Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முதலில் எனக்காக, எனது அவலத்துக்குத் தோழமைக்கரந் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. என் நிலைக்காக தனிப் பதிவிட்டு எதிர்ப்புக் கூறிய இரு கல்வியாளர்கள் ஒருவர் பெயரிலி, மற்றவர் திரு.ரோசா வசந்! இருவருக்கும் என் அன்பு. நான் பெரிதும் மதிக்கும் முகமூடி, சிவக்குமார் மற்றும் காசி, குழலி இவ் நான்கு சான்றோருக்கும் அடுத்து என் அன்புக்குரிய தோழர்கள் இரயா, சுதன் எல்லோருக்கும் உளமொப்பிய நன்றி. நாயகன், மலைநாடன் மற்றெல்லா அன்பர்களுக்கும் கூடவே நன்றி.

இனி விடயத்துக்கு வருகிறேன். ஓசைப்படாமல் தட்டச்சுச் செய்கிறேன். நான் எதுவுமே எழுதப்படாது என்பது வீட்டாரின் கண்டிப்பு. எனினும் மௌனம் சம்மதமாகி விடும். எனவே என் பதில். மேலே வந்துள்ள அறிக்கையையே இதுவரை தேடினேன். நிதர்சனம் இன்னும் பல தளங்களென்று... இந்த மேனிக்கு எழுதிய அவதூறுப் பிரசுரத்தில் எனது படத்தையும் போட்டுத்தாம் புலிகள் நேற்று என்னைத் தேடியபடி. எனக்கு எல்லா விபரமும் தர முடியும். அதை இதில் சொல்வதற்கில்லை. யாரு, எப்படி, என்ன முறைமையில் எனக்கு மரண அறிக்கை தயாரித்து என் படத்தையும் அதில் போட்டு, எனக்குப் பொட்டிட்டு, என் மனைவி மாலையிட வைப்பதற்குத் தயாராகிறார்கள் என்பது நமது தேசியத் தலைவருக்கே தெரியாதிருக்கும்- அல்லது தெரிந்திருக்கும்.

எனக்குப் புலிகள் தண்டனை தருவதாகவிருந்தால் அது பெரும்பாலும்: "பாசிஸ்ட், பயங்கரவாதி பிரபாகரன், மோடன், முட்டாள்கள்" என்ற என் வார்த்தைகளுக்கே தர முடியும். மற்றும்படி வேறெந்தக் காரணத்துக்கும் இருக்காது. ஏனெனில் நான் இல்லை வைகைச் சிறி.

உங்கள் கற்பனைகளை நீங்களே வைத்திருங்கள்.

நான் மார்பை நிமிர்த்தி எந்தவொரு கறையுமற்ற என் நெஞ்சைத் தட்டிச் சொல்வேன்)

பரநிருபசிங்கம் விஜயரெட்ணம் ஸ்ரீரங்கன்.

மற்றவர்களின் தயவில் வாழ்ந்ததுமில்லை, கையேந்தவுமில்லை. இன்றும் எட்டரை மணி நேரம் ஜந்திரத்தில் உடல்வருத்தி வேலை செய்துவிட்டு வந்து இதை எழுதுபவன்.

எனக்கு உளவுத் தொழிலா?

மேதினமென்று தெரியாத்தனமாக எனது பதிவுக்காப் புலிகளின் ஊர்வலத்தைப் படம்பிடிக்கப் போய் இப்போது உளவுப்படைக்கு... நினைக்கச் சிரிப்பு வருகிறது.

நூரன் பேர்க்கில் என்னை விசாரித்தால் நான் யாரென்று நண்பர் சுரதா பதில் தருவார்.

இல்லை அப்படியே சரவணையில் போய் இதுயாரு பேர்வழியென்றால்...ஐயோ விசயரெத்தினத்தின்ர பஞ்சப்பரதேசியளா? என்றுதாம் வருமப்பு.

அவனுக்கு உளவு (ஊரில மாடுகட்டி வயல் உழுதிருக்கிறேன். அப்பன் சாக நாங்கள் தாம் தோட்டஞ் செய்து எங்கள் வயிற்றைக் கழுவினோம்) பார்க்கிறான். இவனுக்குச் சொறியிறான் எண்டு கயிறு திரித்தல் புலிகளுக்குத்தான் சரி வரும்.

அதுவும் என்ன சொல்லுகிறீர்கள்?

வைகைச் சிறீயோ?

அண்ணமார் தம்பீமாரே

அது நான் இல்லை ராசாமாரே!

நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன் அதில் சன்னதியோடு சாவரி செய்ததாக...அது வருடம் 1984 வரையும். பின் குப்பை கொட்டுவதும், வயிறு வளர்ப்பதும்தாம்.

இந்தப் பெரிய மனிதர் தொழிலெல்லாம் எனக்குரியதில்லை.

அது உங்களுக்கே வெளிச்சம்.

புலிகள் என்னைப் படத்தோட தேடவேண்டாம்.

என் கருத்துகளை, அரசியில் நிலைப்பாட்டை எதிர்த்துக் கருத்தாடுங்கள். அல்லது துரோகியா, உளவாளியாவெனத் தெரியணுமானால் ஐயாமாரே நேரடியாக வருகிறேன் உங்களிடம். எங்கே வரணும்?

தெம்போடு வருகிறேன்.

ஓபர்கவுசன், பொண் அல்லது வன்னிக்கு?

வன்னிக்கு வர நீங்கள் தான் ரிக்கற் தரணும்.

இது நியாயமான வேலை.

இதைவிடுத்து அவதூறை அள்ளிவீசும் கடைந்தெடுத்த முட்டாள்களாய் எவன் எனக்கு வைகைச்சிறீ என்கிறான்?

போடாங்... மரமண்டையளே!

இந்த மேற்காட்டிய துண்டுப்பிரசுரத்தை என் பதிவில் போட்டு எனக்கு வேலைப் பளுவைக் குறைத்த அநாமதேயத் தறுதலைக்கு மீண்டுமொரு பெரும் கும்பிடு.

இனி நேற்றைய நடப்பு குறித்து உண்மையான உண்மை தருகிறேன் வாசகர்களே!:

இடம்: வு.சு.மு.ளுpநணநைடடந றுநசமணநரப புஅடிர்இ

புநஎநடளடிநசப.

புநசஅயலெ.

இங்கு வேலை செய்யும் 99 வீதத் தமிழர்களும் நுnnநிநசவயட (என்னபெற்றால்); புலிப் பொறுப்பாளர் சங்கருக்கு (சங்கானை பிறப்பிடம்) உறவினர்களும், வேண்டப்பட்டவர்களும். அங்கே எனது உறவினரும் பஞ்சம்பறிக் அடிமாடாய்...இங்கே மேற்காணும் நோட்டீசோடு புலிகள் போய் (எனது படம் அச்சடித்து) இவனைத் தெரியுமா? இவனொரு துரோகி...உளவு வேலை செய்கிறான். வ+ப்பெற்றாலில் இருந்து...

அந்த அப்பாவி: "எனக்குத் தெரியும் சொல்லமாட்டன்!" என்கிறார். கூடவே எனது மனைவிக்கு போன் எடுத்து விஷயம் சொல்ல வீட்டில் மரண ஓலம். நான் வேலையை இடையில் நிறுத்தி "குய்யோ முறையோவென" ஓடிவந்து, மனையாளைப் பிள்ளையளைத் தேற்றிப் பயந்தடித்துப் பதிவெழுதி...பலபேர் தோழமைக் கரம் தந்து...

அவர் "சொல்லமாட்டேன் என்பது என்மீது உண்மையிருப்பதால். அடுத்து அவர் என் சகலன்.

இராசாமாரே ஏன் அவருக்கு "மூன்று பிள்ளைகளுக்கு நீ தகப்பன்" உண்மையைச் சொல்லென்று ப+ச்சாண்டி காட்டுகிறீர்கள்?

நெஞ்சில் உரமிருந்து நேரிய வழி தெரிந்தால் என்னோடு கருத்தாடுங்கள். நான் துரோகியென நீங்கள் நிரூபித்தால் நான் உங்கள் முன் வந்து நிற்கிறேன் மரணத்துக்காக. இது சவால் பு.ஆண்டிகளே(புலி ஆண்டிகள் என்று வாசிக்கவும்)!

இந்தக் கதம்ப எழுத்தைத் தேடியே நான் நேற்றுப் ப+ராகவும் மனமுடைந்து இருந்தேன். இப்படியொரு கிலுசுகெட்ட பிரசுரத்தை- இணையத்தள எழுத்தை... இவ்வளவு பெரியவொரு அமைப்புச் செய்யுமா? புலிகளின் தலைமைக்கே வெளிச்சம்.

கேடுகெட்ட வால்களே! அளப்பெரிய தியாகத்தை அருவருக்க வைக்காதீர்கள்.

என்னப்பெற்றால் புலிப் பொறுப்பாளர் சங்கர் இது குறித்துப் பதில் தரவேண்டும்.

யார் என்னை இத்துண்டு அடித்துப் படம் ஒட்டித் தேடியதென!

நான் இனிமேல் பொலிசுக்குப் போக முடியும். எனக்குப் புது நடவடிக்கை செய்யத் தெரியும். தம்பிமாரே என் நாவுக்கு அந்த வலிமையுண்டு.

சுத்தமான மனத்தோடு, சோரம் போகாத அரசியல் கொள்கையோடு, நேரிய பார்வையோடு நெஞ்சை நிமிர்த்தி நான் ப.வி.ஸ்ரீரங்கன். சரவணையான். என்கின்ற அரசியல் தெளிவோடு, நான் காணும் பொதுவுடமை மலரப்பாடுபட்டு எழுதிவரும் ஒரு ஜீவன். என்னைக் கொல்ல உனக்கு எங்கிருந்து அந்த றையிட் வந்தது?

எப்படி வரும்?

யாருடைய கழுத்தை நான் அறுத்தேன் அல்லது எவள் தாலியை நானறுத்தேன்? முடிந்தால் நிரூபி .நான் வருவேன் உனது இருப்பிடம் நோக்கி. நான் நீங்கள் நினைக்கும் துரோகியல்ல.

சங்கரே, சிவமே, இல்லை எந்தக் கொம்பு வைத்த புலித் தோழரே புகல்வீர் ஆதாரம் தந்து.

அது உங்கள் அகராதியில் இல்லை.

அடுத்தவன் பணத்தில் பசி போக்குவது இந்த விஜயரெட்னத்தின் வாரீசுக்கு எப்பவும் நேர்ந்ததில்லை. இனியும் நேராது. எட மூதேவிகளே நீங்களா இப்படி ஆட் கொல்லும் நோட்டீசு தயாரிப்பது? வைகைச் சிறி!...ம்...கொ...டை சிறீ!

நான் ப.வி.ஸ்ரீரங்கன்

பாடையில போவாரே மற்றவருக்குப் பாடைகட்ட முனையாது பாருங்கள் உங்கள் சோலியை! நான் தேசியத் தலைவரெனும் உங்களின் தலைவர் பிரபாகரனுக்கே இப்போது சவால் விடுகிறேன் "தலைவரே" முடிந்தால் நான் உளவுப்படையின் தகவல் குஞ்சு என்றும், இலங்கை எம்பசியில் கக்கூசு இருந்ததென்றும், கள்ளுக் குடித்ததென்றும், பாட்டியில தோட்டியென்றும் நிறுவுங்கால் உனது காலடிக்கு நான் வாறேன். இது உண்மையான சொல். அதற்கு முதலில்...

என்னப் பெற்றால் சங்கர ஐயா நீவீர் என்னைத் தேட ஆள் அனுப்புகிறீர் ரீ.ஆர்.கே தொழிற்சாலைக்கு?

அண்ணைமாரே அன்புடைய தம்பீமாரே நான் மீளவும் சொல்கிறேன், இத்தகைய வேலையை ஜெயதேவன், இராமராஜ் மற்றும் உங்கட கருணா, அந்தக் கும்பல் இந்தக் கும்பலென வையுங்கோ! அவர்கள் ரொம்பப் பெரிய புள்ளிகள்.

நான் பட்டுணிப் பானை திறக்க எட்டரை மணிவரை உடலைப் பஞ்சு பண்ணும் பரதேசி.

எனக்கு உளவாளி. தகவல் கொடுப்பவன் என்று பெரிய பதவிகளைத் தராதேங்கோ அண்ணமாரே!

சின்னமடுவடியில மாடுமேய்த்தவனுக்குப் போய் மகிந்த ராசபக்சாவின் வீட்டில் நாமத்தைத் தேடுகிறீர்களே.

சேரியில போய் கேட்டால் சேருமெல்லோ நல்ல சேதி.

அதைப் போய் செய்யுங்கள். அதற்கு முதல் சொல்லுங்கள் எனக்கு ஏன் துரோகிப் பட்டம்?

இதற்காக:

"பிரபாகரன் பயங்கரவாதி-பாசிசவாதி-மோடன் எண்ட திட்டுக்கோ?"

அப்படியெண்டாத் தாங்கோ அந்தப் பொன்னான பட்டத்தை!

...............................

"கருணாநிதி துரோகி,

கடைந்தெடுத்த பாசிஸ்ட்

சுயநலவாதி,"(மோடனென்று நான் சொன்னால் நானொரு மோடன்);" கிழடன், வாரீசு அரசியல் வாதி! எப்படித் திட்டினாலும் எனக்கு உயிராபத்து வரவே வராது!

இனிமேல் இருக்கவே இருக்கார் நம்ம உலகத் தமிழர் தலைவர். அவரைத் திட்டித் தீர்க்கவேண்டியதுதாம்.

கடைசியாக:

"ப.வி.ஸ்ரீரங்கன் என்ற மாற்றுக்(?!)கருத்தாளர், புரட்சியை நேசித்த(?)தோழர் பாசிசப் புலிகளால்; :-)பாடையில் போனார்" என்ற பெரும் பதவியைத் தராதேங்கோ!

அதற்கு நான் கொஞ்சமும் அருகதையற்ற கற்றுக் குட்டி.

அது சொல்லியா தெரியவேண்டும்? இந்தப் புலம்பலே போதாதா- எண்டுறீர்களா? சரி, சிரி-சிந்தி!

ப.வி.ஸ்ரீரங்கன்

31.05.2006

நடுச்சாமம்:2.11மணி.

இங்கேயுள்ள தொடுப்பில் நீங்கள் பதில் கருத்துக்களைப் பார்வையிடலாம்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது