Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்! (நிதர்சனம் விதைக்கும் வினை.)

கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்! (நிதர்சனம் விதைக்கும் வினை.)

  • PDF

"முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்."

தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி.

தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ஈழப் போராட்டத்தின் பல பரிணாமங்களைப் பேசுபவை.அவரது சிறுகதைகளுடாகப் போராட்டத்தினதும் ஈழமக்களினதும் வாழ்க்கைப் பெருஞ் சுமைகளை விமர்சனரீதியாச் சொல்பவர் சோபா சக்தி.இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா? 


அது ஈ.பீ.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாளோடு இணைத்துப் பேசுவது போட்டுத் தள்ளுவதற்கான ஒத்திகைகளில் ஒன்றாக இருக்குமென்றே நாம் கருதுகிறோம்.

 

புலிகளின் இத்தகைய ஈனத்தனமான கருத்தியல் மற்றும் வன் முறைசார்ந்த நடவடிக்கைகள்,இன்னும் அந்த அமைப்பு ஒரு மக்கள் அமைப்பாக முடியாது, வெறும் பாசிசக் கட்டமைப்பாகவே தன்னை நிறுவிக் கொண்டு,தனது அழிவின் விளிம்பில் ஆப்பிழுத்த குரங்காகச் செயற்பட்டு வருகிறது.இன்றிருக்கும் சூழலில் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில், மாற்றுக் கருத்தாளர்களை-படைப்பாளிகளை-ஊடகவியலாளர்களைத் தமது அரசியலுக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகக் கருதி போட்டுத் தள்ளும் போர் உத்தியைத் தொடர்ந்து நடை முறைப் படுத்தும் புலிகள், ஈழப் போராட்டத்தை எந்தத் திசையில் எடுத்துச் செல்கிறார்களென்பதற்கு இத்தகைய இழி செயல்கள் அருமையான உதாரணம்.

 

நாய் வலைக்கூட நிமிர்த்தி விடலாம்.ஆனால் புலிகளின் அராஜகத்தையோ அவர்கள் கொண்டுள்ள மக்கள் விரோத அரசியலையோ மாற்றவே முடியாது.

 

அந்த அமைப்பும்,அதன் உத்தியோகபூர்வ இணையத் தளங்களும் தமது அரசியல் அழிவுக் காலத்தை விரைந்து செயற்படுத்துவதற்காகவே தமிழ் பேசும் மக்களை உளவியல் மற்றும் உயிர் பறிப்பு ஒடுக்குமுறைகளுடாய்ச் செய்து மக்கள் மத்தியில் தம்மைப் பாசிச வாதிகளாகக் கட்டமைத்து,பொது மக்களையும் கலைஞர்களையும்,புத்திஜீவிகளையும்,ஜனநாயகவாதிகளையும் ஒடுக்கி வருகிறார்கள்.

 

சோபா சக்திக்கு இத்தகைய இழி நிலைகளைக் கற்பிக்கும் நிதர்சனமானது அடுத்து இன்னும் எவருக்குக் கைகாட்டிப் போட்டுத் தள்ளவதற்கான கருத்தியலை மக்கள் முன் திணிகப் போகிறதோ தெரியவில்லை.

 

இந்த அமைப்பும் இதன் வால்களும் எப்போதுமே மனித விரோதிகளாகவே இருக்கிறார்கள்.

 

இந்தப் புலிகள் அமைப்பு மக்கள் அமைப்பாக மலருமென்று நாம் கற்பனை செய்வது மடமை என்று இவர்களே எமது முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.


சோபா சக்தியையும் போடப் போறாங்கள் புலிகள்.


ஆழ்ந்த வெறுப்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்.
18.02.2007