Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 30 June 2013
பாவமன்னிப்புகள்...... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 30 June 2013 17:40
அரசியல்_சமூகம் / நிலாதரன்

அவன் எந்த நாளும் ஒரே குடிதானே, ஏதோ ஈரலிலே தான் பிழையாம், சீ சீ.... அவனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலாப் போச்சாம், ஏற்கனவே ஆளுக்கு நல்ல சுகர் வருத்தமுமாம், அதோடை கைப்பிறஸர்... எண்டும் குளஸ்ரோல் எண்டும் சொல்லினம்... இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள்.

ஆனா... எது உண்மை, எது பொய்யெண்டு ஒருத்தருக்கும் சரியாகத் தெரியாது. ரவீந்திரனை கொஸ்பிற்லிலே விட்டிருக்காம் என்ற சேதி கேள்விப்பட்ட பிறகு இந்தச் தமிழ்ச் சனங்கள் மத்தியிலே இப்ப இது தான் பெரிய கதை.

தனித்து ஒரு விசேட பிரிவிலே அனுமதிக்கப்பட்டிருந்ததால் பார்வைக்காக ஒருத்தரும் அனுமதிக்கபடவில்லை. என்னுடைய மகனோடு தான் கதைக்க அனுமதிக்க வேண்டும் என்ற ரவியின் விருப்பத்தின் பேரில் மகன் சுரேந் இன்று வந்திருந்தான்.

ஆஸ்பத்திரி அலுவலகத்தில் வந்து விசாரித்த போது தகப்பன் விடப்பட்டிருக்கும் புதிய பிரிவு பற்றி அறிந்த போது அவனுக்கு கிடைத்த தகவல்கள் பெரிய ஆச்சரியத்தையும் அதிற்சியையும் கொடுத்தது.

அப்பாவை ஏன் இங்கு கொண்டு வந்து விடவேண்டும் என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு வைத்தியப் பிரிவுகளின் வழிகாட்டி அம்புக்புறியைப் பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

Read more...
Last Updated ( Thursday, 04 July 2013 06:20 )