பிறப்பால் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது வாழ்க்கை என் கோப்பாய்க் கிராமத்திலுள்ள தேவாலயத்தினைச் சுற்றித்தான் அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதுடன் ஆரம்பித்துப் பின்னர் வாலிபர் சங்கம், ஆலய நிர்வாகம் போன்ற பல மட்டத்திலும் சமூகம் எதிர்பார்த்த மாதிரி வாழவும் தொடங்கினேன். 1970களின் கடைசிப் பகுதியில் எமது ஆலயத்தில் கடமையாற்றிய மதகுருவும் அதற்குக் காரணம். அவரின் தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் மற்றைய மதங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொள்ளும் பண்பும் என்னையும் அவற்றில் ஈடுபாடு உள்ளவனாக ஆக்கியது.
எனது பெற்றோர்கள் எனது குடும்பத்தில் எவருக்குமே கிறித்தவப் பெயர்களை வைத்ததில்லை. எல்லோருக்குமே தமிழ்ப் பெயரைத்தான் வைத்தார்கள். அதனால் எங்களை யாருமே கிறிஸ்தவர்களாக அடையாளம் காண முடியாது. ஆலய நிர்வாக கமிட்டியில் 16 வயதில் உறுபப்பினராகச் சேர்க்கப்பட்டேன். அதேநேரம் GUES என்ற ஈழ மாணவர் பொது மன்றம் நடத்திய பல அரசியல் வகுப்புக்களிலும் கலந்து கொண்டேன். அந்தக் கால கட்டத்தில் YFC என அழைக்கப்படும் YOUTH FOR CHRIST என்ற கிறிஸ்தவ வாலிபர் சங்கமும் என்னைக் கவர்ந்தது. அது பைபிள் கல்வி, பிரார்த்தனைக் கூட்டங்கள், Born Again Christian என்ற ஆழமாகக் கிறிஸ்தவன் என்றால் என்ன என்று விளக்கமளிக்க மேலும் அவற்றின் மீதும் கவரப்பட்டேன்.
Read more...
|