"மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். இன்று அப்படித்தான். உழைப்பிற்கான பொது உடமையின்றி தனிமைப்பட்டுப் போன விஞ்ஞானமும், ஆய்வுகூடத்தில் கண்டறியும் நுட்பக் கருவி சார்ந்த அறிவும் கூட, கூட்டு உழைப்பில் மட்டும் தான் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த முடியும்."
உழைத்து வாழும் ஒவ்வொருமனிதனும் உழைப்பைச் செலுத்தும் போது, உழைப்புக்கு உள்ளாக்கும் பொருட்கள் பற்றிய அறிவைக் கொண்டிருக்கின்றான். இந்த அறிவு தான் விஞ்ஞானம். இந்த உழைப்புத் தான் விஞ்ஞானத்தின் மூலம். இரண்டையும் ஒன்றிலிருந்து வேறொன்றாகப் பிரிக்க முடியாது. உழைப்பும் அறிவும் இணைந்தது தான் விஞ்ஞானமாகவும், மனித வாழ்வுக்கான அடிப்படையாகவும் இருக்கின்றது.
Read more...
|