June 2013
Written by தமிழரங்கம்
|
Sunday, 30 June 2013 17:40
அரசியல்_சமூகம்
/ நிலாதரன்
|
அவன் எந்த நாளும் ஒரே குடிதானே, ஏதோ ஈரலிலே தான் பிழையாம், சீ சீ.... அவனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலாப் போச்சாம், ஏற்கனவே ஆளுக்கு நல்ல சுகர் வருத்தமுமாம், அதோடை கைப்பிறஸர்... எண்டும் குளஸ்ரோல் எண்டும் சொல்லினம்... இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள்.
ஆனா... எது உண்மை, எது பொய்யெண்டு ஒருத்தருக்கும் சரியாகத் தெரியாது. ரவீந்திரனை கொஸ்பிற்லிலே விட்டிருக்காம் என்ற சேதி கேள்விப்பட்ட பிறகு இந்தச் தமிழ்ச் சனங்கள் மத்தியிலே இப்ப இது தான் பெரிய கதை.
தனித்து ஒரு விசேட பிரிவிலே அனுமதிக்கப்பட்டிருந்ததால் பார்வைக்காக ஒருத்தரும் அனுமதிக்கபடவில்லை. என்னுடைய மகனோடு தான் கதைக்க அனுமதிக்க வேண்டும் என்ற ரவியின் விருப்பத்தின் பேரில் மகன் சுரேந் இன்று வந்திருந்தான்.
ஆஸ்பத்திரி அலுவலகத்தில் வந்து விசாரித்த போது தகப்பன் விடப்பட்டிருக்கும் புதிய பிரிவு பற்றி அறிந்த போது அவனுக்கு கிடைத்த தகவல்கள் பெரிய ஆச்சரியத்தையும் அதிற்சியையும் கொடுத்தது.
அப்பாவை ஏன் இங்கு கொண்டு வந்து விடவேண்டும் என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு வைத்தியப் பிரிவுகளின் வழிகாட்டி அம்புக்புறியைப் பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
Read more...
|
Last Updated ( Thursday, 04 July 2013 06:20 )
|
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 29 June 2013 15:16
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
ஒடுக்கப்பட்ட இனத்தின் மேலான அனைத்துவிதமான பாசிச கெடுபிடிகளைக் கடந்து "மாணவர் குரல்" என்ற புதிய பத்திரிகை ஒன்று பல்கழகங்களில் இருந்து வெளியாகி இருக்கின்றது. இலங்கை பல்கழகங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள் சமூகம் புதிய ஒரு சமூக தேடுதலுடன், தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அது "தமிழ் பேசும் மாணவர்களின் தேசிய குரலாய்" "மாணவர் குரல்"பத்திரிகை என்று தன்னை பிரகடணம் செய்து இருக்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 04 July 2013 06:20 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 19 June 2013 16:50
அரசியல்_சமூகம்
/ மாணிக்கம்
|
உப்பினில் மீனினம்
உப்பியே காய்கின்ற
வெம்மணற் கரையோரம்..,
மரக்கலம் தனித் தனி
அலையுடன் மோதிய
Read more...
|
Last Updated ( Saturday, 29 June 2013 15:17 )
|
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 15 June 2013 16:18
அரசியல்_சமூகம்
/ விஜயகுமாரன்
|
தெருவில் போகும் ஒரு மனிதனை கொன்று விட்டு அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொல்லப்படும் முஸ்லீம் மக்களிற்காக பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என வெட்டிய கத்தியை இறுக்கிப் பிடித்தபடி குருதி வழிந்தோடும் கைகளை உயர்த்தியபடி குழந்தைகள் பள்ளி விட்டு வரும் தெருவில் நின்று கொண்டு வெறியாட்டம் ஆடியவர்கள் நிச்சயமாக போராளிகளாக இருக்க முடியாது. அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள். உலகெங்கும் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களை இவர்களைப் போன்றவர்கள் இத்தகைய வெறிச்செயல்களின் மூலம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்குள் தள்ளி விடுகிறார்கள். ஒடுக்குகின்ற ஆதிக்கசக்திகளிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற எதிரியை தொடர்ந்து கட்டமைத்து கொள்ள துணை போகிறார்கள்.
Read more...
|
Last Updated ( Saturday, 15 June 2013 16:23 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 14 June 2013 07:52
சமகால நிகழ்வுகள்
/ இன்றைய பக்கங்கள்
|
முதலில் இடம் பெற்ற அரச சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணையின் போது, மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவையும் சாட்சியாக பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே மன்றில் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியிட்டுள்ள தனியார் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவரையும் சாட்சிகளாக பதியுமாறும் கோரிநின்றார். அதேவேளை, அவ்விருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார் என்பதனால் அவரையும் சாட்சியாக பதியுமாறு சட்டத்தரணி கோரி நின்றார்.
Read more...
|
Last Updated ( Friday, 14 June 2013 08:43 )
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 11 June 2013 12:54
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 01
|
மனிதனின் தேவைகளில் லலித் காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காய் கடத்தப்பட்டார். உலக நாகரீகங்கள் மனிதனை நன்றாக வாழ்வதற்காகவே நாள்தோறும் மாறி வருகின்றன. மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது.
Read more...
|
Last Updated ( Tuesday, 11 June 2013 13:05 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 07 June 2013 16:15
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 01
|
காத்திருப்போம்!
புரட்சியாளர்கள் அதுவரை
விளைவர் விடுதலை வீரர்கள்
Read more...
|
Last Updated ( Monday, 10 June 2013 20:23 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 05 June 2013 12:44
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 01
|
இலங்கைக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. புதை குழிகள் காரணமாக அரசாங்கங்கள கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. புதைகுழிகளினாலேயே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் உண்டு. இந்த மண்ணில் இன்னும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமுள்ளன.
Read more...
|
Last Updated ( Friday, 07 June 2013 11:56 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 03 June 2013 11:49
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 01
|
"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"
கேள்வி யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?
ஜுட்:வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.
Read more...
|
Last Updated ( Monday, 10 June 2013 20:30 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 02 June 2013 09:41
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013
{play}http://www.tamilcircle.net/audio/Ilakkiya_london_raya/Ilakkiya_raya2.mp3{/play} Read more...
|
Last Updated ( Sunday, 02 June 2013 10:04 )
|
|
|