Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 19 April 2013
ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 19 April 2013 22:38
அரசியல்_சமூகம் / எல்லாளன்

பணப்பிரச்சினைக்குத் தீர்வு

நாம் ஏற்கெனவே வந்த நோக்கங்களில் ஒன்றான பணப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது. அதற்காக நாட்டில் ஏற்கெனவே இருந்த மற்றத் தோழர்களுடன் கதைத்தோம். நாம் எவருமே முன்பு ரெலோவில் இருந்தோம் என்பதைத் தவிர வேறு எந்தவகையான உறவுகளும் நிர்ப்பந்தங்களும் கட்டுப்படுத்தலும் இல்லாத நிலையில் இருந்தோம். ஆனால் இந்தியாவில் இருந்த பெண் தோழிகளின் நிலையினைக் கருதித்தான் அந்தப் பிரச்சனைகள் தீரும் வரை தொடர்ந்து வேலை செய்வதென முடிவெடுத்தோம். அதாவது, யார் விரும்பினாலும் அவர்கள் சொந்த வாழ்க்கைக்குச் செல்லலாம் என்ற நிலையில் இருந்தோம்.

நானும் என்னுடன் வந்த தோழரும் பெண் தோழிகளின் பிரச்சினை முடியும்வரை சேர்ந்து வேலை செய்வதென்ற முடிவில் இருந்தோம். அன்றைய எமது சந்திப்பில் பணத்தை ஏற்பாடு பண்ணிக்கொண்டு திரும்பவும் இந்தியா செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது. எனது நிலைமைகளை வீட்டிற்குத் தெரியப்படுத்தி நான் நாட்டில் இருப்பது நல்லதல்ல என்றும் திரும்பவும் இந்தியா போக முடிவுசெய்து விட்டேன் என்றும் கூறினேன். அவர்களைப் பொறுத்தவரையில் என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும் அது நல்ல முடிவாகவே அவர்களுக்கும் பட்டது.

Read more...
Last Updated ( Saturday, 27 April 2013 12:03 )

சர்வதேச நிதி மூலதனமும், போர்க்குற்றவாளிகளின் நிதி மூலதனமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 April 2013 08:05
பி.இரயாகரன் - சமர் / 2013

இன்று இலங்கையில் சர்வதேசக் கடன் மூலதனமும், போர்க்குற்ற மூலதனமும், ஓரே திசையில் ஒரு புள்ளியில் பயணிக்கின்றது. இந்த வகையில் தனிவுடைமையிலான இன்றைய இலங்கையில் சொத்துடமையை, மீளப் பங்கிடக் கோருகின்றது. இது வைத்திருக்கும் மையக் கோசம் தான் "அபிவிருத்தி". இன்று இலங்கை அரசியலின் மையமானதும், பிரதானதுமான கோசமாக "அபிவிருத்தி" அரசியல் மாறியிருக்கின்றது. தங்கள் நிதி மூலதனத்தையும் முதலிட முனைகின்ற திசையில் தான், யுத்தத்திற்கு பிந்திய சூழலாகும்;. இது மக்களின் சிறுவுடமைக்கு எதிரான, நீதி மூலதனத்தின் யுத்தமாகவுள்ளது.

யுத்தம் நடந்த பிரதேசத்தில் நடந்தேறும் மீள்கட்டுமானம் என்பது, வெறும் இனவாதம் மதவாதம் சார்ந்த கூறாக மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக நிதி மூலதனத்தின் நலன்களே மையப்படுத்தப்பட்டு, அவை முதன்மைப்படுத்தப்பட்டு முன்தள்ளப்படுகின்றது. இதற்கு இனவாதம், மதவாதம் மூலம் கவசமிடப்படுகின்றது. யுத்தம் நடக்காத பிரதேசத்தில் கூட "அபிவிருத்தி" எனும் பெயரில் நடந்தேறுகின்ற அதே நேரம், முஸ்லிம் மதவாதம் பயன்படுத்தப்படுகின்றது.

Read more...
Last Updated ( Friday, 19 April 2013 08:07 )