Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 14 September 2017
புத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 14 September 2017 06:27
அரசியல்_சமூகம் / விருந்தினர்

செப்ரம்பர் 09 2017இல் 60வது நாளாக கலைமதிக் கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றக்கோரும் போராட்டம் தொடர்கின்றது. இப்போராட்டத்தை புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி முன்னெடுத்து வருகின்றது. இக்கிராமத்தில் வாழ்பவர்கள் பள்ளர் சமூகத்தவர்கள். சிறுப்பிட்டி கிந்துசிட்டியில் உள்ள 200 வருட பழைமையான இம்மயானம் பெரும்பாலும் அங்குள்ளவர்களால் கைவிடப்பட்ட ஒரு மயானம். மக்கள் குடியிருப்புக்கள் உருவான பின்னர் இந்த மயானம் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கவில்லை. 2017 மார்ச் 8 இல் ஒரு உடலைத் தகனம் செய்ய முற்பட்ட போது ஆரம்பித்த பிரச்சினை தற்போது மிகப் பூதாகரமாக உருவெடுத்து உள்ளது. இது கிந்துசிட்டி மயானத்தையும் தாண்டி> ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவும் உருவாக்கி உள்ளது. மேலும் யாழ் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானங்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியையும் இப்போராட்டங்கள் எழுப்பி உள்ளது.

Read more...