இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் வெற்றியடைந்து சில காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. ஆனாலும் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி திரையிட்ட அரங்கங்களுக்கு கொலை மிரட்டல், தீ வைப்பதான மிரட்டல்கள் மூலம் திரையிடுவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்கள், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டோர், மேற்படி இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவுமில்ல. அதற்கு அவர்களுக்கு திடனுமில்லை. மாறாக, இனவாதிகளுக்கு எதிரானவர்கள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலர் சென்னையில் இருந்து கொண்டு, எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுகின்றனர். கண்டது, நிண்டதுக்கெல்லாம் தமிழ் நாட்டு இலக்கிய வாதிகளுடன் இணைந்து அறிக்கை விடும் கும்பல்கள் இப்போ எங்கே போனது!
Read more...
|