பல்கலைக்கழக மாணவர்கள் ராஜபக்ச அரசின் நவதாரளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை மிக நீண்ட நாட்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த அரசு போராடும் மாணவர்கள் மீத பல அழுத்தங்களை பிரயோகித்து மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்க தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கின்றது. இனந்தெரியாத நபர்களை மாணவர்களின் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரை மிரட்டுவது முதல் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவது பல்கலைக்கழக பிரதேசங்களிற்கு அருகில் வருவதனை தடை செய்வது வரை அனைத்து பாசிச அடக்குமுறைகளையும் தொடந்து கொண்டிருக்கின்றது.
Read more...
|