Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
January 2014

Wednesday, 29 January 2014

ஆசியாவின் ஆச்சரியம்! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 29 January 2014 13:41
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 08

விடைபெற்றுச் செல்லும் 2013 புதிய செய்திகளையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு விடைபெற்றுச் செல்கிறது. இலங்கையிலே CHOGMஒரு சர்வாதிகாரத்திற்கு மகுடம் சூட்டியதோடு அதற்கான செலவை நாட்டு மக்களின் தலையில் சூடிவிட்டு நடையைக் கட்டிவிட்டது. அனைத்து சர்வாதிகார, முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களும், காலனித்துவ எஜமானர்களும் ஆசி வழங்கி விட்டு சென்று விட்டார்கள்.


களியாட்டங்களில் குதூகலித்த மக்கள், செய்த தவறுக்காக தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தேர்தலை நடத்தும் ஒரே நாடான இலங்கையின், வடக்கு மக்கள் தாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். அரசாங்கமோ தேர்தலை கொடுத்தது. இனவாதம் நன்றாகவே விலைபோன தேர்தலில் அதிகார வர்க்கத்தோடு இன்னொரு குழுவையும் மக்கள் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது தங்களை ஆள்வது யார் என்று தெரியாத நிலையில் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் ஆள்கிறதா, ராஜபக்ஷ ஆள்கிறாரா அல்லது விக்னேஸ்வரன் குழு ஆள்கிறதா என்பதை தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

Read more...
Last Updated ( Wednesday, 29 January 2014 13:44 )


Friday, 24 January 2014

யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 24 January 2014 10:18
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

Read more...
Last Updated ( Friday, 24 January 2014 10:24 )


Tuesday, 21 January 2014

மீண்டும் ஜெனீவா மீட்டுத்தருமா எம் உரிமைகளை? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 21 January 2014 14:15
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 03

இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.

Read more...
Last Updated ( Tuesday, 21 January 2014 14:18 )


Wednesday, 15 January 2014

வட-கொரியா மீதான அமெரிக்காவின் மிரட்டலும், அதன் பின்னணியும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 15 January 2014 13:25
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

கடந்த பத்து வருடகாலத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல வழிகளிலும் நலிந்த நிலையை அடைந்து வருகிறது. உலகம் இரு அரசியற் துருவங்களாகப் பிரிந்திருந்த, சோவியத் வீழ்ச்சியடைந்த 1990கள் வரையான காலகட்டம் வரை, அமெரிக்கப் பொருளாதாரமும் அதன் வளர்ச்சியும் மேற்படி "இரு அரசியற் துருவ" அடிப்படையிலேயே திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு மற்றும் யுத்தம் சார்ந்த ஆயுத உற்பத்தியும், தொழில் நுட்பமும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்தன. NATO ஒப்பந்தம் ஊடாக மேற்கு ஐரோப்பிய கூட்டாளி நாடுகள், தென்-அமெரிக்க மற்றும் சில ஆசிய, ஆபிரிக்க அடிவருடி நாடுகள் அமெரிக்காவின் ஆயுத - தளபாட மற்றும் யுத்தம் சார் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வதன் மூலம் அதன் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்தன.

Read more...
Last Updated ( Wednesday, 15 January 2014 13:36 )


Tuesday, 14 January 2014

சிதம்பரம் சொல்வதெல்லாம் பொய்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 14 January 2014 07:07
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

பொய் சொல்லக் கூடாது என்று ஒளவைக்கிழவி பாடினாள். குழந்தைகளை பொய் சொல்லக் கூடாது என்று பாடிய அவள் இன்றைக்கு ஏழு கழுதை வயதில் சிதம்பரம் சொல்லும் பொய்களிற்கு கையிலிருக்கும் தடியால் சிதம்பரத்தின் மண்டையைப் பிளந்திருப்பாள். இந்தியாவின் நிதியமைச்சர், இலங்கைத் தமிழ்மக்களின் இனப்படுகொலை நடந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகுவின் பச்சைப்பொய்யைப் பாருங்கள்.

 

"இறுதிக் கட்டப்போரின் போது இந்தியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிரோடிருந்திருப்பார் என இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்" என்று சிதம்பரம் கூறினார்.

 

 

Read more...
Last Updated ( Tuesday, 14 January 2014 07:09 )


Thursday, 09 January 2014

ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 09 January 2014 13:45
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.

Read more...
Last Updated ( Thursday, 09 January 2014 13:46 )


Friday, 03 January 2014

முடிந்தால் கதையுங்கள்........? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 03 January 2014 08:19
அரசியல்_சமூகம் / நிலாதரன்

ஏதோ தெரியவில்லை நல்ல நிகழ்வுகளுக்காகவும், கெட்ட நிகழ்வுகளுக்காகவும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இப்ப அடிக்கடி கிடைத்து வருகின்றது. திடீரென எடுத்த முடிவின் பிரகாரம் அம்மாவின் திவசத்துக்காக போன கிழமை ஊருக்குப் போய் வரும் ஒரு பாக்கியம் கிட்டியது. ஒரு குறுகிய சில நாட்கள் தான் நின்றாலும் அங்கே என்னைத் தாக்கிய, என்னை உறுத்தி வருத்திய ஒரு விடையம் சம்பந்தமாக இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டே இதை எழுதுகிறேன்.

எங்கடை மக்களை ஒரு வகையிலும் நிமிரவிடாமல், ஏதோ சொல்ல முடியாத சுமைகளையும் துன்பங்களையும் கொடுத்து அவர்களை இன்னும் அடிமைகள் போல் அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் செய்கின்ற வேலைகளையும், விசமங்களையும் கேள்விப்பட்ட போது எங்களுடைய மக்களின் அறியாத்தனங்களையும் எண்ணி கவலைப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.

Read more...
Last Updated ( Friday, 03 January 2014 08:24 )