அசுரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோழர் ரயாகரன் தமிழரங்கம் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருவது நாம் அறிந்ததே. தோழரின் தமிழ் சர்க்கிள் என்ற தளத்தில் சிந்தனையை தூண்டும் பல்வேறு கட்டுரைகள், புரட்சிகர பாடல்கள், உரைகள், வீடியோக்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிகைகளின் இணைய பதிப்புகள் ஆகியவற்றை பராமரித்து வந்தார். தமிழ் புரட்சிகர சிந்தனைகளின் களஞ்சியமாக இருந்தது அந்த தளம்.

இந்த தளத்திலுள்ள பல்வேறு குறைபாடுகளை களைந்து கொண்டு முற்றிலும் புதியதொரு தளத்தை வடிவமைக்க சமீப காலமாகவே தோழர் முயன்று வந்தார். அதற்க்கு எதுவும் உருப்படியான பங்களிப்புகள் செய்ய வக்கறவனாக இருந்தது வெட்கமடையச் செய்கிறது.

 ஆயினும் அந்த முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. தோழருக்கும், இந்த தள வடிவமைப்பு, பராமரிப்பில் பங்கெடுத்துள்ள முகம்/பெயர் தெரியா தோழர்களுக்கும்/நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

புதிய தளம் இங்கே சொடுக்கினால் வரும். பார்த்து விட்டு தோழர் ரயாகரனிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆலோசனைகளை வழங்குங்கள்.

தமிழ்சர்க்கிள் தனது பழைய மஞ்சளும், சிகப்பும் கலந்த பழமையை உணர்த்தும் வண்ணப் பின்னணியிலிருந்து விடுவித்துக் கொண்டு விட்டது. புதிய உலகின் சிந்தனைகளை பரப்பும் களமாக அடர் சிகப்பில் ஆழ்ந்து யோசிப்பது போல இருக்கிறது இப்பொழுது.

தளத்தின் இலச்சினை படமும் கூடசிகப்பு பின்னணியில் வண்ணமயமாக நவீனமாக உள்ளது. தலைப்புக்கு கீழே புதிய ஜனநாயகம், சமர் உள்ளிட்ட பத்திரிகைகளின் லிங்க கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

புகைபடத் தொகுப்பு பகுதியில் படங்களின் மீது அம்புக்குறி சென்றால் பெரிதாக வருமாறு கொடுத்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

தளத்தின் மேல் பகுதியில் படங்களை ஓடவிட்டுள்ளது நல்ல உத்தியாக மட்டும் இல்லாமல் அவை சிந்தனைகளை தூண்டும் விதமாக பல்வேறு வரலாற்று சம்பவங்களை நினைவுகூறும் முகமாக உள்ளன. படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படங்களை இன்னும் பெரிதாக தெரியத் தரலாம். உலாவியோர் உலவுவோர் பகுதி மொத்தமே இரண்டு வரிகள் வருகிறது அதற்கு வலது கை பக்கத்தில் மொத்த பட்டையையும் ஒதுக்கியுள்ளது தேவையின்றி இடப் பற்றாக்குறையை தோற்றுவிக்கிறது.

புகைப்படங்களை ஓட விடும் மேல் பகுதியிலேயே வலது கை பக்கத்தில் உலவுவோர் விவரங்களை தந்து விட்டால் தளத்தின் முக்கிய பகுதிக்கு அதிக இடம் கிடைக்கும். புகைப் படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படத்தின் அளவை அதிகப்படுத்தவும் இடம் கிடைக்கும்.

தலைப்பு பட்டையில் தமிழ் அரங்கம் என்ற எழுத்துப்படைக்கு வலது பக்கத்தில் மேற்கோள்கள் வருகின்றன. அவற்றின் பின்னணி வெண்மை நிறத்தில் உள்ளது மாறாக 'தமிழ் அரங்கம்' என்று எழுதப்பட்டுள்ள எழுத்துப்படையின் வண்ணத்தையே இதற்க்கும் பின்னணியாக கொடுத்துவிட்டு எழுத்தின் நிறத்தை வெண்மையாக மாற்றி தந்தால் தளம் பார்ப்பதற்க்கு இன்னும் மெருகேறியிருக்கும்.

வலது இடது பக்கங்களில் அதிக இடம் ஒதுக்கி தளத்தின் செய்திகள் இடம்பெறும் பகுதியை சுருக்கி கொடுப்பது சரியில்லை என்பது எனது கருத்து. பக்க பகுதிகள் என்பது முடிந்தளவு சுருக்கப்பட்டு முடிந்தால் அவை முழுவதுமாக எடுக்கப்பட்டு முழு இடமும் உபயோகப்படுத்தப்படுவதே சரி என்பது எனது கருத்து மட்டுமல்ல, முதலாளித்துவ தளங்கள் யாவற்றை பார்த்தாலும் கூட அவை இது போன்ற வடிவங்களையே பயன்படுத்துகின்றன.

அது போன்ற வடிவம் தளம் குறித்து உருவாகும் முதல் அபிப்ராயத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு ஆற்றும்.

இணைப்புகளின் மீது அம்புக் குறியை கொண்டு சென்றாலோ அல்லது காப்பி சார்ட்கட் செய்தாலோ அதில் வருவது புரியாத தமிழ்சர்க்கிள் லிங்காக உள்ளது. மாறாக நேரடியாக அந்தந்த தளங்களின் முகவரி கிடைக்கப் பெறுமாறு செய்வது சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.

பழைய பதிவுகளை பார்க்க ஆர்செவ் பகுதி சேர்க்க வேண்டும். வேறு தளங்களின் பதிவுகளை தமிழ்சர்க்கிளில் இடும் பொழுது குறிப்பிட்ட பதிவரின் பெயர் வருவதில்லை இந்த குறை களையப்பட வேண்டியுள்ளது. மேலும் பெயரிலோ அல்லது வேறேதாவது இடத்திலோ கிளிக்கினாலே ஒரிஜினல் பதிவின் தளத்திற்கு செல்லுமாறு செய்தால் சிறப்பாக இருக்கும்.

பழைய தமிழ்சர்க்கிள் தளத்தில் சில லிங்குகள் வேலை செய்யவில்லை. ஒருவேளை தள மாற்றம் நடைபெற்று வருவதால் ஏற்ப்பட்ட பிரச்சினையா தெரியவில்லை.

கீழே மார்க்ஸிய மூலவர்களின் படம் உள்ள படம் உள்ளது அந்த படம் இடம் பெற்றுள்ள பகுதி சரியாக இல்லை என்று தோன்றுகிறது. ஒன்று கீழே இறக்க வேண்டும் அல்லது வேறேதாவது செய்ய வேண்டும்.

தளப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றே கருதுகிறேன். நாகாசு வேலைகள் முழுமை பெற்ற பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர் ரயாகரன்.....

தோழமையுடன்,
அசுரன்

 

http://poar-parai.blogspot.com/2008/05/blog-post_21.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது