Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 28 May 2013
மின் கட்டண உயர்வு, யாருடைய நலனுக்கானது! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 28 May 2013 13:53
பி.இரயாகரன் - சமர் / 2013

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 20:51 )

குழப்பு குழப்பு நாட்டைக் குழப்பு! -'தம்பி" யை நாட்டிலிருந்து விரட்டு! இறைச்சிக் கடையை மூடு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 28 May 2013 12:27
அரசியல்_சமூகம் / விருந்தினர்


மாடுகளை கொலை செய்வதை  நிறுத்துமாறு கோரி தனது மேனியில் தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு இறந்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் உடலை பெற்றுத் தருமாறு கோரி அலரி மாளிகையின் முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய , இறைச்சிக் கடைகளை உடைத்ததாகக் கூறும் சிங்கள ராவய ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திலேயே மேற்கூறப்பட்ட கோஷங்கள் ஒலித்தன.

Read more...
Last Updated ( Tuesday, 11 June 2013 12:53 )