Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் சர ஓட்டத்தில் சூரியகலை-வலதுகலை.

சர ஓட்டத்தில் சூரியகலை-வலதுகலை.

  • PDF

1. ஞான ரகசியங்களை குருவிடமிருந்து தெரிந்து கொள்ளுதல்.
2. நாம் ஒருவனுக்கு உதவி செய்தல்.
3. புதிய கலைகளைக் கற்பது.
4. ஒருவரை வணங்குவது.
5. எதிரியை விரட்டுவது.
6. விதை விதைக்க.
7. புதிய செடி நடுதல்.
8. வியாபாரம் செய்தல்.
9. வழக்கு பேசி முடித்தல்.
10. கல்வி கற்றல்.
11. மந்திரம் ஓதுதல்.
12. மருந்து உண்ணுதல்
13. பாம்பு, தேள் விஷம் முறித்தல்.
14. குளிக்கச் செய்தல்.


சுழுமுனையில் சரம் ஓடினால்.


1. தியானம் செய்தல்.
2. வேறு முயற்சியில் ஈடுபட்டால் தோல்வி.
3. சுழிமுனையில் சரம் ஓடும் போது வேறு ஒருவன் தாம் நினைத்ததை கேட்டால் நிச்சையமாக அந்தக் காரியம் நடக்காது எனக் கூறலாம். சரம் ஓடு பகுதி பூரணம் என்றும், ஓடாத பகுதி சூன்யம் என்றும், பூரணத்தில் செயல் படுகின்ற காரியம் யாராலும் வெல்ல முடியாது. சரம் ஓடாத பகுதியில் எதிரியை நிறுத்தி நாம் செய்யக் கூடிய காரியம் வெற்றி பெறும்.


சரத்திற்கும் நான்கு திசைக்கும் சம்பந்தமுண்டு.


மேற்கு, தெற்கு சந்திரக் கலை - இடது நாசி.

வடக்கும், கிழக்கும் சூரிய கலை - வலது நாசி.


மேற்கூறிய கலைகளில் பயணம் செய்தால் அந்தக் காரியம் வெற்றியாகும்.


வர்ம ரீதியாக சரத்திற்குள்ள ஐந்து பூதங்களுக்கு தொடர்பு.


மூக்கில் இருந்து வரும் மூச்சு மூக்குத் தண்டை சார்ந்து வந்தால் பிருத்வி தத்துவ மண் ஆகும்.


கீழ் நோக்கி ஓடினால் தண்ணீர் ஆகும்.


மேலே பாய்ந்து சென்றால் நெருப்பு ஆகும்.


நாசிது தண்டு நேராக மறு புறம் ஓடினால் காற்று ஆகும்.


எந்த பாகமும் இல்லாமல் ஓடினால் ஆகாயம் ஆகும்.


சரம் ஓடுகின்ற நீளம். ஐம்பூதங்களில்

மண் -- 12 அங்குலம்.

தண்ணீர் -- 16 அங்குலம்.

நெறுப்பு -- 8 அங்குலம்.

காற்று -- 4 அங்குலம்.

ஆகாயம் -- 1 அங்குலம்.


சரம் பார்க்கும் நேரம் விடிவதற்கு 5 நாழிகை இருக்கும் போது விதி முறைப்படி தன்னிடம் உள்ள சரம் எது எனத் தெரிய வேண்டும்.

 

http://acuvarmatherphy.blogspot.com/2008/04/blog-post.html