Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் சர ஓட்டத்தின் முறைகள்.

சர ஓட்டத்தின் முறைகள்.

  • PDF

மனிதனுக்கு உண்ணும் உணவு மருத்துவமாகும்.
பசியைப் போக்குவது போலவும், உடம்புக்கு
பலத்தையும் கொடுப்பது போல் நாம் சுவாசிக்கும்
காற்றும் நமக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும்
கொடுக்கின்றன. சுவாசிக்கும் காற்று ஒரு நாசி
வழியாக ஓடவும் முடிகிறது. இவை முறையே
சூரியகலை வலது நாசியிலும், சந்திரக்கலை
இடது நாசியில் சுழிமுனை நாடி இரண்டுமில்லாத
இருநாசிகளில் ஓடும். இவைகள் செயல்படும்
போது சரம் (வாசி) பிராண சக்தி உண்டாகின்றது.
இந்த நாடிகள் பஞ்ச பூதங்கள் ஆறு அவதாரங்
களையும், நாடி வகைகளையும், உடலில் உள்ள
காற்று (வாயுக்களையும்) வாத, பித்த சிலேத்மங்
களை இயக்குகின்றது. இவைகள் மூலம் நோய்
களைக் கண்டுபிடுக்கவும், இவைகளின் வித்தியாச
மான செயல்களால் சுகமளிக்கவும் படுகின்றன.
சரவோட்டத்தை மாற்றி அமைக்கும் போது
நோயின் தன்மை குறைக்க முடியும்.


சரத்தினை பக்குவமாக மாற்றி வாழ்க்கையில்
பல சாதனைகளை புரியவும் முடியும்.

அவைகளில்
சந்திரகலை எப்பொருளையும் உண்டாக்கும்
வல்லமை. இதன் நிறம் கருப்பு, இது திர ராசி.

சூரியகலை - வலது பக்க மூச்சு சரராசி ஆகும்.

சுழுமுனை - அழிவாற்றல் சக்தி.

எல்லா செயல்களையும் அழிக்கக் கூடிய வல்லமை
கூடியது. சரம் திரம் இரண்டு ராசியும் உள்ளது. இதன்
ராசி உபயம் ஆகும்.

சந்திரக்கலை - பெண்பாலாகும்,
சூரிய கலை -ஆண்பாலாகும்.
சுழிமுனை - உபய ராசி அக்ரிணை அலியாகும்.

ஊர் விட்டு காரியங்களுக்குச் செல்லும் போது
சந்திரக் கலை ஆரம்பித்து சூரிய கலையில்
காரியங்களுக்கு செல்லும் இடத்தை அடைய
வேண்டும். அந்தப் பயணம் வெற்றி அடைய
முடியும்.

சந்திரக் கலையில் ஓடும் போது செய்ய
வேண்டிய முறைகள்.

1. முக்கிய காரியங்களிக்குக் கடிதம் எழுதலாம்.

2. தூது அனுப்புதல்.

3. ஒருவரை ஒருவர் கலந்து பேசுதல் வெற்றியுண்டாகும்.

4. முக்கிய காரியத்திற்கு நாமே தூது செல்லுதல்.

5. புது ஆடை அணிதல்.

6. ஆபரண்ங்கள் பூணுதல்.

7. திருமணம் செய்தல் அல்லது செய்வித்தல்.

8. ஒருவனை தனக்குப் பணியாளனக அமர்த்துதல்.

9. கிணறு, குளம் வெட்டுதல்.

10. வீட்டுமனை வாங்குதல்.

11. புது வீடு புகுதல்.பொருளை விற்றல்.

12. பெரியோர்களை சந்தித்தல்.

13. பெருயோரைத் துணை கொள்ளுதல்.

14. வினை தீர்க்கும் காரியங்களைச் செய்தல்.

15. அன்போடு தேவதைகளை வேண்டுதல்.

16. எதிரியோடு உடன் படிக்கை கொள்ளுதல்.

17. கல்வி தொடங்குதல்.

18. புதிய சொத்து வாங்குதல்.

19. தீவினைக்கு விடுதலை தேடுதல்.

 

http://acuvarmatherphy.blogspot.com/2008/03/blog-post.html