நாம் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்கள், கட்சிகள் எதற்காக!? அதிலும் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபர்களுக்கு, கருத்துக்களும் கட்சிகளும் எதற்கு!? பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் என்ன தான் பயன்? பாசிசத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், மக்களை ஒரு நாளும் அணிதிரட்ட முடியாது. ஒரு வர்க்கத்தின் கட்சி இலங்கையில் இன்னும் உருவாகாமல் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. பாசிசத்தை பகைக்காத வண்ணம் அரசியலை முன்னிறுத்திக் கொள்ளுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, மக்களை பாசிசத்துக்கு அடிபணிய வைக்கின்றனர். அதைத்தான் தங்கள் கருத்துகளாலும் கட்சிகள் மூலமாயும் செய்கின்றனர்.
Read more...
|