Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 16 November 2012
படுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 16 November 2012 11:46
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும் குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

கடந்த பத்தாண்டுகளில் அரசு, புலிகளும் இது போன்ற படுகொலைகள் மூலம், பல நூறு கொலைகளை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இது போன்று பல்வேறு இயக்கங்களும் கூட செய்திருக்கின்றன. இது தான் முரண்பாடுகளை தீர்க்கும் அரசியல் வழிமுறையாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையைக் கூட யார் கொலையாளி என்று தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்ற, மூடிமறைத்த அரசியல் பின்புலத்தில் தான் இவை நடந்து வந்திருக்கின்றது. இதை யார் செய்து இருப்பார்கள் என்பதை காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தி தெரிந்துகொள்ள வேண்டியளவுக்கு வரைமுறையின்றி நடந்து வந்திருக்கின்றது. துயரம் என்னவென்றால், இந்த வழிமுறையை எதிரி பயன்படுத்தி விடுவதுதான். இந்த அரசியல் பின்புலத்தில் இது போன்ற கொலைகள், யார் செய்தது என்ற விடை காண முடியாத சந்தேகங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.

Read more...
Last Updated ( Friday, 16 November 2012 11:49 )