பேரினவாத அரசு சிறுபான்மை இன மக்களை தனது இனவெறியூட்டிய படைகள் மூலமாக கொலைகள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் முதல் இனப்படுகொலை வரை தனது அடக்குமுறையினை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவற்றினை அரசு, படைகளைக் கொண்டு முன்னெடுப்பதாலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மிக நீண்ட காலமாக பேரினவாதத்திற்கு எதிரான குரல்கள் மற்றும் செயற்பாடுகள் அற்ற நிலையில் எம்முன்னால் ஒட்டுமொத்த சிங்கள இனமுமே எதிரியாக தெரிகின்றது. தமிழ் குறுந்தேசிய அரசியல்வாதிகளும் “சிங்களம் எம்மை அடக்கியாள அனுமதிக்கோம். தகுந்த பதிலடி கொடுப்போம்” என்பன போன்ற இனவெறியூட்டும் கோசங்களை முழங்கி தமது அரசியல் இருப்புக்காக முழுச் சிங்கள மக்களுமே இனவாதிகள் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
Read more...
|