Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 06 February 2013
"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 06 February 2013 22:11
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? ஏமாறுவது மக்கள். இதற்கு இனம், மொழி, மதம், சாதி.. எதுவும் பிரிப்பதில்லை. மக்களை ஏமாற்றுவதில் கூட இனம், மொழி, மதம், சாதி பிரித்து இருப்பதில்லை. சுரண்டும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. அந்த வர்க்கம் சார்ந்த ஆளும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. "தமிழன் இன்னுமொரு முறை ஏமாறக் கூடாது" என்பது கூட, தமிழனை தமிழன் ஏமாற்றுகின்றான் என்பதை மறைப்பதற்கு "தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும் மறுப்பதற்குமான தர்க்கமாகும். இதுதான் 60 வருட தமிழனின் வரலாறு.

இந்தவகையில் இன்று யாரெல்லாம் மக்களுடன் இணைந்து போராடுவதை நடைமுறையில் ஒரு வாழ்வாக, உணர்வாக கொள்ளவில்லையோ, அவர்கள் மறுதளத்தில் நின்று கேள்வி கேட்கின்றார்கள். போராடாமல் இருப்பதற்காக, தாங்கள் இருப்பதை நியாயப்படுத்த கேள்வி கேட்கின்றனர். போராட்டத்தைச் சிதைப்பதற்காக கேட்கின்றனர். தங்கள் அறிவைக் காட்டிக் கொள்ள, பிரமுகராக இருக்க கேள்வி கேட்கின்றனர். போராடியபடி கேட்கவும், கேட்கப்படவும் வேண்டிய கேள்வியில் இருந்து இவை வேறுபட்டவை. எந்தக் கேள்வியையும் மக்களுக்காக போராடியபடி கேட்பதே உண்மையான ஒரு அரசியல் வேலைமுறை.

Read more...
Last Updated ( Wednesday, 06 February 2013 22:12 )