December 2017
Thursday, 28 December 2017
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 28 December 2017 07:34
புதிய கலாச்சாரம்
/ 2017
|
அவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றவர் – நெருங்கிய உறவினர். வழக்கமாக உற்சாகமான ஒரு துள்ளலுடன் வருகிறவர், இன்று இறங்கிய தோள்களுடன் கருத்த முகத்துடன் வந்திருந்தார். நிறைய புகைத்திருப்பார் என்று தெரிந்தது – அவரோடு கை குலுக்கிய பின் எனது கையிலும் புகையிலையின் தீய்ந்த வாடை தொற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமண அழைப்பு கொடுக்கத் தான் வந்திருந்தார்.
அவரது சோர்வுக்கு என்ன காரணம் என்று விசாரித்தேன். அவரது நிறுவனம் தன்னை திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (Performance Improvement Plan) சேர்த்திருப்பதாகச் சொன்னவர், ஒருவரை வேலையை விட்டுத் தூக்குவதற்கு முன் செய்யப்படும் கண் துடைப்பு தான் இந்த திட்டம் என்றார். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம், இரண்டு மாதத்தில் வேலை இழப்பு. பெண்ணுக்கும் அவரது வீட்டாருக்கும் விசயத்தை சொல்லி விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். வேலை இழப்புக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயன்றேன்.
Read more...
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 18 December 2017 06:36
அரசியல்_சமூகம்
/ விருந்தினர்
|
என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிரமலை கள்ளர் சாதியை சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் செல்ல மகள். எது கேட்டாலும் என் அப்பா வாங்கிக் கொடுப்பார்.
Read more...
|
Last Updated ( Monday, 18 December 2017 06:45 )
|
|
Wednesday, 13 December 2017
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 13 December 2017 07:34
புதிய கலாச்சாரம்
/ 2017
|
சுமார் ஐந்து அல்லது ஆறு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே மனித மூளையின் திறன் கொண்ட இயந்திரம் ஒன்றை உருவாக்குவது குறித்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் துவங்கி விட்டன. இந்த முயற்சியில் குறுக்கிட்ட பல்வேறு தோல்விகளையும் தடைகளையும் கடந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து வந்தன.
அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்குமான பனிப்போர் உச்சமடைந்திருந்த சமயத்தில், ரசிய மொழியில் இருந்த இரகசிய ஆவணங்களை இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்ய “தானியங்கி மொழிக் கையாள்கை ஆலோசனைக் குழு” (ALPAC – Automatic Language processing committee) ஒன்றை அமெரிக்கா அமைத்தது.
Read more...
|
|
Wednesday, 06 December 2017
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 06 December 2017 06:33
புதிய கலாச்சாரம்
/ 2017
|
முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், யூடியூப் போன்ற காணொளி அலைபரப்பும் தளங்களும், இவற்றையொத்த சேவைகளை வழங்கும் இணையதளங்கள் அனைத்தும் மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் இயங்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட சமூகவலைத்தள ஊடகத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் தனக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவத்தை (Personalised experience) அடைவதை இத்தொழில்நுட்பம் உத்திரவாதப்படுத்துகின்றது. சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளின் வருமானமே பயனர்கள் அடையும் “தனிப்பட்ட அனுபவத்தை”த்தான் அச்சாணியாகக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் இல்லை. தங்களது வருமானத்திற்கு இந்த நிறுவனங்கள் விளம்பரங்களையே நம்பியிருக்கின்றன. சாதாரண விளம்பரங்களுக்கும் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளில் வருவதைப் போல இணையத்தில் பயனர்கள் அனைவருக்கும் பொதுவான விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளம்பரங்கள் தெரிகின்றன. ஒரு குறிப்பிட்ட பயனரின் விருப்பம் என்ன, அவரது செலவழிக்கும் ஆற்றல் என்ன. எந்த பொருளை என்ன விலையில் எப்போது வாங்குவார் என்பது வரை துல்லியமாக மதிப்பிட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
Read more...
|
Last Updated ( Wednesday, 06 December 2017 06:40 )
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 04 December 2017 08:14
புதிய கலாச்சாரம்
/ 2017
|
அம்பானி நட்டமடைந்து விட்டார் என மெல்லப் புலம்புகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடி லாபம் ஈட்டாததோடு கடந்த 2017, மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 22.50 ஆயிரம் கோடி நட்டத்தை சம்பாதித்துள்ளது என்கின்றன ஊடகங்கள். தொலைத் தொடர்புத் துறையின் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொள்ள வேண்டும் என்கிற அம்பானியின் கனவு மெல்லக் கலைந்து வருவதாக சில பொருளாதார ஆய்வாளர்கள் ஆருடம் கூறத் துவங்கி விட்டனர்.
எனினும் முகேஷ் அம்பானி தனது இலவசங்களை நிறுத்தவில்லை; தொடர்ந்து இலவச டேட்டாக்களை அள்ளி வீசி வருகிறார். இந்தக் காலாண்டின் துவக்கத்திலிருந்து தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதாக சொல்லிக் கொண்டாலும்,”கட்டணம்” என்ற பெயரில் சோளப் பொரியை வாங்கிக் கொண்டு யானை மந்தையையே கொடுக்கிறார் அம்பானி. ரிலையன்ஸ் நட்டமடைந்திருப்பதாக ஊடகங்கள் சொன்னாலும், ஏர்டெல் வோடஃபோன் போன்ற போட்டியாளர்களின் பீதி குறையவில்லை – ரிலையன்ஸ் ஜியோவுக்கு சற்றும் குறையாத அளவில் டேட்டாக்களை வாரி வழங்கி வருகின்றனர்.
Read more...
|
Last Updated ( Monday, 04 December 2017 08:22 )
|
|
Saturday, 02 December 2017
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 02 December 2017 03:57
புதிய ஜனநாயகம்
/ 2017
|
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
***
பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.
முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Saturday, 02 December 2017 04:12 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 01 December 2017 05:37
அரசியல்_சமூகம்
/ கருணாகரன்
|
கிளிநொச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள்! (காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி)
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிந்த ராஜபக்ஸதான் தோற்கடித்தார் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். இல்லையில்லை, இலங்கைப் படைகளே புலிகளைத் தோற்கடித்தன என்று சிலர் சொல்லலாம். சர்வதேச சமூகமே புலிகளைத் தோற்கடித்தது என்று சொல்வோரும் உள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்.
இந்தச் சக்திகளின் மூலமாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது முதலாவது கட்டமென்றால், இரண்டாம் கட்டமாகப் புலிகள் தோற்கடிக்கப்படுவது தமிழ்த்தரப்பினால். தமிழ் (தேசிய முலாம் புசப்பட்ட) அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசங்களில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள், தமிழ் ஊடகங்கள், அதில் பெரும்பணியாற்றும் ஊடகவியலாளர்கள், புலம்பெயர்தோர்களில் ஒரு தொகுதியினர்... என்று ஒரு பெரிய கூட்டம் இதிலுண்டு.
Read more...
|
Last Updated ( Friday, 01 December 2017 05:41 )
|
|
|