"நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்" லெனினின் இக் கூற்றுப் போல், நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டுரீதியாக பதில் சொல்லும். நடைமுறை ஒன்றாக, கோட்பாடு வேறொன்றாக இருக்க முடியாது. நடைமுறை மூலம் உருவாகும் வர்க்க சக்திகள், வேறு வர்க்க சக்தியாக மாற முடியாது. கோட்பாடு மற்றும் நடைமுறைக்கும் உள்ள உறவே இதுதான்;. இனவாதத்துக்கு எதிரான நடைமுறை என்பது கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கோட்பாடு தன்னை வெளிபடுத்த முன் நடைமுறை முந்திக் கொள்கின்றது. கோட்பாட்டை முன்வைத்து கீழிருந்து மேலாக ஒரு கட்சியை உருவாக்காத இலங்கை சூழலில், இன்று ஒரு கட்சி நடைமுறை மூலம் கோட்பாட்டை கீழ் இருந்து மேலாக கொண்டு செல்லும் வர்க்க நடைமுறையைக் கொண்டு உருவாகின்றது. நடைமுறை மூலமான மறுகல்வி மறுப்பது வர்க்க ஆய்வு முறையல்ல, வர்க்க அரசியலுமல்ல.
Read more...
|