இருப்பதில்லை. நாங்கள் செய்யவில்லை என்று தான் மறுக்கின்றனர். ஏன் இது போன்ற சம்பவங்களை தாம் செய்வதில்லை என்று கூறவும் முடிவதில்லை. இப்படி செய்து விட்டு அதை பெருமையாக பீற்றுபவர்கள் நீங்கள். பேசுசுவார்த்தைக்கு என்று கூப்பிட்டு கொல்பவர்கள் தான் புலிகள். தேர்தலைப் பயன்படுத்தி தீ வைக்கமாட்டோம் என்று சொல்லும் அரசியல் நேர்மை, அரசியல் அடிப்படை புலிகளிடம் கிடையாது. மாறாக இப்படிச் செய்வதை ராஜதந்திரமாக, திறமையாக, இதை புலியிசமாக பீற்றுபவர்கள் புலிகள்.

 

புலம்பெயர் நாடுகளின் சட்ட ஒழுங்கை ஏற்றுக்கொள்வதாக கூறும் புலிகள், புலிகளின் பாரிசில் அதை மீறிய சம்பவங்கள் எத்தனை. ஒரு சிலவற்றைப் பாhப்போம்.

 

1. பாரிசில் எம் வீட்டுக்கு மிக அண்மையில் வாழும் லட்சுமியின் வீடு புகுந்து டாக்குமென்ரிகளை எடுத்துச் சென்றது யார்?

 

2. பாரிசில் 1990 களில் மாற்று கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தவர்கள் யார்?

 

3. பாரிசில் ஈழநாட்டுக்கு தீ வைத்தவர்கள் யார்?

 

5. பாரிசில் ஈழநாடு ஆசிரியர் ஒருவரை அடித்தவர்கள் யார்?

 

6. சபாலிங்கத்தை கொன்றவர்கள் யார்?

 

7. நாதன் மற்றும் கஜனைக் படுகொலைகள் செய்தவர்கள் யார்?

 

8. பாரிசில் முன்னைய காலங்களில் கூட்டங்களை குழப்ப முனைந்தவர்கள் யார்?

 

9. புலம்பெயர் நாடுகளின் உள்ள பொது அமைப்புகளில் ஒரு சில பினாமிகளைக் கொண்டு அந்த அமைப்புகளின் பெயரில் விளம்பரத்தை அடிப்பவர்கள் யார்?

 

10. அடி தடி வெட்டுக் குத்துகளின் பின்னனியில் பினாமியாக இருப்பவர்கள் யார்?.

 

11. உருட்டல், மிரட்டல், கட்டாய பண வசூலிப்பு இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்


இப்படி பாரிசில் மட்டுமல்ல உலகெங்கும். செய்துவிட்டு தாம் இல்லை என்பதும், பெரிய இடத்தில் மாட்டிவிட்டால் துன்பவியல் என்பதுமே புலியிசம். இப்படி எத்தனையோ அப்பாவிகளின் கதைக்கு வரலாறு கிடையாது.

 

இதை செய்வது யார் என்றால், புலி வைரசுகள் தான். இப்படி எத்தனையோ சம்பவங்கள். நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் கூட நடந்துள்ளது. ஆட்கொல்லி வைரசுகளாகவே உலவும் இந்த பாசிட்டுகள், என் வீட்டுக்கு அருகுடன் நடந்த தீ வைப்பை பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டக்காரர்களே வைத்ததாக கூறுவது தான் புலியிசம். ஆர்ப்பாட்டக்காரர்கள் இது போன்றவற்றை உதிரியாக செய்வதில்லை. பொலிஸ்சாருடனான மோதல் போதுமட்டும் தான், அதுவும் தற்காப்பின் போது தான் எதிர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

 

இது புலி வைரஸ்களுக்கு தெரிவதில்லை. அது தன்னைப் போல் குறுக்கு வழியில் யோசிப்பதால் அனைத்து துன்பவியலையும் திரித்து புலியிசமாக காட்ட முனைகின்றது. நாம் சந்தேகத்தை எழுப்பியது என்பது, மற்றொரு வன்முறைப் பிரிவு மீது தான். அத்துடன் புலிகள் இது போன்றவற்றை செய்வதில் தொழில்முறையாகவே கைதேர்ந்தவர்கள் என்பதால், எமது சந்தேகம் நியாயமானது. எனக்குத் தெரிந்த சிலரும், எனது நெருங்கிய உறவினரும் இணைந்து, இதை நான் விளம்பரத்துகாக கூறியதென புரட்டுவதை அறிந்தேன். அவர்களும் புலியிஸ்ட்டுகளாக இருப்பதால், எப்படியும் இதை புரட்டிக் காட்டவே புலிக்குரிய வடிவில் விரும்புகின்றனர்.

 

ஆனால் எமது அனுபவம் புலிப் பாசிஸ்ட்டுகளின் துன்பவியல் சம்பவங்களை எடுப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது. 1987ம் ஆண்டு இனம் தெரியாத நபர்களாக என்னைக் கடத்தியவர்கள் புலிகள் என்பது, நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பும் வரை ஊர் உலகத்துக்குத் தெரியாது. அது வரை எத்தனை பிரச்சாரம். எனது உறவினர், என்னை அறிந்தவர்கள் மத்தியில், பல்கலைக்கழகத்தில் எங்கும், இந்த வைரஸ் கிருமிகள் இதையொட்டி பரப்பிய வதந்திகள் அவதூறுகள் எத்தனை எத்தனை. நான் 85 நாட்கள் இருண்ட அறையில் நிர்வாணமான நிலையில், கட்டித் தூக்கிய நிலையில், மலசலத்தை அப்படியே கழித்த நிலையில், நித்திரை கொள்ளவிடாது குளிர் நீரை அடிக்கடி என்மீது ஊற்றிய படி, பல நாட்கள் உணவும் நீருமின்றி வதைத்துக் கொண்டிருந்தவர்கள் வேறு யாருமல்ல புலிகள் தான். அப்போது ஊர் உலகத்துக்கு அவர்கள் கூறியது தாம் என்னைப் பிடிக்கவில்லை, தமக்கு தெரியாது என்ற பொய்யையே.. (இது பற்றி நான் எழுதிய நூல், இன்றளவில் எனது முடிவுப்படி எனது மரணத்தின் பின் வெளிவரும்) நான் தப்பிய பின் வெளிவந்து உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தபின் , பல்கலைக்கழகத்தின் போராட்டத்தை தடுக்க, தாம் தான் கடத்தியதாக ஓத்துக்கொண்டு நடத்திய உரையைப் பார்க்கவும்.

 

http://www.tamilcircle.net/CASTE/cast.61.70/caste.066.mp3

இப்படிப்பட்ட ஆட்கொல்லி புலி வைரஸ்சுகள் கட்டமைக்கின்ற துன்பவியல் அரசியல் நாடகங்கள் பற்பல. அப்போதும் நான் தலைமை தாங்கி பல போராட்டத்தை நடத்திய யாழ் பல்கலைக் கழகத்துக்கு கூட, தாங்கள் பிடிக்கவில்லை என்றனர். எனது குடும்பத்துக்கு தாம் பிடிக்கவில்லை என்றனர்.

 

இக்கட்டுரை வந்துள்ள இணையத்தில் ஒரு படம் போடப்பட்டுள்ளது. அது யாழ்மாவட்ட தளபதியாக இருந்த ராதா தான். என்னை தேடிச் சென்ற எனது அம்மா, அவனின் காலில் வீழ்ந்து அவனின் காலை கட்டிப்பிடித்து கதறிய போது, அந்த நாய் எனது அம்மாவின் மூஞ்சையில் உதைந்து விட்டுச்சென்றவன் தான். அன்று காலால் மூஞ்சையில் உதைத்து விட்டுச் சென்ற இடத்தில் தான் கொல்லப்பட்டான். அண்மைக் காலத்தில் எனது வீட்டுக்கு அம்மா வந்த போது, பத்திரிகையில் புலிகளின் முக்கிய தளபதியான சங்கரின் படத்தை பார்த்த பின், அந்த நாசமறுப்பான் பற்றிய தனது நினைவுகளை எனது அம்மா கூறினார். புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட சங்கர், எனனைத் தேடிச் சென்ற அம்மாவை நாயே பேயே சனியனே என்று தூசித்து அங்கிருந்து விரட்டியவன் தான் அவன். மக்களுடனான புலியிசத்தின் உறவுகள், இப்படி மயிர்கூச்செறிபவை தான். இப்படி எத்தனை தாய்மார்களின் சொந்தக் கதைகள், அவர்களின் கண்ணீர்க் கதைகள் உள்ளது. இதை வரலாறு பதிவு செய்யும். இப்படி சமூகத்தையே அவலப்படுத்திய ஆட்கொல்லி வைரஸ்சுகளால் நடத்திய அவலமான கதைகள் பல உண்டு. அதை புலிக்காய்ச்சல் என்று இழிவுபடுத்துவதால், அவை பொய்யாகிவிடுவதில்லை. ஆட்கொல்லி புலி வைரஸ்சுகள் இருக்கும் வரை, புலிக் காச்சலும் சமூகத்தில் இருப்பது இயல்பு.

 

' இந்த காச்சலை தாங்களாகவே முன்வந்து ஏற்று கொள்கிறார்கள். எனவே இது உடல் சம்பந்தப்படாத மனம் சம்பந்தப்பட்ட காச்சல் என்பதனால் இதை அவர்களாகவே குணப்படுத்தாமல் விட்டால் அது அவர்கள் இறக்கும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும்" என்கின்றனர். புலிகாச்சலுக்கு காரணமாக உள்ள வைரஸ் இருக்கும் வரை, இது நீடிப்பது தானே உண்மை. புலி லூசுகள் என்ன சொல்ல முனைகின்றனர் என்றால், தாங்கள் அப்பாவிகள். கொலை, கொள்ளை, அடிதடி கலாச்சாரம் எதுவும் தெரியாத பச்சைக் குழந்தைகளாம்.

 

புலி வைரஸ்சுகளுக்கே உரிய புலியிசம். இதுபோன்றவற்றை தாங்களாகவே புலிக்கு எதிராக கற்பிக்கின்றனராம். கொலை, கொள்ளை, அடிதடியே அரசியலாக கொண்டு அலைந்து திரியும் ஆட்கொல்லிகள், சதா மனித மரணத்தில், அதன் அவலத்தில் தான் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றவர்கள். இது தான் புலி அரசியல்.

 

இதே கட்டுரையில் குறிப்பிட்ட குகநாதன் விவகாரம் கூட, இந்த புலி வைரஸ்சுகளினால் வலிந்து எதிரியாக்கப்பட்டவர் கதை தான். அவரின் மீதான குற்றச்சாட்டுக்கள், அவரின் நடத்தைகள், அவரின் செயல்பாடுகள் பற்றிய அபிப்பிராயத்துக்கு அப்பால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால், உங்களை விட அவர் மேலானவர். நீங்கள் கேடுகெட்டவர்கள். உங்களை விட அவர் மேலானவர். நீங்கள் ஊர் உலகத்தின் உலையில் போடும் அரிசியையே அபகரித்து தின்பவர்கள். அவரின் தொலைக்காட்சியை அபகரித்து ரீ.ரீ.என் ஆக்கிய கதையே தனிக்கதை.

 

அதற்கு முதலிட்ட குமார் சொப் சந்திரகுமார், தனது முதலீட்டை மீட்க வன்னிவரை சென்று தலைவரின் படியேறி நின்ற போதே கைவிரித்து விட்டவர்கள் யார்? ஊரான் வீட்டுச் சொத்தை அபகரித்து, அரசியல் விபச்சாரம் செய்து தின்றவர்கள் யார். உங்களவுக்கு குகநாதன் இதைச் செய்யவில்லை. நீங்கள் தான் இப்படி. அதை மற்றவனுக்கு கூறுவது, சொந்த அனுபவத்தில் அடிப்படையில் இருந்து தான். இப்படி பற்பல கதைகள் உண்டு. எத்தனை பேரின் வாழக்கையை, இப்படி அவலமாக்கி இன்பமுற்ற உங்கள் யோக்கியதை ஊர் உலகம் அறிந்ததே.

 

சொந்த மாற்று அரசியலற்று புலி அரசியலையே கொண்டு, புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் புலிக்காச்சலை நாம் தெளிவாக வரையறுத்துள்ளோம். எமக்கு எதிராக எமது வரையறையை திரித்து வெற்றிகொள்ள முடியாது. அரசியல் ரீதியாக விவாதிக்க வக்கற்று நிற்பதே எதார்த்தம். ஆட்கொல்லி வைரஸ் தான் காய்ச்சலுக்கு காரணமாக இருப்பதே உண்மை. வைரஸ் இருக்கும் வரை புலிக் காய்ச்சலும் நீடிக்கும் என்பதே உண்மை.

பி.இரயாகரன்
03.06.2007

Last Updated on Saturday, 19 April 2008 06:37