July 2014
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 16 July 2014 14:38
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 06
|
இனரீதியான ஒடுக்குமுறையை, அதே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இனரீதியாக எதிர்கொள்வது சரியானதா!? இது இனவொடுக்குமுறைக்கு தீர்வைத் தருமா? இனரீதியாக ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை ஆராய்ந்து அதற்கு எதிராக போராடுவதற்கு பதில், இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற இனவாத அரசியல் தவறானது. இது அதே இனவாதத்தைப போற்றி தனதாக்குவதுடன், ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை பாதுகாக்கின்ற படுபிற்போக்கான அரசியலாகி விடுகின்றது.
Read more...
|
Last Updated ( Wednesday, 16 July 2014 14:44 )
|
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 09 July 2014 13:12
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.
அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...
Read more...
|
Last Updated ( Wednesday, 09 July 2014 13:18 )
|
|
|