Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
"1: ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
>>(பதில் விளக்த்திற்காக மேலும் சில
துணைக்கேள்விகள்.)<<

1:1 நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே
கருதுகிறீர்களா?

இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக.
1:2 ஐ.பி.சியையும்,
ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
இல்லையென்றால் வேறுபாட்டை
விளக்குக. "

அடுத்தவன்(ள்) வீட்டில்
தென்னை காய்த்திருக்கும்போது
வேலி பிரித்து வெறித்துப் பார்த்து
வேளை வரும்போது
வேட்டிக்குள் திணிப்பவர்கள்
ஊருக்கு நல்லதற்காகத் திருடுகிறார்களாம்!

"அவசியம் உள்ளதாகக் கருதுகிறீர்களா?"

எதன் பொருட்டு ரீ.பீ.சீ-மாமோய்?
எள்ளுக்காயுது எண்ணைக்கு
ரீ.பீ.சீ அலம்புது கைக் கூலிக்கு!
இதற்குள் ஐ.பீ.சீ ஆட்டுக்குட்டி,
நிதர்சனத்தோடு சேர்ந்து தேனீக்குத் திரு விழா!!

திருடர்கள்!

மக்களின் காதுகளில் மலர் சூடி
மயக்கம் காணும்போது
காதறுக்கும் கூட்டம்
மக்கள் நலன் விளக்கி
"சர்வே"செய்கிறார்கள் நம்மிடம்!

ம்...

காலம்தாம்.

இலங்கைக்கு
இந்தியாவுக்கு
ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு
காசுக்கு வாலாட்டும் ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு தேள் கொட்டுது
மக்கள் நலனாக.

என்ன செய்ய?

புலிகளுக்கு
நிதர்சனம்,
எட்டப்பர்.கொம் என்று
ஏராளம் கொம்புகள்!-பாசிசத்தின் பக்கவாத்தியங்கள்!!

இயக்கவாதப் பிழைப்பு வாதிகள்...
எல்லோரும்
மக்கள் விரோதிகள்தாம்!

எந்தப் பக்கம் பார்த்தாலும்
மக்கள் விரோதிகளே மக்கள் குரலாக...
துப்பாக்கிகளுக்குமுன்
மௌனித்துக் கிடக்கும் மக்கள் மனங்கள்
மரணத்தை அடைகாக்கும் இயக்கவாதிகளிடம்
உரிமைக்கு ஏங்கிக் கிடப்பது உண்மைதாம்!!

உயிர்வாழும் நிலமும்
உண்பதற்கு பயிர் செய்தலும்
உழைப்பதற்குத் தொழிலும்
தோணிவிட்டு மீன் பிடிக்கக் கடலும்
கண்ணுறங்க வீடும்
அவர்களது உரிமை

நாடென்றோ
அல்ல மொழியென்றோ
திரண்டுகிடக்கும் எந்தக் கனவும்
மக்கள் நலத்தைக் காத்திடுவதாகவில்லை

தலை தறித்துத் "தமிழ்" தம்பட்டம் அடிப்பவர்கள்
உயிர் பறித்து ஒரு தேசம் விடுதலையாகுமெனச்
சொல்வார்கள்
பற்பல வடிவங்களில்

இத்தகைய திருடர்களின்
மரண சாசனத்தில் பங்கற்றவர்கள் எவர்கள்?
மடிப்பிச்சைபோல உயிர்ப்பிச்சை கேட்கும் நிலையில் மக்கள்...
மசிரப் புடுங்கின ரீ.பீ.சீ-தேனீக் கும்பல் சிங்களக் கொடும் அரசுக்கு
சுக்குக் கோப்பி தயாரிக்குது
ஏகாதிபத்தியத் தயவில்
இதுக்கொரு இந்தியா-ஆனந்த சங்கரித் திருடன் கூட்டாக...

ஆருமற்ற அப்பாவித் தமிழர்களிடம்
அரசியல் பண்ணும் அற்பப் பிராணிகளை
ஆரூ சொன்னார் "அவசியம்"-"தேவை"
மக்களுக்கானதென?

அறுத்துப்போட்டுக் கூறுபோடும் ரீ.பீ.சீ.வானொலியா மக்கள் நலன் பேச?
நீறுப+த்த மக்கள் மனங்களை
குருதி கொண்டு"காயடிக்கும்"கள்ளர்கள் கூட்டம்
புலியாக இருந்தாலென்ன
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலாக இருந்தாலென்ன?

எல்லோருமே கொலைகாரர்கள்!-திருடர்கள்,
மக்களின் விரோதிகள்!!!!!

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திருடியவர்கள்
தத்தம் நலனுக்கு மக்களுரிமைகளை
தரணம் பார்த்து ஏலம் விட்டும்
போரிட்டும் பதவி சுகம் காணப் பரதவிக்குமிவர்கள்
மக்களுக்குச் சேவகர்களாம்!
மண்ணாங்கட்டி!!!

நேபாளத்துப் போராளிகள்
"கைக்கூலி ரீ.பீ.சீ-வானொலிக்கு" மாவோயிசப் பயங்கர வாதிகளாம்!
கொடும்பாவி இராஜபக்ச- "ஜனாதிபதி,
மக்களைக் கொல்வதை நிறுத்தும்படி வேண்டினேன்!"-அவிட்டுவிடும்
ஜெயதேவரின் வாய் அழகென்ன அழகு!!
அண்ணே,
அடுப்பெரிக்க உதவாத
கரிக் கட்டை நீங்கள்
ஆருக்கு அபிசேகம் செய்வதில் அவசரம்?

பாழாய்ப்போன புலிகள்
தேசத்தின்-தேசியத்தின்
விடுதலையின் பேரால்
தமிழருக்குக் கொலைகளையே தந்துவர
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு
அரசியலாய்ப் பிழைப்பாய் அது உரமிடுகிறது.
எரிகிற வீட்டில்
பிடுங்குவது மிச்சமென்றலையும்
ஜெயதேவன் அன்ட் கொம்பனிக்கு
மக்களின் சாவுகளும்,குருதியும்
நல்ல கடைச் சரக்கு ஏலமொன்று விடுவதற்கு
சரியான போட்டியப்பா புலிகளுக்கு!

"ஐ.பீ.சீ வானொலியும்
ரீ.பீ.சீ.வானொலியும் ஒன்றா?
அல்லதென்றால் வேறுபாட்டை விளக்குக!"

ஆரடா நீங்கள்
ஆட் காட்டி வேலைக்கு?

அடுப்பெரிக்க அல்லல்ப்படும் நாங்களெங்கே
வானொலிகளுக்கான கூலியாக
அழிந்து போகும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும்
அள்ளிக் கொடுக்கும் பல்லாயிரம் பவுண்களின் ஊற்றெங்கே?

அடிவருடிகள்,கைக்கூலிகள்
மக்கள் விரோதிகள்
சிங்களப் பாசிச அரசின் பாதந் தாங்கிகள்
புலிகளுருவில் மட்டுமல்ல-அது
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல் உருவிலும்
தமிழ் மக்கள் உரிமையைக் காவு கொள்கிறது.

தேசியத்துக்கு
சுய நிர்ணயத்துக்கு
விளக்கம்வேறு கேட்கினம் அரசியல் ஆய்வில்(!?)!
தேசியத்தை சிதைக்கின்ற புலிக்கோ
அல்லது சிங்கள அரசுக்கோ
குறுந்தேசியப் புலம்பலென்றால்
பதவிப்பேராசைப் பெரிச்சாளிகளான
புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ-தேனீக்கு
தேசியத்தின் வரையறை
மக்களினத்தின் திமிராகத் தெரிகிறது

தேசத்தினதும்
மக்களினதும் பாதுகாப்பே
அந்நியனின் காலடியில்...
பிறகென்ன?
தேசியமோ அன்றித் தமிழ் பேசுவோர்
சுய நிர்ணயிப்போ
சிங்களச் சியோனிசத்தின் சந்தைக்கு நிகராகுமோ?

நக்கிப் பிழைப்பதற்கு
ஒரு
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல்
புலிகளைப் போலவே அந்நியனிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது
மக்களை ஏமாற்றியபடி!

ப.வி.ஸ்ரீரங்கன்
24.06.06

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது