Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!

இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!

  • PDF

பெண்களும் ஆயுதமேந்தி போராடினோம்! தெலுங்கானா வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம் பேட்டி

 

1930 ஆம் ஆண்டு நான் நல் கொண்டா மாவட்டம் கருவிரால் வட் டம் கொத்த கூடம் கிராமத்தில் ராமி ரெட்டி-சொக்கம் மாஸ்தம்பதிகளின் நான்காவது மகளாய் பிறந்தேன். என் அப்பா எனக்கு ‘ஜூகுனு’ (மின்மினி) என்று செல்லமாய் பெயரிட்டார். எனது தாய்மாமா ஒரு காந்தியவாதி. உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அவர்தான் எனக்கு சுதந்திரம் என்ற பொருளில் சுயராஜ் ஜியம் என்று பெயரிட்டார்.

 

எனது அண்ணன் நரசிம்ம ரெட்டி கம்யூனிஸ்டாக இருந்தார். 1943ம் ஆண்டு விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி வகுப்புக்கு அண்ணன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது பதிமூன்று தான். அங்குதான் எனக்கு மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் கிடைத்தது. அந்த ஒரே நாவல் என்னை கம்யூ னிஸ்டாக மாற்றிவிட்டது. என் அம் மாவும் அதைப்படித்தார். அவர் ஆந் திர மகாசபையில் சேர்ந்து அதன் பெண்கள் அமைப்பில் பணியாற்றி னார். எங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். அம்மா தனது பெண்கள் அமைப்பின் மூலம் கோஷா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் குழந்தைக ளின் கல்வி மறுப்புக்கு எதிராக போரா டினார். அன்னை மற்றும் அண்ண னின் நடவடிக்கைகள் என்னைப்பதி னான்கு வயதிலேயே புரட்சிக்காரி யாக மாற்றியது.

 

ஏழைகளை அடிமைகளாக நடத் துவது, அவர்களை சர்வசாதாரணமாக சாட்டையால் அடிப்பதைக் கண்டித்து ஆந்திர மகாசபை நடத்திய போராட் டங்களில் அம்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். விவசாயி கள் நிலம் கோரிப் போராடினர். கம்யூ னிஸ்டுகள் அக்காலத்தில் ஆந்திர மகாசபை மூலமே போராடினர். நிலப் பிரபுக்களின் அட்டூழியம் அதிகரித் தது. தொட்டி குமரய்யா கொலை செய் யப்பட்டார். அதைத்தொடர்ந்து 1946ல் ஆயுதம் தாங்கிப் போராடுவதென கட்சி முடிவு செய்தது. கட்சியின் முக் கிய ஊழியர்களுக்கு மேஜர் ஜெய் பால்சிங் ஆயுதப்பயிற்சியளித்தார். அதில் நானும் பங்கேற்றேன். பின்பு நானும் பெண்களுக்கு ஆயுதமேந்த வும், சுடவும் பயிற்சியளித்தேன்.

 

தோழர் பி.சுந்தரய்யா புரட்சிக்கு ‘மக்களை எழுப்புக’ என்ற கோஷத் தைக் கொடுத்தார். ரவிநாராயண் ரெட்டி, எல்ல ரெட்டி, ரபிஅகமது, வாவிகோபாலகிருஷ்ணையா ஆகி யோருடன் என்னையும் பிரச்சாரக் குழுவில் இணைத்தார். சென்னை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் வரை ஆடல் -பாடல் கலை நிகழ்ச் சிகள் மூலம் பிரச்சாரம் செய்தோம். அப்போது சென்னையிலிருந்த தெலுங்கு சினிமா நடிகர்களும், சினிமா இயக்குநர்களும் தங்க இட மளித்து உதவினர். எனது ‘உய்யாலா’ பாடல்கள் மக்களைக் கவர்ந்தன. நானே எழுதிப்பாடுவேன். பின்பு மேடைகளிலும் கிராமங்களிலும் உய் யாலா பிரபலமாகிவிட்டது. மக்களை எழுப்புவதில் எனது கலைப்பணியை பல தோழர்கள் பின்பற்றினர்.

 

பின்பு நான் பிண்டிபோல் வனப்ப குதியில் மானு கோட்டை வட்டாரத் தில் பெண்கள் படையை திரட்டி அவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன். முந்நூறு பேர் கொண்ட பெண்கள் படையில் இரு நூறு பேர் மலைவாசிப் பெண்களாவர். அதன் பின் நான் கொரில்லா ஆர் கனைசராக்கப்பட்டேன். எங்களுக்கு கமாண்டராக மல்லுவெங்கட நரசிம்ம ரெட்டி என்பவர் இருந்தார். முடிவுகள் எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் அவர் மிகத்திறமை யானவர். ஐதராபாத் நிஜாமின் படை களை விரட்டியடித்தோம்.

 

ஒவ்வொரு தளமாகக் கைப்பற்றி முன்னேறினோம். பத்து லட்சம் ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி நிலங்களைப் பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத் தோம். போரில் ராஜக்கா என்ற கொரில்லா வீராங்கனை சுட்டுக் கொல் லப்பட்டார். எனது தலைமறைவு வாழ்க்கையில் அந்த புகழ்மிக்க வீராங்கனையான ராஜக்கா என்ற ஒரு பெயரையே சூட்டிக்கொண்டேன். குதிரை மீது ஏறி போர்க்களங்களைச் சுற்றி வந்தேன். கம்மம், வாரங்கல் பகுதி முழுவதும் நான் ராஜக்காவாகச் சுற்றி வந்தேன். சுந்தரய்யா என்னை ஜான்சிராணி போல் தோன்றுவதாக கூறி பாராட்டினார். என்னைக் காட்டிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று நிஜாம் அரசு அறிவித்தது.

 

1947ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு தலைமையில் ஆட்சி வந்தது. ‘நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், நாங் கள் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்த நிலங்களைப் பறிக்கக் கூடாது, கம்யூனிஸ்டுகள் உருவாக் கிய கிராமராஜ்யங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என்று நேருவிடம் கோரி னோம். நேரு வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்தார். 1948 செப்டம்பரில் ஐம்பதாயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தை எங் கள் மீது ஏவினர். எங்கள் கட்சியின் கட்டளையை ஏற்று நாங்கள் ஆயுதங் களைக் கீழே வைத்தோம். இந்திய ராணுவம் எங்கள் தோழர்களை ஆயி ரக்கணக்கில் சுட்டுக் கொலை செய்தது.

 

6000 பேர் படுகொலை செய்யப் பட்டனர். முப்பதாயிரம் பேர் குற்றுயி ரும் குலைஉயிருமாக சிதைக்கப்பட் டனர். எங்கள் கிராமராஜ்யங்களை அழித்து, விவசாயிகள் பகிர்ந்தெடுத்த நிலங்களைப் பறிமுதல் செய்து மீண்டும் நிலப்பிரபுக்களிடமே ஒப்ப டைத்து காங்கிரஸ் ஆட்சி அக்கிரம தாண்டவமாடியது.

 

எங்கள் தெலுங்கானாப் புரட்சி, காங்கிரஸ் கட்சியால் ரத்த வெள்ளத்தி லேயே மூழ்கடிக்கப்பட்டாலும் இந் திய அரசு நிலச் சீர்திருத்த உச்ச வரம் புச்சட்டத்தை கொண்டுவரவைத்தது. வினோபா போன்றவர்களைப் பூமி தான இயக்கம் துவங்க வைத்தது.

 

தெலுங்கானாப் போராட்டத்தால் தான் உச்ச வரம்புச் சட்டம் வந்தது. ஆனால் நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேயில்லை. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவ சாயிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை விவசாயிகளை வஞ்சித்து வரு கிறது. வளர்ச்சியின்றி தேசம் தேங்கி நிற்கிறது. நிலப்பிரபுத்துவம் தகர்க்கப் பட்டு நில வினியோகம் நடைபெறா மல் நாடு முன்னேறாது.

 

உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை பத்துமடங்கு விலை கொடுத்து அபகரித்து கார்ப்ப ரேட் விவசாயம் செய்து வருகிறது. வாழ வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரு கிறது. மதவெறியர்கள் சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆண்டான் அடிமைத்தனம், பெண் அடிமைத் தனத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கி றார்கள். இதற்கெதிராக பெண்களும் ஆண்களும் இணைந்து போராட வேண்டும். சமூக விரோதிகளை எதிர்த்துப் போராட பெண்கள் பயிற்சி பெற வேண்டும். ஆயுதப் போராட் டமே வழி என்பது வெறும் கூக்குரல் தான். நாங்கள் அதை நடத்தியவர்கள். இன்றைய கடமை மக்களை ஜன நாயக முறையில் வெல்வதுதான்.

 

1954ல் தோழர் ராஜேஸ்வரராவ் எனக்கும் கமாண்டர் மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து செயல்பட்டார். 2004ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். நான் ஆந்திர மாநி லக்குழுவில் பணியாற்றி வருகிறேன். 1981 முதல் 2007 வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவராய் செயல் பட்டேன். எனது பணி இன்றும் தொடர்கிறது. எனக்கு 78 வயதாகி விட்டாலும் மார்க்சியம் வென்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பணி யாற்றுகிறேன். அது உயிருள்ள வரை தொடரும்.

 

பேட்டி: எஸ்.ஏ.பி.


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

 

Comments 1:


துரோகத்தின் வரலாறு - தெலுங்கானா புரட்சியை வழி நடத்த துப்பற்ற அன்றைய இந்திய கம்யுனிஸ்டு கட்சி படு கோழைத்தனமாக அதனை காட்டிக் கொடுத்தது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும் தலைமை தாங்கும் தைரியமற்ற இந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களை இப்படி கருவறுத்துல்லது. பிரிட்டிஸ்க்காரனை நாட்டை விட்டு விரட்டிய மும்பை மாலுமிகள் கலகம் மற்றும் தொழிலாளர் கலகத்தையும் கூட கடைசியில் காட்டிக் கொடுத்தது CPI. அந்த வரிசையில் தெலுங்கானா புரட்சியும் ஒன்று. இந்தியா தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் தனது சொந்த கைகளில் ஆட்சியதிகாரத்தை நடத்த முடியும் என்று நிரூபித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. அது குறித்த ஒரு கட்டுரை அதே போலி கம்யுனிஸ்டின் தீக்கதிர் பத்திரிகையில் வந்துள்ளது. வரலாற்றின் பக்கங்களை நாம் மறு வாசிப்பு செய்ய தூண்டுகோலாக இருக்குமென்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 


Question 1:
//மாலுமிகள் கலகம் மற்றும் தொழிலாளர் கலகத்தையும் கூட கடைசியில் காட்டிக் கொடுத்தது CPI.//


இவை சரியான தகவல்களா?

 

தல்வார் கப்பல் புரட்சியில் மாலுமிகளுக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை மும்பையில் கட்சி நடத்தியது. போலீசு துப்பாக்கிச்சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுதான் சரியான தகவல்கள் எனக் கருதுகிறேன். தல்வாரைக் காட்டிக் கொடுத்தவர்கள் காங்கிரசும், ஜின்னாவும்தான்.

 

Ans1:


தல்வார் புரட்சியிலும் கூட இந்தியாவின் மக்களை தலைமை தாங்குவதற்க்கான் முயற்சி எதுவும் செய்யாமல் அதற்க்கான தைரியம் இல்லாமல் காங்கிரஸ் பின்னே தொங்கி கொண்டிருந்தார்கள் இவர்கள். நாடு முழுவதும் புரட்சி அலை வீசும் போது அதை ஒருங்கிணைத்து ஒரு எரிமலையாய் பிரிட்டிஸ் நாய்களை சுட்டு பொசுக்குவதை விட்டு விட்டு சரணடைய சொல்லி கடைசியில் வழக்கம் போல முடிவு செய்தனர் தோழார்கள்.

 

கட்சி தலைமை குறித்துத்தான் இங்கு விமர்சனமே தவிர அதன் உணர்வுப் பூர்வமான தோழர்களின் ஈடு இணையற்ற தியாகங்களுக்கும், நமக்கு கற்றுக் கொடுக்கும் முன்னுதாரணங்களுக்கு அல்ல நமது விமர்சனம்.

 

ஏன் இந்த போராட்டங்களின் மூலம் இந்தியாவின் தனிப் பெரும் தலைமை சக்தியாக தன்னை உயர்த்திக் கொள்ள இந்த கட்சி முயற்சி செய்ததே இல்லை? இவர்களின் பாரம்பரியம் என்று சொந்த கொண்டாடும் எந்தவொரு போராட்டமாவது இவர்களது கட்சி தலைமையால் ஆரம்பிக்கப்பட்டதாகவோ அல்லது வழி நடத்தப்பட்டதாகவோ இருக்கவில்லையே ஏன்?

 

காட்டிக் கொடுத்தது என்பது இந்த அம்சத்தில்தான் வருகிறது.