ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தமிழகத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனஇந்துவெறியர்களுக்கெதிரான தாக்குதலானது பார்ப்பனியத்துக்கும்,இந்துமதப்பாசிசத்துக்கும் எதிரானதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அன்றேல்,சமுதாயத்தில் நிலவுகின்ற பார்ப்பனியப் பண்பாட்டுச் சீரழிவை மாற்றியமைப்பதற்கானதாகவும் அதன் அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களையும் தவிடுபொடியாக்கும் போரைச் சிதைப்பதில் இத்தகைய தாக்குதல்கள் வழிசமைக்கும்."

 

 

மு.கருணாநிதி அவர்களின் தலைக்கு விலைபேசும் சனாதனவாதியான இராம்விலாஸ் பாசிஸ்டின் கருத்துக்கு எதிரானதாகத் தமிழகமெங்கும் பரவலாக நடைபெறும் எதிர்ப்புணர்ச்சிச் சம்பவங்கங்கள் யாவும் ஏதோவொரு மனிதரின் தனிப்பட்ட கூற்றுக்காகவும்,அது முழுக்க முழுக்க இன்னொரு தலைவரின்மீதான வன்முறையாகவும் கட்டப்பட்ட கருத்தின் வாயிலாக இடம்பெறுவதாக நிகழும் சம்பவங்கள், ஒருவகையில் அதன் உட்பரிணாமத்தை மறுக்கும் இன்னொரு பக்க விளைவுக்குக் காரணியாக இருக்கலாம்-இருக்கப் போகிறது.

இந்தச் சம்பவத்தை வெறும் தனி நபர்களுக்கிடையிலான பிணக்காக உணரும் நிலையைக் கடந்து,இந்தியாவை மறைத்துவரும் காவிப் புழுதியின் பாசிச அபாயமாக உணர்வது மிக முக்கியமாகும்.வட இந்தியாவில் இரத்த ஆற்றை ஓடவிட்ட பார்ப்பனிய-பனியா சாதிகளின் திமிர்த்தனமானது இங்கே தமிழ்நாட்டைச் சீண்டுவதன் மூலமாக இந்த மண்ணைப் பார்பனியத்துக்கேற்றவாறு பண்படுத்தும் பாரிய சமூக உளவியலை மெல்லவுருவாக்கும் காரியத்தில் ஆர்.எஸ்.எஸ்-பாரதிய ஜனதா மற்றும் இந்துத்துவப் பரிவாரங்களும் அரசியல் ரீதியாக முனைப்படைவதற்கான முன் முயற்சியில் இறங்கியபோது, தமிழ்நாட்டை அவமானப்படுத்துவதற்கான குறியீடாகக் கருணாநிதி அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது.இது, ஒரு வகையில் மாறிவரும் சூழலுக்கேற்றவாறு இந்து-இந்தி-இந்தியத் தயாரிப்புக்காவும் அதனூடாகக் கட்டியெழுப்ப முனையும் அடிமைச் சமுதாயத்துக்கான எல்லையை மேலும் விஸ்தரிப்பதற்காவும்,அந்தத் தரணத்தோடு தரகு முதலாளியத்துக்கு எதிராக வளர்ந்துவரும் கம்ய+னிசத்துக்கெதிராகவும் தம்மை நிலைப்படுத்த அகலக் கால்விரிக்கும் இந்துமதப் பாசிசமானது காலாகாலமாகப் பண்பாட்டுத்தளத்தில் பதியம்போட்ட கருத்தியற்றளத்தோடு தன்னை மீள் உருவாக்கஞ் செய்வதற்கான பரிட்சாத்தத்தைத் தமிழகத்தில் செய்வதின் எதிர்வினை(எதிர் நடவடிக்கை) நம்மிடம்(தமிழகத்தில்) நிகழ்ந்து வருகிறது.

"பண்பாட்டுத்தளத்தில் பதியம்போட்ட பார்ப்பனியம் பாடையிற் போவது புரட்சிக்குள் மட்டுமே நிகழும் தோழர்களே!"


பார்ப்பனியத்தை தமிழர் பண்பாட்டுத்தளத்தில் மெல்லப் பதியம் போட்டது எவர்?,இதுநாள்வரைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இதைக் கடைவிரித்து மக்களைப் பார்ப்பனியப் பண்பாட்டிற்கு அடிமையாக்கிய கயவர்கள் தமிழகத்தை ஆளும் கட்சிகளும் அவர்களது வெகுஜனக் கல்வியும் அதன் வழி சமுதாய அரங்குக்குப் படையெடுத்த ஊடகங்களுமே.இத்தகைய ஊடகங்களை வைத்து நாளும் பொழுதும் மக்கள் அரங்கில் காவிப் புழுதி தோய்ந்த கதைகளாலும்-காட்சிகளாலும் பாப்பனிய மயப்படுத்தி உழைப்பவர்களை அடிமைப்படுத்திய ஓட்டுக்கட்சிகள் இந்த இழிசெயலுக்கு வழிவகுத்தவர்களாகிறார்கள்.

இங்கே, கருணாநிதி அவர்களின் குடும்ப ஊடகமான சன் தொ(ல்)லைக் காட்சியினதும் மற்றைய ஊடகங்களினதும் மிகக் கெடுதியான தீங்கின் விளைவாக இன்றைய தமிழகத்துக்குத் தீங்கு காவி நிறத்தில் வருகிறது.பார்ப்பனியத்தை வேரோடு சாய்க்க வேண்டிய தமிழகத்தின் ஆட்சியமைப்புகள் பார்ப்பனியத்துக்குக் கரசேவகர்களாக இருந்த இந்தக் கணம்வரை நாம் இவர்களின்(தி.மு.க-அ.தி.முக. மற்றும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும்,போலிக் கம்யுனிஸ்டுக்கும் )கொடிய இழி செயலை வர்ணிக்க முடியும்.

கருணாநிதி அவர்களின் தலைக்கு உலை வைக்க முனையும் பார்ப்பனப் பாசிசத்தின் அதீத அடிப்படை வாதமானது ஏலவே அப்பாவித் தொழிலாளர்களைச் சாதிரீதியாகப் பிரித்துக் கொடிய வன்முறையை ஏவிக் கொலை செய்தது.இத்தகைய கொடிய பார்ப்பனப் பாசிசத்தைத் தமது ஏவல் நாயான தமிழகத்துப் பொலிசை வைத்துக் காத்து வந்த கருணாநிதி-ஜெயலலிதா கும்பலுக்கு என்ன அருகதையுண்டு இந்தப் பார்ப்பனப் பாசிசத்தைப் பற்றிக் கதையளக்க?

இதன் உண்மையை அறிந்த கருணாநிதியோ மெல்ல அடக்கி வாசிக்கிறார்.

பிழைப்புக்குத் தமிழ்வாதம் புரியும் கூலிக் கவிஞர்கள் வைக்கும் ஓப்பாரியோ மீளவும் இந்தப் பிரச்சனையைத் தனிப்பட்டவொரு இந்துமத வெறியனின் கருத்தாகக் குறுக்கிவிட முனைகிறது.இங்கே, இந்தப் புல்லுருவிகளிடம் மக்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

இன்றைக்கு நிகழும் இந்தப் பார்ப்பனியப் பாசிசத்துக்கெதிரான இந்தவுணர்வைத் தொடர்ந்து சமுதாயமட்டத்தில் ஆவேசமாக விருத்திக்கிட்டுச் சென்று, அந்தப் பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைப்பதற்கான எதிர்த் தாக்குதல்களை நடாத்திப் பார்ப்பனியப் பயங்கரவாதத்தை இந்திய எல்லையைத் தாண்டி அழித்துவிட வேண்டும்.இதற்கான போரைத் தொடர்ந்து நடாத்தி வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தோடு தோள் சேர்ந்தும் தொழிலாள வர்க்கத்தோடு இணைந்தும் இந்தப் பாசிசத்தைத் தொலைத்துவிட முயற்சி எடுத்தாகவேண்டும்.

ஆனால்,உண்மையில் இந்தப் போராட்டம் தமக்கு எதிராக வளரும் என்பதைக் கருணாநிதி அவர்கள் நன்றாக அறிவார்.எனவே, இப்போராட்டம் பிசுபிசித்துப்போவதென்பது உண்மையான யதார்த்தமாக இருக்கிறது.தமிழ்நாட்டை ஒட்டச் சுரண்டும் இந்த ஓட்டுக்கட்சி அரசியலும் அதனால் பாதுகாக்கப்படும் ஆளும் வர்க்கமும் (கருணாநிதிகூட ஆளும் வர்க்கத்துள் ஒரு பிரிவுதாம்.அவரிடம் குவிந்துள்ள தமிழ் நாட்டின் செல்வத்தின் மதிப்பு இலட்சம் கோடியைத் தாண்டும்.)பார்ப்பனியப் பாசிசத்தால் தன்னைக் காத்து வருகிறது.இந்தப் பார்ப்பனியத்தின் இருப்புக்கு மிக அவசியமான அரசியல் பொருள்ளியல் அடித்தளமானது இதை ஒருகட்டத்துக்குமேல் நகர்த்தாது.இதை மிக ஒழுங்காகப் புரிந்துகொண்ட பார்ப்பனர்கள் கொடுப்புக்குள் சிரித்தபடி கமுக்கமாக இருக்கிறார்கள்.ஆனால், நமது தோழர்களோ அந்தா இந்தா"ராவண லீலை"என்றெல்லாம் குதிப்பது சிறுபிள்ளைத் தனமானது.


போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.


அது, தொடர்ந்து பல்முனைத் தளங்களில் நடப்பது.அங்கே, ஒழுங்கமைந்த புரட்சிகரக்கட்சியின் பின்னே அணிதிரளாத தன்முனைப்புப் போராட்டம் ஒரு சில நொடிப்பொழுதில் காணாது போய்விடும்.இன்றைய தமிழகத்தின் இந்த உந்துதலுக்குப் பின்னாலுள்ள சக்திகள் இந்தப் போராட்டவுணர்வைத் தமது எல்லைக்குட்பட்டவரை அநுமதித்துவிட்டு அடக்கிவிடும்.

இதை அறியாதவர்கள் அவதிப்பட்டு,அந்தா-இந்தாவென்பது ஆரியக் கூத்தின் அடுத்த கட்டமாகப் போகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.09.2007

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது