வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!
வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!
கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!
அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!
என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனஈர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள்.
Read more...
|