January 2018
Written by தமிழரங்கம்
|
Sunday, 07 January 2018 08:42
அரசியல்_சமூகம்
/ விருந்தினர்
|
பெற்றோர்கள் கவனத்திற்கு
ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன.
பிள்ளைகள் நிறைய இருந்தபோது தாம் செய்ய வேண்டிய வேலைகளைத்தாமே செய்து அவை தாமாகவே வளர்ந்தன. தாமே அனுமதிக்கப்பட்டதால் அவற்றுக்குப் பொறுப்புகளும் கடமைகளும் கற்பிக்கப்பட்டன. ஆனால், இன்று பத்து மாத கர்ப்ப காலத்துக்குப் பின்னரும் வயிற்றில் சுமப்பதைப் போலவே அங்கே இங்கே அசையவிடாமல் இறுக்கிப் பிடிக்கிறோம். தலையை ஒருவரும் கால்களை ஒருவருமாகப் பிடித்து இழுத்து வதைப்பதைத் தான் வளர்ச்சி என நினைத்துக்கொள்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், அதுதான் பாசம், பற்று, அன்பு என்றும் நம்புகிறோம்.
Read more...
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 05 January 2018 06:45
புதிய கலாச்சாரம்
/ 2017
|
ஒரு குறிப்பிட்ட துறையில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அனுமானிக்கும் ஆற்றலை, கடந்த கால மற்றும் நிகழ்கால மின் தரவுகளைப் பகுத்தாய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிக் கணினிகள் பெறுகின்றன. குறிப்பிட்ட விதத்திலான சூழ்நிலைகள் தோன்றாத வண்ணம் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆற்றலையும் இத்தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
தரவுகளை அலசுவது – தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பது – முடிவுகளை அமல்படுத்தி அதன் விளைவுகளை பரிசோதிப்பது – அதன் அனுபவங்களை மின் தரவுகளாகச் சேகரித்து, மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மேலும் துல்லியமான முடிவை எடுப்பது – மீண்டும் அமல்படுத்துவது என்கிற செயல்பாட்டுச் சுழற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு மேலும் மேலும் துல்லியத்தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
மீண்டும் மீண்டும் நிகழும் இந்தப் பகுத்தாயும் போக்கானது பின்வரும் நான்கு முக்கியமான கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
Read more...
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 02 January 2018 07:45
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.
பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம் அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.
Read more...
|
|
|