இனம்,மதம், நிறம், பால், சாதியம் கடந்த உலகத் தொழிலாளி வர்க்கம் என்ற உணர்வுடன் அணிதிரண்டு போராடும் ஒரு நாள் மே 1. அமெரிக்கா சிக்காக்கோ நகரில் 1886 இல், வேலை செய்யும் நேரத்தை 8 மணியாகக் குறைக்கக்கோரிப் போராடியபோது அதற்காகப் போராடியவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட தினம் மேதினம். அன்று போராடி மடிந்தவர்கள் நினைவாகவும், உலகெங்கும் எட்டு மணி வேலை நேரத்தை முன்வைத்து நடத்திய போராட்டத்தினமாகவும், மே 1 பிரகடனமாகியது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோசத்தை உழைக்கும் வர்க்கம் தனதாக்கியது.
Read more...
|