தம் மழழை செல்வங்களை நினைத்தப்படி வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ ஆக்கிட முடியாவிடினும் கனவேனும் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த பட்ச கல்வி அறிவையேனும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் கல்வி இலவசமாக கிடைப்பதாகும். ஆனால் தொடர்ந்து நிலைமை இப்படியே இருக்க போவதில்லை. அரசு இது வரை இலவசமாக வழங்கி வந்த கல்வியை மெல்ல மெல்ல தனியார் கைகளில் ஒப்படைத்து வருகின்றது. எதிர் காலத்தில் பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் பிள்ளைகள் கல்வி கற்க முடியும்என்ற நிலை உருவாகி வருகின்றது.
இதனை பெற்றோர்கள் தற்போதும் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். வீட்டில் உயர்தரம், சாதாரணதரம் அல்லது புலமை பரீசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு இது தொடர்பான நல்ல அனுபவம் இருக்கும். தனியார் வகுப்புக்களுக்கு சென்றால் தான் நல்ல பெறுபேறுகளை பெற முடியும் என்ற நிலை. மாதாமாதம் ஆயிரக்கணக்கில் மேலதிக வகுப்பு கட்டணங்களிற்காக செலிவழிக்க முடிந்தவர்களாலேயே மேற்படிப்பு பட்டபடிப்பு தொடர்பாக சிந்திக்க முடியும். இதனை தவிர பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களும் அதிகம். தற்போது பாடசாலைகளில் பெற்றோர்கள் சிரமதான பணிகளிலும் ஈடுபட வேண்டியுள்ளது.
தற்போது பெற்றோர்களாக இருப்பவர்கள் மாணவர்களாக இருந்த போது காணப்பட்ட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசங்கள் ஏற்ப்பட்டுள்ளன. முன்பு பாடசாலையில் சீருடைகள், பாடபுத்தகங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டன. உணவு நிவாரண அட்டைகள் வழங்கப்பட்டன. அரச பேரூந்துகளில் பயணிக்க பருவ சீட்டுக்கள் வழங்கப்பட்டன. பாடசாலைகளில் தவணைக் கட்டணமாக வருடாந்தம் சிறு தொகையே அறவிடப்பட்டது. ஆனால் இன்று நிலைமை வேறு. உணவு நிவாரண அட்டை நிறுத்தப்பட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களிற்கு அளவே இல்லை.
Read more...
|