பாட்டாளி வர்க்க சக்திகள் அரசியற் செயல்தளத்தில் தீர்மானகரமாகத் தலையிடுகின்ற காலத்தில், சுயநிர்ணயம் தொடர்பான இன்றைய பொதுப்புரிதல் அபத்தமாகிவிடுகின்றது. தேசிய இனம் என்ற சொல் பலவித அர்த்தம் கொண்டதாக, முரணாக, முரண்பாட்டை தோற்றுவிப்பதாக இருப்பதால், இது பற்றிய அரசியற் தெளிவு இன்று அவசியமானது. மார்க்சிய லெனினிய மூல நூல்கள் தேசிய இனம் என்ற பதத்தை, தேசங்கள் - தேசிய இனங்கள் - தேசிய சமுகங்கள் - இனக்குழுக்களை குறிக்கவும், இதனடிப்படையில் தனிநபர்களின் தோற்றுவாயை வரையறுப்பதற்கும், தேசிய உறவுகளை விளக்கவும், சிறிய தேசிய பிரிவுகள், சிறுபான்மை தேசிய பிரிவுகள் முதல் மக்களுக்கு இடையிலான உறவுகளை குறிக்கவும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இனம் என்ற சொல், ஒரே அர்த்தத்தைக் கொண்டு பயன்படுத்தப்படவில்லை. பல அர்த்தங்கள் கொடுக்கக் கூடியது. ஒரே அர்த்தம் கொண்டு அணுகினால், ஒன்றையொன்று முரண்படுத்தி விடும். இனங்காட்டக் கூடிய சிறப்பான இயல்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களுக்குரியதே தேசிய இனம் என்ற சொல்.
Read more...
|