கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.
நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான் இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும்.
Read more...
|