Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 20 February 2013
மக்கள் ஒன்றிணைவது "தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டமாம்"! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 20 February 2013 12:23
பி.இரயாகரன் - சமர் / 2013

இனவாதிகள் தங்கள் "காயடிப்பு" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில் "சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி!" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் "சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் "பேரினவாத ஆயுதத்துடன்" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை "சுயநிர்ணயத்தை" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக "இந்தப் பாட்டாளி மக்களது கட்சி? புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நிதி மூலங்களும் ஆச்சரியமானதே" என்று இட்டுகட்டிய அவதூறுகளை செய்ய முனைந்திருக்கின்றது. பேரினவாதத்துக்கு எதிராக போராட, பேரினவாதமே பணம் தருவதாக மறைமுகமாக கூற முற்படுகின்றது. கடந்தகாலத்தில் மற்றவன் உழைப்பை சுரண்டி போராட்டம் நடத்திய கூட்டம், சொந்த உழைப்பு சார்ந்து போராடுவதை காணமுடியாது. அது அனைத்தையும் தன்னைப்போலவும், தன் சொந்த நடத்தையைப் போலவும் காணவும் காட்டவும் முற்படுகின்றது

Read more...
Last Updated ( Wednesday, 20 February 2013 13:25 )