புலிகளால் கைது செய்யப்பட செல்வி, மனோகரன், தில்லை , மணியண்ணை
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைத் (சீன சார்பு) தலைமை தாங்கி வழிநடத்தியதுமல்லாமல் தொழிற்சங்கப் போராட்டங்களையும் இலங்கையில் இனங்களுக்கிடையில் சம உரிமைக்காகவும், தமிழ் மக்களிடையே - குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே - புரையோடிப்போய்விட்டிருந்த சாதீய ஒடுக்குமுறைக்கெதிராகவும் நாகலிங்கம் சண்முகதாசன் உட்பட பல இடதுசாரிகள் போராடியிருந்தனர். ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்து இவர்கள் கடைப்பிடித்த தவறான போக்கு தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் குறுந்தேசிய இனவாதிகளின் பலம் ஓங்குவதற்கும், பிற்காலகட்டத்தில் குறுந்தேசிய இனவாதம் பாசிச வடிவம் பெறுவதற்கும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. நவலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார போன்ற சிங்கள இடதுசாரிகளும், தொழிற்சங்கவாதியான எச். என். பெர்னாண்டோ உட்பட பல சிங்கள முற்போக்கு ஜனநாயகவாதிகளும் கூட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பகிரங்கமாகப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் இத்தகைய போராட்டங்கள் அனைத்தையும் பின்தள்ளுமளவுக்கு சிங்களப் பெரும்தேசிய இனவாதமும், தமிழ்க் குறும்தேசிய இனவாதமும் கோர முகத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
Read more...
|